திங்கள், 3 டிசம்பர், 2018

தூத்துக்குடி படுகொலை திட்டமிட்டு குறிவைத்து கொலை tri

aathi1956 aathi1956@gmail.com

மே 26, சனி, பிற்பகல் 12:41
பெறுநர்: நான்

Veeraa VK
# ஸ்டெர்லைட்_போரா
ட்ட_அரசப்படுகொலை
ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தை எப்படி முடக்குவது என்று உலகம் ஒத்திகை பார்த்ததுபோல. இந்தியாவில் முதல்முறையாக மக்கள் போராட்டத்தை எப்படி முடக்குவது என்று ஒத்திகை பார்க்கப்பட்டது நமது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தான். *உளவுத்துறையின்* மொத்த வித்தையும் இதில் இறங்கி இருக்கிறது.
துப்பாக்கிசூட்டில் வாகனத்தில் மேல் நடந்தது படுகொலையின் ஒரு பகுதிதான். ஸ்னீப்பர் ஷாட்டும் மட்டும் இல்லை கைத்துப்பாக்கியால் மிக அருகில் இருந்து சுடப்பட்டு இருக்கிறார்கள், குறிப்பிட்ட 7 பேர் மிக அருகில் இருந்தே சுடப்பட்டிருக்க
ிறார்கள். அவர்கள் *அனைவரும் போராட்டத்தை வழிநடத்தியவர்*. முழக்கங்கள் இட்ட மாணவ சகோதரியின் வாயில் சுட்டு இருக்கிறார்கள். குண்டு துளைக்கும் மறுபுறம் தூரத்தில் இருந்து சுட்டால் பலமடங்கு பெரிதாகவும் அருகில் இருந்து சுட்டால் இருபுறமும் ஒரே அளவும் இருக்கும். மிக அருகில் இருந்து சுடப்பட்டதால் இது திட்டமிட்டபடுகொ
லை, கொலையாளிகள் உளவுத்துறைதான்.
மக்களால் தொடங்கப்பட்ட போராட்டத்தை மிக அதிகமா அரசு வளர அனுமதித்து. பல இடங்களில் அவர்களே ஊக்குவித்து அணைத்து போராட்ட காரர்களையும் ஒரு இடத்திற்கு வர வைத்து. திட்டமிட்ட படியே முன்பே குற்றிக்கப்பட்ட நபர்கள் சுட்டு கொன்று இருக்கிறது இந்த அரசு. இதில் முதல் நாள் மட்டும் இருபத்தி நான்கு நபர்கள் சம்பவ இடத்திலே இறந்து இருக்கிறார்கள். அதற்க்கு பிறகு இறந்தவர்களில் எண்ணிக்கையை சரிவர அறிய முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக நாற்பதை தாண்டி இருக்கும் என்கிறார்கள் அந்த பகுதியில் இருக்கிறவர்கள்.
காவேரி போராட்டம் உச்சகட்டமாக இருந்த நேரத்தில் *சென்னை மீம்ஸ் போன்ற அரச கையாள்கள்* ஸ்டெரிலைட்டை பெரிதாக பேசியது. அமெரிக்காவை சார்ந்த ஹார்வார்ட் இருக்கைக்கு பணம் சேர்த்த குழுவும் காவேரியை பேசக்கூடாது ஸ்டெரிலைட்டை பேசலாம் என்று கட்டளை இட்டது. இவை அனைத்தும் படிநிலைகளே. இவை வெறும் மடைமாற்றம் மட்டும் இல்லை. கொலைத்திட்டமும் பல நாட்களாக இருந்து இருக்கிறது என்பது இப்போதுதான் நமக்கு 100% தெரியவருகிறது.
வாகனத்தில் மேல் நின்று ஒருவர் சுடுகிறார். இன்னொருவர் வேகமாக ஏறி துப்பாக்கியை வாங்கி சுடுகிறார். *அதற்க்கு அவசியம் என்ன?*. காரணம் அவர் யாரையோ கண்டுபிடித்துவிட்டார். அவரை சுடவே துப்பாக்கியை வாங்குகிறார். டார்கெட்டுக்கு அருகில் அடையாளத்திர்ற்கு சிகப்பு நிற ஆடை அணிந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படிதான் தொலைவில் இருந்தும் சரியாக சுட்டனர். வாகனத்துக்குள் இருக்கும் துப்பாக்கிதரர்களுக்கு தகவல் கொடுத்து கொண்டே இருந்திருக்கிறது உளவுத்துறை. இதில் சிலரை பிழையாக சூடு இருக்கலாம் இல்லாவிட்டால் இது ஒரு பொதுவான துப்பாக்கி சூடு என்று சொல்வதற்காக சிலரை வேண்டும் என்ற சுட்டு இருக்கலாம்.
*தமிழரசன் தோழரை* சுடும் பொழுது அங்கே அவரது அருகில் இருந்த தோழர் கூறியது, அவர் நின்று கொண்டிருந்தார் அப்போது விழும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்கும் போது தோழர் கீழே சரிந்து கிடந்தார், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் எதுவும் கேட்கவில்லை திடீரென்று அமைதியாக தான் குண்டு தாக்கியுள்ளது. திட்டமிட்ட சைலென்சர் தாக்குதல். கிட்டத்தட்ட முப்பது பேரை புடிச்சிவச்சி கால், தொடையில சுட்றுக்கானுக போலீஸ்காரங்கள்
இதில் வீட்டில் சொல்லாமல் போராடவந்த நபர்களில் நிலைமைதான் மிகவும் கவலைக்கிடம். அவர்களின் உடல்கள் பிற மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி விபத்து என்று திரித்துவருகிறத
ு காவல்துறை. அவரவர்கள் அவர்களுக்கு தெரிந்த நபர்களை செக் செய்யுங்கள்.. *மறைக்கப்படும் உறவுகள் நமது உறவாகவும் இருக்கலாம்*. அணைத்து காணொளிகளும் புகைப்படமும் கிடைத்த பின் நூறுசதவீதம் கண்டுபிடித்துவிடலாம்.
இன்று ஒரு *இடப்பாடி* இருப்பான் நாளை ஒரு *கால்பாடி* வருவான், இவர்களுக்காகவெல்லாம் சட்டம் வளைந்து கொடுக்குமாயின் சட்டத்தை அவரவர்களே கையிலெடுப்பது என்ற நிலை விரைவில் வரும்.
# தமிழர்_ஆய்வுக்_கூடம்
Tamil Research Institute (Tamilri)
இன்று, 12:23 AM க்கு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக