திங்கள், 10 பிப்ரவரி, 2020

தொப்புள்கொடி வசம்பு உடன் தாயத்து ஸ்டெம்செல் மருத்துவம்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 7 ஆக., 2018, பிற்பகல் 4:47
பெறுநர்: எனக்கு
Pasumai Shahul

40 வயதான எனது நண்பரின் இடுப்பில் பலகாலமாக இருந்த தாயத்து இது.
நண்பரை அவர் அம்மா சுகபிரசவமாக வீட்டில் பிரசவித்ததும் விழுந்து காய்ந்துபோன அவரின் தொப்புள் கொடுயில் ஒரு சிறு பாகத்தை வசம்புடன் சேர்த்து தங்கத்தில் தாயத்து உருவாக்கி குழந்தையின் இடுப்பில் கட்டியிருக்கிறார்கள்.
இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம் தொப்புள் கொடியை பாதுகாத்தால் அதிலுள்ள ஸ்டெம் செல்கள் மூலம் அவரின் எந்த நோயையும் குணப்படுத்த முடியும் என்கிறது.
எந்த விஞ்ஞான அறிவும் இல்லாத அந்த தாய் தன் குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாத்து வைத்திருக்கிறாரே..? இதுதான் நம் பாரம்பரிய அறிவு.
நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த ஒவ்வொரு வழிமுறைக்கு பின்னாலும் ஒர் அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது.
இன்று வீட்டில் சுகப்பிரசவம் தவறென்று கூப்பாடு போடும் நவீனமருத்துவம் நாளை சுகப்பிரசவம்தான் சிறந்தது என்று ஒத்துக்கொள்ளும் காலம் வரும்...!
3 மணி நேரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக