வியாழன், 22 பிப்ரவரி, 2018

வடதமிழ்நாடு மாநாடு 50பேர் மட்டும் பிசுபிசுத்தது

aathi tamil aathi1956@gmail.com

1/11/17
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
*நமது சிறப்பு நிருபர்*
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'வேண்டும் வட தமிழ்நாடு' மாநாடு, 49 வட
தமிழர்களும் 50 ப்ளாஸ்டிக் சேர்களும் கலந்து கொள்ள பிரமாண்டமாய்
சென்னையில் துவங்கியது.
தென் தமிழ்நாட்டான் வட தமிழ்நாட்டானை சுரண்டுகிறான், வட தமிழ்நாடு
பிரிவினையே வட தமிழ்நாட்டானை காக்கும் என தலைவர் இறைவர் உரையை
துவங்கினார்.
அடுத்து வந்த பாண்டியரோ வட தமிழ்நாட்டு பிரிவினையே தென் தமிழ்நாட்டானை
காக்கும் என்று பேசியவுடன் கூட்டம் மெர்சலானது.
வட தமிழ்நாடு வேண்டும் என அகில இந்திய தென்னக ரயில்வே தலைவர் பழையவன்
பேசினார். தென்னக ரயில்வேயில், இவர் ஏன் வட தமிழ்நாடு ரயில்வேயை
கேட்கவில்லை என சிந்திக்காமல் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது.
தம்பி பாரிமுத்து ஜவகர், இந்தியமும், பிறமொழியாளரும் வட தமிழ்நாட்டை
சுரண்டுவதாக சொல்வது பொய் என்றும், தெக்கத்தியான் நாடாரே வட தமிழ்நாட்டை
சுரண்டுவதாகவும், அதற்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி, தமன்னாவுடன் நடிக்கும்
விளம்பரமே சாட்சி என அதிர வைத்தார்.
வன்னியர் பறையர் செத்து செத்து விளையாடுவோம், ஆனால் தமிழ்நாட்டை
பிளப்பதென்றால் ஒன்று கூடுவோம் என்று தம்பி சூசை பார்ப்பனர் சபதம்
எடுத்தார்.
தமிழர்களின் எந்த கருத்துக்கும் எதிர்மறையாய் பதிவு போடும் அமெரிக்க
அண்ணன் சாக்கியமுனி, முதல்முறையாக வட தமிழ்நாடோ தென் தமிழ்நாடோ, வெளங்காம
போனா சரி என பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்தார்.
இறுதியாக வட தமிழ்நாட்டில் எல்லா தெக்கத்தியானும் வோட்டர் ஐடி, ரேசன்
கார்டு எல்லாம் வாங்கி செட்டில் ஆகிவிட்டதால், வட தமிழ்நாட்டை
பிரித்தபின், எல்லா வடக்கத்தியானும் தென் தமிழ்நாட்டுக்கு போய்
முன்னேறுவது என தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட
து..

நகைச்சுவை வன்னியர் பறையர் நாடார் கூட்டியக்கம்  பிரிவினை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக