வியாழன், 22 பிப்ரவரி, 2018

கம்மாளர் ஆசாரி இலக்கியம் சாதி தொழில்

aathi tamil aathi1956@gmail.com

8/11/17
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Perumal Pandiyan உடன்.
ஏர் கலப்பையோ,போர் வாளோ மூத்த குடி கம்மாளர் இல்லாது தமிழர் நாகரீகமும்
பெருமையும் கிடையாது... மூத்தகுடி கம்மாளர் பற்றிய சங்க இலக்கிய வரிகள்
சில...
++++
1. "ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த" (புறநானூறு 353).
2."பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும்
கருங்கைக் கொல்லன் இருப்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ"
(பெரும்பாண். 436-8) .
3. "நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்
எறிபொற் பிதிரின் சிறுபல் காய
வேங்கை வீயுகும்" (நற். 13 : 5-7) ...
4."வன்புல மிறந்த பின்றை மென்றோல்
மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன
கவைத்தான் அலவன்" (பெரும்பாண். 206-8).
5."இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை
.............................................
நல்லரா நடுங்க உரறிக் கொல்லன்
ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தகழும்" (நற். 125: 1-4) .
6. "கருங்கைக் கொல்லனை யிரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே" (புறம். 180: 12-3).
7."எம்முளும் உளனொரு பொருநன் வைகல்
எண்டேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே" (புறம் 87).
8.மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே" (புறம். 206).
9. தொல்காப்பியத்தில் கன்னார் தொழில்.."மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லும் தொழிற்பெயரியல." (எழுத். 345).
10. தொல்காப்பியத்தில் கொல்லர் தொழில்...நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல" (தொல்.எழுத்து. 371) .
11.தொல்காப்பியத்தில் கம்மிய தொழில் ..ஈமும் கம்மும் உருமென் கிளவியும்"
(எழுத்து. 328)..
12."கம்மஞ்செய் மாக்கள்" (நாலடி.393) .
13. ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவக சிந்தாமணியில் கம்மியர்.
"கம்மியரும் ஊர்வர் களிறு" (சீவக.495)
14. சிலப்பதிகாரத்தில் கொல்லர்.''கருங்கைக் கொல்லர்'' (சிலப்.5:29)
+++
@# தமிழ்தேசிய_பாலை_வாணர் கூட்டமைப்பு....

தமிழ்ச்சாதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக