திங்கள், 10 பிப்ரவரி, 2020

வேந்தர் என்பதும் தொழிலே மன்னர் அரசர் நால்வர்ணம் வர்ணாசிரமம்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 11 ஆக., 2018, பிற்பகல் 6:26
பெறுநர்: எனக்கு
Suresh N, ராஜா முத்துராஜா அம்பலக்காரன் மற்றும் 12 பேருடன் இருக்கிறார்.
1 வேந்து தொழில், 2.வேந்துறு தொழில், 3.வேந்துவிடு தொழில்
வேந்து தொழில், வேந்துறு தொழில், வேந்துவிடு தொழில் ஆகிய மூன்று சொல்லாட்சிகள் சங்கப்பாடல்களில் காணப்பெறுகின்றன. அம்மூன்றும் வினை அடிப்படையில் நுண்ணிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவ்வேறுபாடுகளைத் தொல்காப்பியம், சங்கப்பாடல்கள் வழிக் கண்டறிதல் அவசியமாகும்.
தொல்காப்பியத்தில்…
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வேந்தற்குரிய தொழில்கள் தொடர்பான சொல்லாட்சிகளைக் கொண்டிலங்கும் நூற்பாக்கள் உள்ளன. அந்நூற்பாக்களில் வரும் வேந்தன் செய்யும், செய்விக்கும் தொழில், தொடர்பான சொல்லாட்சிகளை வேந்து தொழில், வேந்துறு தொழில், #வேந்துவிடு தொழில் எனப் பகுத்து விளக்க இயலும்.
1.வேந்துதொழில்
வேந்து தொழில் என்பதைச் சுட்டும் நூற்பா அகத்திணையியலில் பிரிவை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
அந்நூற்பா வருமாறு:
"வேந்துவினை இயற்கை வேந்தன் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்திடன் உடைத்தே" (தொல்.பொருள்.34)
இந்நூற்பாவிற்கு இளம்பூரணர், வேந்தனது வினை இயற்கையாகிய தூது வேந்தனை ஒழிந்த வணிகருக்கும் வேளாளருக்கும் ஆகுமிடன் உடைத்து என்றும்,
வேந்தனது வினை என்பது வேந்தற்குரிய வினை என்றும் சுட்டியுள்ளார். வேந்து வினை என்பதில், வினை என்பது செயலைக் குறிக்கும். அச்செயல் ஓதல், வேட்டல், படைவழங்கல், குடியோம்பல் என்பதாகும். ஆதலின், வேந்து வினையை வேந்து தொழில் என்று சுட்டுவதே மரபாக உள்ளது.
2.வேந்துறு தொழில்,
தூது, காவல் காரணமாகப் பிரியும் காலத்தில் வேந்துறு தொழிலானது நிகழும் என்பது இளம்பூரணர் கருத்து. அவர்,
"வேந்துறு தொழிலே யாண்டினது அகமே" (தொல்.பொருள்.187)
என்னும் நூற்பாவிற்கு வேந்தற்குற்றவழி, தூது காவல் என அவ்வழிப்பிரிவிற்கும் ஆண்டினது அகமே காலம் என்றவாறு என்று பொருள் கூறுவதின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் போர், தூது, நாடுகாவல் ஆகிய பிரிவுகள் ஓர் ஆண்டுக்குட்பட்ட
வை என்பர் தமிழண்ணல். அப்பிரிவின் போது மட்டும் வேந்தனுக்கு உதவும் வினை நிகழும்.
3.வேந்துவிடு தொழில்
வேந்துவிடு தொழிலைச் சுட்டும் நூற்பாக்கள் இரண்டு.
அவை வருமாறு:
"வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்" (தொல். பொருள்.60)
"வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே"
(தொல். பொருள்.626)
இவை, வேந்தனால் ஏவப்பட்ட தொழில் காரணமாகக் காவலர்கள் செல்லும் செலவைக் குறிப்பதாக அமைந்துள்ளன. இளம்பூரணர், தொழிலினானே படையுங் கண்ணியும் வேளாண்மாந்தருக்கும் உளதாகுமென்றவாறு என்று கூறுவர்.
இவற்றால்
1.வேந்து வினை என்பது வேந்தற்கு உரிய வினையையும்,
2.வேந்துறு தொழில் என்பது தூது காவல் காரணமாக வேந்தற்குற்றுழி உதவும் வினையையும்,
3.வேந்துவிடு தொழில் என்பது வேந்தரால் ஏவப்பட்ட காவலருக்குரிய தொழிலையும் குறிக்கும் என்பது பெறப்படும்.
சங்கப்பாடல்களில்…
சங்கப்பாடல்களில் 1.வேந்து தொழில், 2.வேந்துறு தொழில், 3.வேந்துவிடு தொழில் ஆகிய மூன்றும் குறிக்கப்பெற்றுள்ளன.
அவை ஆறு இடங்களில் அமைந்துள்ளன. அவற்றிற்கான விளக்கங்கள் வருமாறு:
• வேந்தற்குரிய வினை
• வேந்தற்குற்றுழி உதவும் வினை
• வேந்தனால் ஏவப்பட்ட காவலர் வினை
1.வேந்தற்குரிய வினை
வேந்துதொழில் என்னும் சொல்லாட்சி சங்கப்பாடல்களில் மூன்று இடங்களில் காணப்பெறுகிறது. அதற்கான பாடலடிகள் வருமாறு:
மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே
(ஐங். 443:1)
ஏந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டென
(ஐங். 498:2)
வேந்துதொழி லயரு மருந்தலைச் சுற்றமொடு
(புறம்.498:7)
இம்மூன்று பாடலடிகளும் வேந்தனது தொழிலையே குறித்து நிற்கின்றன. இவற்றிற்கு உரை எழுதிய பொ.வே.சோமசுந்தரனார் (2007), ஔவை சு. துரைசாமிப்பிள்ள
ை (2008) ஆகியோர், நம் மன்னவன் தான் மேற்கொண்டுள்ள இப்போர்த் தொழிலைக் கைவிடுவனாயின் என்பர். இப்பொருண்மை மன்னன் மேற்கொள்ளும் வினையைக் குறித்தது.
2.வேந்தற்குற்றுழி உதவும் வினை,
அகநானூறு 254ஆம் பாடலில் மட்டும் வேந்துறு தொழில் குறிக்கப்பெற்று
ள்ளது. அப்பாடலடி வருமாறு:
"வேந்துறு தொழிலொடு வேறுபுலத்து அல்கி"
(அகம். 254:10)
இவ்வடிக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு வேங்கடாச்சலம் பிள்ளை ஆகியோர் வேந்தற்கு உற்றுழி உதவும் வினையினால் இவ்வேற்று நாட்டின்கண் வந்து தங்கி என்று பொருள் குறிக்கின்றனர்.
இவ்வுரையைத் தழுவியே பின்வந்த உரைகாரரும் உரைத்துள்ளனர். இவற்றுள் உற்றுழி என்பதற்குத் துன்புறு காலத்தில் இடையூறு, காவல், சேதம், தீமை, துன்பம் விளைவித்தல், வெட்டல் முதலிய காரணங்களினால் உடம்பில் வரும் காயம், அடைந்த காலம், ஊறுபாடுற்ற காலம் என்பதாகத் தமிழ் அகராதியும், தமிழ்ச்சொல் அகராதியும் பொருள் குறிக்கின்றன.
இதனடிப்படையில் வேந்தற்கு உற்றுழி என்பதற்கு, வேந்தனுக்குத் துன்பம் நிகழும் கலத்தில் உதவக்கூடிய பிறரது வினையைக் குறிக்கும் எனலாம்.
3.வேந்தனால் ஏவப்பட்ட காவலர் வினை,
சங்கப்பாடல்களில் குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் இரு இடங்களில் வேந்துவிடு தொழில் காணப்பெறுகின்றது.
வேந்துவிடு தொழிலொடு செலினும் (குறுந். 242:2)
வேந்துவிடு தொழிலொடு சென்றனன் (புறம். 319:13)
என்ற இவ்விரு பாடலடிகளும் வேந்தனால் ஏவப்பட்ட தொழிலைக் குறித்தே நிற்கின்றன. இதனை, வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொண்டு வேற்றூருக்குச் சென்றாலும் (குறுந்.242) என்று உ.வே.சா. சுட்டியுள்ளார்.
மேலும் பகை மேற்சென்றனன் என உ.வே.சா.வும், ஔவை சு.துரைசாமிப்பிள்ளையும் (புறம்.319) சுட்டியுள்ளனர். இப்பொருண்மைகளும் வேந்தனால் ஏவப்பட்ட தொழிலுக்குக் காவலர் செல்வதைக் குறித்து நிற்கின்றன என்பதை அறியலாம்.
கருத்தியல்...
மேற்கண்ட தொல்காப்பியம், சங்கப்பாடல் வழி கருத்துகளைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்திக் காட்ட இயலும்.
1. வேந்துதொழில்
வேந்தற்குரிய வினை (தொல்.பொருள்.34)
வேந்தன் தான் மேற்கொண்டுள்ள வினை (ஐங். 443:5, 498:2)
அரசன் தனக்குரிய அரசியல் தொழில் (புறம். 285:7)
2. வேந்துறு தொழில்
தூது, காவல் காரணமாக வேந்தற்குற்றுழி நிகழும் வினை (தொல்.பொருள்.187)
வேந்தற்குற்றுழி உதவும் வினை (அகம். 254:10)
3. வேந்துவிடு தொழில்
வேந்தரால் ஏவப்பட்ட வினை (தொல்.பொருள். 60, 626)
வேந்தரால் ஏவப்பட்ட தொழில் (குறுந். 242:2)
வேந்தரால் ஏவப்பட்ட தொழில் (புறம். 319:13)
இவ்வட்டவணைவழி 1.வேந்து தொழில், 2.வேந்துறு தொழில், 3.வேந்துவிடு தொழில் என்பவற்றிற்கான நுண்ணிய வேறுபாடுகளை அறியமுடியும். வேந்து, வேந்துறு, வேந்துவிடு ஆகியன ஒரே பொருண்மையைத் தருவனபோல் அமைந்தாலும், வெவ்வேறு பொருண்மைகளையே கொண்டிலங்குகின்றன.
1. வேந்து தொழில் என்பது வேந்தனே மேற்கொள்ளும் தொழிலைக் குறிப்பது.
2. வேந்துறு தொழில் என்பது போர், தூது, நாடுகாவல் காரணமாக மேற்கொள்ளும் தொழிலைச் சுட்டுவது.
3.வேந்துவிடு தொழில் என்பது வேந்தரால் ஏவப்பட்ட போர்த்தொழிலைக் கொள்ளும் காவலருக்குரியது.
++++
++++
இதன் வழி,
ஐயன் பாவணர் கள்ளருக்கான மேற்கோளாக கூறியுள்ள தொல்காப்பிய செய்யுள் "வேந்துவிடு தொழில்" என்பதே என்பதை கவணத்தில் கொள்ளவேண்டும்....
வேந்தரால் ஏவப்படும் பணியாளர் அல்லது காட்டுப்படை மறவர் என்பதே இதன் பொருள்...
++++
இவன்,
# சிவன்_படவன்_அகமுடையார் ..
# வெட்டு_மாவலி_வாணாதிராயன் ..
1 ஆகஸ்ட், AM 10:42

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக