திங்கள், 3 டிசம்பர், 2018

தமிழகம் வருமானம் இல் 70 சதவீதம் அரசு ஊழியர் சம்பளம் ஜெயக்குமார்

aathi1956 aathi1956@gmail.com

மே 8, செவ்., முற்பகல் 9:56
பெறுநர்: நான்

Palani Deepan
பொதுநல வழக்கு.
இன்று நாளேடுகளில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்களின் அறிவிப்பு ஒன்று முழுப்பக்க அளவில் வெளிவந்திருக்கிறது.
அரசு ஊழியர்களுக்கான ஊதிய விவரங்களைப்பற்றி அந்த அறிவிப்பு வெளிப்படையாகப் பேசுகிறது.
அறிவிப்பின் விவரங்கள்:
தமிழக அரசின் கடந்த ஆண்டின் மொத்த வரி வருவாய் 93,795 கோடி. இதில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தொகையாக ரூ.65,403 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
அதாவது அரசு ஊழியர்கள் 12 இலட்சம், ஓய்வூதியக்காரர்கள் 7.42 இலட்சம் ஆக மொத்தம் 19.42 இலட்சம் குடும்பங்களுக்க
ு மட்டும் அரசின் வருவாயில் 70 விழுக்காடு அதாவது ரூ.65,403 கோடி செலவிடப்படுகிறது.
இவர்களுக்கும் சேர்த்து மீதமுள்ள (ஆறு கோடி இருக்குமா) மக்களுக்கும் அவர்களின் வளர்ச்சிக்காக அரசு செலவிடப்படும் தொகை வெறும் 6 சதவீதம் மட்டுமே...!
இந்த விவரங்களை ஒரு அமைச்சரே வெளிப்படையாக வெளியிட்டுள்ளார். இப்படி ஒரு அறிக்கையைத்தான் நான் நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்படியெனில் பொது மக்கள் இந்த அரசாங்கத்தால் பெறும் பயன் வெறும் 6 விழுக்காடு மட்டுமா...? இவர்கள் உழைத்து ஓட்டுப்போட்டுவிட்டு ஓட்டாண்டிகளாகப் போவதற்கென்றே பிறந்த பாவப்பட்ட ஜென்மங்களா?
இங்கு இதனை கேள்வி கேட்பதற்கும் தட்டிக் கேட்பதற்கும் எந்த நல்ல தலைவனும் சமூக ஆர்வலனும் இல்லையா...?
சரி.
நாமே கேட்போம். இனி அரசு வருவாயில் 30 விழுக்காடு மட்டுமே அரசு ஊழியர்களுக்காக செலவிவடப்பட வேண்டும். அதுதான் மக்கள் நலன் நாடும் அரசின் உன்னத செயல்பாடக இருக்கும். இதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரலாம் என்றிருக்கிறேன்.
ஜேக்டோஜியோ போராட்டம் அரசாங்க வேலை பொருளாதாரம் வரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக