திங்கள், 3 டிசம்பர், 2018

டெல்டா மக்கள் போராட்டம் அடக்க துணைராணுவம் இறங்கியது சாகர்மாலா

aathi1956 aathi1956@gmail.com

ஏப். 30, திங்., முற்பகல் 10:55
பெறுநர்: நான்
டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டம்: கும்பகோணம் வந்த அதிவிரைவுப் படையினர்
By DIN  | Published on : 30th April 2018 07:01 AM  | அ+ அ அ- | 
டெல்டா மாவட்டங்களில் காவிரிக்காக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதன் எதிரொலியாக அதிவிரைவுப் படையினர் கும்பகோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் சாலை, ரயில் மறியல், மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதுதவிர, கதிராமங்கலம், திருவாரூர், நன்னிலம் ஆகிய இடங்களில் ஓஎன்ஜிசி விவகாரம், நெடுவாசலில் ஹைட்டோர கார்பன் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு அறிவிப்பால் டெல்டா பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி டெல்டா மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெறாத நாள்களே இல்லை நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவான அதிவிரைவு படையினர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தனர்.
தஞ்சாவூரில் தங்கியுள்ள இவர்கள் ஞாயிற்றுக்கிழமை திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அந்தந்த உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்களை சந்தித்து, தங்களது பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து விட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கு சென்றனர். தஞ்சாவூரில் ஒரு வார காலத்துக்கு தங்கியிருக்கும் இந்த அதிவிரைவு படையினர் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளனர்.
இதுகுறித்து கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். கணேசமூர்த்தி கூறியது:
மத்திய பாதுகாப்பு படையின் கோவையில் உள்ள 105வது பிரிவின் அதிவிரைவு படையின் உதவி கமாண்டர் வி.எப்.கிளாரன்ஸ் தலைமையில் வந்துள்ள 40 வீரர்கள், கலவரம் ஏற்படக்கூடிய பகுதிகள் உள்ளனவா எனக் கேட்டறிந்தனர் என்றார்.

30 ஏப்ரல் 2018    
தினமணி 
----------------
: 23:00 (29/04/2018)
'போராட்டங்களை ஒடுக்கவா அதிரடிப் படை குவிப்பு?’ - பதற்றத்தில் டெல்டா மாவட்டங்கள்
காவிரி பிரச்னையில் டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதன் எதிரொலியாக, மத்திய அதிவிரைவுப் படையினர் தமிழக அரசிற்குத் தகவல் தெரிவிக்காமலேயே அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே அமல்படுத்த கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள், காவிரி உரிமை மீட்பு குழு, விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் காவிரியில் தமிழகத்துக்குரிய உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என பிரசார பயணம், பேரணி போன்றவையும் நாள்தோறும் டெல்டா மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், டெல்டா மாவட்டங்களில் கதிராமங்கலம், திருவாரூர், நன்னிலம்,ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. சார்பில் கச்சா எண்ணெய் எடுப்பதும், நெடுவாசலில் ஹைட்டோரகார்பன் எடுக்கும் முயற்சிக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல், கடலூர் தொடங்கி கடற்கரையோர டெல்டா பகுதியில் 110 இடங்களில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைக்கப்போவதாக மத்திய அரசின் அறிவித்திருப்பதற்கும் டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. கதிராமங்கலத்தில் தொடர்ந்து 346 நாள்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இப்படி டெல்டா மாவட்ட மக்கள் போராட்டங்கள் நடைபெறுவதன் மூலம் நிம்மதியே இல்லாமல் வாழ்ந்து வருவதுடன், உரிமையோடு சேர்த்து நம் வளமும் பறிபோகிறதே என நினைத்து கையறு நிலையில் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவான அதிவிரைவுப் படையினர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சில தினங்களுக்கு முன் வருகை தந்தனர். தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் தங்கியுள்ள இந்த வீரர்கள், நேற்று திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளுக்கு வந்து, எப்படி இந்த ஊர்களுக்கு வந்து செல்வது, அந்தந்த உட்கோட்ட காவல் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகத்து வந்து டி.எஸ்.பிக்களை சந்தித்து, தங்களது பகுதியில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா?, அது எந்த மாதிரியான பிரச்னை?, மதக் கலவரம் உண்டா, ஆண்டுதோறும் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என கேட்டுவிட்டு மீண்டும் தஞ்சாவூர் சென்று தங்கியுள்ளதாகத் தெரிகிறது. தஞ்சாவூரில் ஒரு வாரம் வரை தங்கியிருக்கும் இந்த அதிவிரைவு படையினர் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், ''மத்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவான கோவையில் உள்ள 105 பிரிவின் அதிவிரைவு படையின் உதவி கமாண்டர் வி.எப். கிளாரன்ஸ் தலைமையில் 40 வீரர்கள் கும்பகோணத்துக்கு வந்தனர். இந்தப் பகுதியில் ஏதேனும் கலவரம் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் உள்ளதா என கேட்டனர். இங்கு அதுபோன்ற பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றதும். சுமார் ஒரு மணி நேரம் இங்கிருந்து விட்டு பின்னர், தஞ்சாவூருக்குப் புறப்பட்டுச் சென்றனர்’’ என்கிறார்கள். போரட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாகவும், இதற்கெல்லாம் யாரும் அஞ்சப்போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகிறார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் கே.குணசீலன்

மண்ணழிப்பு காவிரி காவேரி ராணுவமயமாக்கல் ஹைட்ரோகார்பன் திட்டம் ஹிந்தியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக