திங்கள், 3 டிசம்பர், 2018

புலம்பெயர் ஈழத்தமிழர் போர் அழிவை மீட்டனர்

aathi1956 aathi1956@gmail.com

மே 1, செவ்., பிற்பகல் 1:13
பெறுநர்: நான்
ரகு வசந்தன்
இலங்கையில் இவ்வளவு யுத்தம் நடந்தது
ஆனால் இங்கு யாரவது வெளிநாட்டுக்காரர் வந்து பார்த்தால் உண்மையில் இங்கு 30 வருடம் யுத்தம் நடந்ததா என்று நம்ப மாட்டார்கள் அவ்வளவுக்கு இங்கு ஓரளவுக்கு மீள்நிர்மாணம் அடைந்து விட்டது எமது ஊர்கள்
இதற்கு முக்கிய காரணம் புலம்பெயர் வெளிநாட்டு தமிழர்கள் அனுப்பிய பணமே.....
எப்படி என்றால் நான் இங்கு ஈழத்தில் உற்பத்தி என்று ஒன்றும் கிடையாது வெளிநாட்டு தமிழர்களின் முதலீடுகளினாலேய
ே பெரும்பாலான ஆட்கள் வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர்.
உதாரணமாக ஒரு புலம்பெயர் தமிழர் இங்கு ஒரு வீடு கட்டும்போது மேசனில் இருந்து தச்சன் கூலியாட்கள் வரை குறைந்தது மூன்று மாதங்களாவது வேலைக்கு பிரச்சனை இருக்காது
அதே மாதிரி கோவில்கள் இன்னும் பிற வேலைகள் என ஏராளமான ஆட்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கின்றது
உண்மையை சொல்லப்போனால் நாங்கள் இவ்வளவு காசு உழைத்து அக்காகளுக்கு திருமணம் வரை செய்து வைத்ததிற்கு எங்களுக்கு தனிப்பட்ட முறையிலேயே சில வெளிநாட்டுக்காரர் வழங்கிய வேலையே காரணம்
அடுத்தது பொது நிறுவனங்களுக்கு அவர்களால் வழங்கப்படும் உதவிகள் முக்கியமானது நானறிந்து எனது பள்ளிக்கூடத்துக்கு அரசாங்கம் கொடுத்த காசை விட புலம்பெயர் பழைய மாணவர்கள் வழங்கிய உதவிகளே அதிகம்
இப்போது கூட ஒரு தனி ஆள் 300 அடி மதில் சுவர் கட்டி குடுத்திருக்குறார். இப்படி ஏராளமான உதவிகள்
# அடுத்து முக்கியமானது ஈழத்ததமிழர்களின் முப்பது வருட போராட்டம் இவ்வளவு காலமும் தாக்கு பிடித்ததற்கு முக்கியமான காரணம் அவர்களே ஒரு நாட்டினை எதிர்த்து 30 வருடம் தாக்கு பிடிப்பதென்பது சுலபமான காரியம் இல்லை இலங்கை அரசாங்கம் கடைசி ஆண்டு யுத்தத்திற்கு 20000 ஆயிரம் கோடி செலவானது என்று கூறினது அப்போ அதனை எதிர் கொள்ள எவ்வளவு செலவாகியிருக்கும்.
அவளவு பணமும் இங்க ஒடியலும் புகையிலையும் விற்று பெறப்பட்டது இல்லை எல்லாம் அவர்களால் வழங்கப்பட்டதே
இது எல்லாவற்றையும் விட முக்கியம் அவர்கள் தங்களின் குடும்பத்திற்காக செய்வதே அக்கா கல்யாணம் தங்கச்சிக்கு கல்யாணம் கட்டி வைக்கணும் என்பதற்காகவே எவ்வளவோ பேர் தங்களின் இளமைமக்காலங்களை இழந்து தனது குடும்பத்திற்காக உழைக்கின்றனர்
Maki Siva
குறிப்பாக ஈழத்தமிழர்களின் புலம்பெயருதல் அடைக்கலம் நாடி அல்லது பொருளாதார பின்னணியை கொண்டு ஓடிக்கொண்டிருப்பது ஐரோப்பிய பனியையும் அரேபிய வெயிலையும் ஆஸ்திரேலிய கொடும் குளிரையும் தங்கள் உடலில் தாங்கி தங்கள் குடும்பத்துக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உலகின் இரண்டாவது மிகப்பெரிய அமைப்பாக விளங்கியதற்கு புலம்பெயர் ஈழத்தவர்களின் ஒவ்வொரு துளி வியர்வையும் உண்டு
இன்றும் தெரிந்தும் தெரியாமலும் இடிந்துபோன எமது நகரங்களை இவர்களே கட்டியெழுப்புகிறார்கள்
மீள் நிர்மாணம் துரித கதியில் நிகழ புலம்பெயர் ஈழத்தவர்களின் பங்கு அளப்பரியது
வீடு சொந்தம் சுற்றம் நட்புகள் குடும்பத்தை பிரிந்து தேசத்துக்கு மீளவும் உதவும் எம் மக்கள் போற்றப்படவேண்டியவர்களே.

ஈழம் பொருளாதாரம் புலத்தமிழர் பெருமை இனப்பற்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக