திங்கள், 10 பிப்ரவரி, 2020

நாவிதர் மருத்துவர் இசைக்கலைஞர் கொங்கு பார்ப்பனர்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 3:25
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# பண்டிதர்-மருத்துவர்-நாவிதர்-மங்கலர்....
# தமிழ் மன்னர் ஆட்சிகளில் உயர்நிலையில் வாழ்ந்த மருத்துவர்கள் (நாவிதர்)...
# சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து அம்பட்டன் உத்தமசோழனான இராஜசோழ பிரயோகத்தரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் இவ்வூர்ச் சல்லியக் கிரியை' என்று கி.பி.1016-ஆம் ஆண்டைச் சேர்ந்த திருவிசலூர்க் கல்வெட்டு (தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 23 ஏ.ஆர்.350 ப.241) வைத்திய குலத்தாருக்கு வழங்கப்பட்ட நிலத்தைக் குறிப்பிடுகிறது.
# பிரயோகத்தரையன் என்றால்
# அறுவைச் சிகிச்சை நிபுணன் என்று பொருள். # மங்கலம் என்ற பெயரில் வைத்திய குலத்தாரும் நிலம் பெற்றிருப்பதை இது காட்டுகிறது. மேலும் #மங்கலியன் (பிங்கலநிகண்டு-804), # மங்கலி (அபிதான மணிமாலை-336) என்ற பெயர்கள் இவர்களுக்குரியன என நிகண்டுகள் குறிக்கின்றன. # மங்கலச் சமூகம் என்ற பெயர் இன்றும் இவர்களைக் குறித்து நிற்கிறது.
இவற்றைக் காண, பல்லவர் காலம் முதல் பிற்காலப் பாண்டியர் காலம் வரை ஆயுர்வேதக் கலையும், வடநூற் கலையும், இசைக் கலையும் கற்றுப் படைக்கலத் தொழிலும், அமைச்சர் பணியும் புரிந்தவர்களாக வைத்திய குலத்தார் இருந்தது தெரிகிறது.
# இன்றும் இக் குலத்தார் ( பண்டிதர், மருத்துவர், நாவிதர், மங்கலர் ) இசையிலும் மருத்துவத்திலும் திறன் மிக்கவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. (சுதந்திரத்திற்
காக மேடை நாடகங்கள் மூலம் எழுச்சியூட்டிய தியாகி.விசுவநாத தாஸ் ஒரு மருத்துவ சமுகத்தவர்)
# கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பிற்காலப் பாண்டியப் பேரரசுக்குப் பின் # விஜயநகரப் பேரரசே தமிழகத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல் நிலைபெற்றது என்பது கருதத்தக்கது.
# அதன் பின்னர் இச்சமூகம் குறித்து உயர்வான பதிவுகள் இல்லை. கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை மதிப்புடன் நோக்கப்பட்ட ஒரு சமூகம் அடுத்த ஆட்சிக்காலத்தே தாழ்ந்ததென வீழ்த்தப்பட்டதற்கான சமூக / அரசியல் காரணங்கள் தனியே ஆராயத் தக்கது.
# நன்றி ... # யுகபாரதி

பேராசிரியர்.தா.மணி
என் நினைவு தெரிந்து
எங்களூரில்,அம்பட்டர் எனப்படும் நாவிதர் குலத்தவரே மருத்துவர்களாகத் திகழ்ந்தனர்.
சிகைதிருத்த வரும்பொழுது,மரு
ந்துப்பெட்டியுடனே வருவர்.
தேவையான சூரணங்களைக்கொடு
த்துச்செல்வர்.
நாடி பிடித்து
மருத்துவம் பார்ப்பதில்
வல்லவர்.இவர் சமூகப்
பெண்களே மகப்பேற்று
நிபுணர்களாவர்.வேலை
நேரம் போக மற்ற நேரங்களில் மூலிகைகளைத்தேடிப்
பக்குவம் செய்வர்.
வீட்டு நிகழ்வுகள் அனைத்திலும் இவர்களுக்கு முக்கிய
இடமுண்டு.
நல்ல பதிவு
பாராட்டுக்கள்!
பிரயோகத்தரையன்-புதிய
தகவல்.

பாண்டிய ராசன் சட்டத்தரணி
ஒரு மிகச் சிறந்த மருத்துவச் சமுதாயத்தின் வரலாற்றைப் படிக்கையில் கண் கலங்குகிறது...
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:01 மணிக்கு

பேராசிரியர்.தா.மணி
பழந் தமிழர் கலை,அறிவியல் தொடர்பான எழுத்துக்கள்(நூ
ல்கள்,ஒலைச்சுவடிகள்)இருந்திருக
்கவேண்டும்.
கட்டுமானம்,சிற்பம் மற்றும்
பிற நுண்கலைகள் பற்றிய
நூல்கள் எதுவுமே இல்லையே!எப்படி?
(வடமொழியில் பெயர்த்துவிட்டு மூலங்களை அழித்துவிட்டதாக
,பரிதிமாற்கலைஞர
ே எழுதியுள்ளாரே.)
இலக்கிய,இலக்கண
தொன்னூல்கள் தவிர
எதுவுமே இல்லாதது
நமது இனத்திற்கு நேர்ந்த
பேரவலந்தானே?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:15 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
சென்னை திருவான்மியூரில் உள்ள "தி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஏஷியன் ஸ்டடீஸ்" என்ற ஆய்வு நிறுவனம் ஒன்று தமிழகத்தில் இலட்சக்கணக்கான தமிழ் ஓலைச் சுவடிகள் இன்னமும் படியெடுக்காமல் இருப்பதாகவும், அவற்றில் இலக்கியங்கள், மருத்துவ நூல்கள்,நடன நாட்டிய இலக்கண நூல்கள், கட்டிடக் கலை நூற்கள் இருக்கின்றனவாம்...உ.வே.சாமிநாத
ய்யருக்குப் பிறகு இந்த திராவிட ஆட்சிகள் எவையும் இந்த ஓலைச் சுவடிகளை படியெடுக்க முயற்சிக்கவேயில்லை
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:24 மணிக்கு

பேராசிரியர்.தா.மணி
தமிழில் சுவடிகள்
உள்ளனவா?
வடமொழியிலா?
தஞ்சை சரசுவதி மகாலில்
நிறைய வடமொழிச் சுவடிகள் இருக்கிற்தாம்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:34 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தமிழும்... சரஸ்வதி மகாலில் மட்டுமல்ல...பல இடங்களில் என்கிறது அந்நிறுவனம்... ஒரு நாள் நேரில் சென்று பார்க்க வேண்டும்
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · செவ்வாய் அன்று PM 10:36 மணிக்கு

பேராசிரியர்.தா.மணி
புதுகை மாவட்டம் முழுதும்
ஓலைச்சுவடிகளைச் சேகரிதேன்.எல்லாம் நிலக்கணக்கு,சொத
்துரிமை.புராணங்க்களாகவே
இருந்தன.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:39 மணிக்குு

பாரத் இரமேஷ்
பிரிவுகளை ஆராய்ந்தாலே பல உண்மைகள் வெளிப்படும் .1 கொங்குநாவிநதர் (கொங்கு மண்டலம் ,சென்னிமலையில் கொடியேற்றுதல் ,சக்கரக்கட்டி இல்லாத திருமணம் இல்லை ,மங்கல வாழ்த்து பாடமல் எந்த திருமணமும் நடப்பது இல்லை)
1 · பிடித்திருக்கிறது ·

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2016/02/blog-post_10.html?m=0
பழந்தமிழன் செய்த அறுவை சிகிச்சைகள்

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2018/02/blog-post_544.html?m=0
ஓலைச்சுவடி திருடிய பிரெஞ்சு வேதியியல் அறிவியலாளர் மருத்துவம் பாதரசம் புற்றுநோய்

பாரத் இரமேஷ்
இமயம் வரை படையெடுத்து வாதாபி கணபதிக்கு இமயமலையில் இருந்து கல் கொண்டு வந்த கடாரம் கொண்டானின் போர் படைத்தளபதி மருத்துவ குலம் .திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் ஒரு மருத்துவர்.

பாண்டிய ராசன் சட்டத்தரணி
ஆமாம்...இவரை அந்தனர். என்பார்கள்... அதாவது மருத்துவர்களுக்கும் அப்போது அந்தனர் பட்டம் இருந்திருக்க வேண்டும்... அல்லது அந்தனரின் இன்னொரு பிரிவாக மருத்துவர்கள் இருந்திருக்க வேண்டும்... அப்போது வர்ணாசிரம சாதிப் படிநிலை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது

ஓம் நமசிவாய
பண்டாரத்தார் என்பவர்கள் யார் என பதிவிடவும் .
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:58 மணிக்கு
பாரத் இரமேஷ்
பண்டாரம் என்பவர் கொங்கு மண்டலத்தை பொருத்தவரை திருமணத்திற்கு சமையல் செய்பவரைத்தான் குறிக்கும்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · செவ்வாய் அன்று PM 11:01 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
பண்டாரத்தார்--உவச்சர்... தமிழ் நாடு பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் உள்ளது...பூசகர் சமுகம்...சோழர் கால பள்ளி ஆசிரியர்கள் இவர்களே...இரு நாட்களுக்கு முன்பு பதிவுகள் போட்டேனே!

பாரத் இரமேஷ்
2சோழிய நாவிதர் (கரூர் ,திண்டுக்கல் திருச்சி தேனி)

முரு. சீமான் இராசேசு
எங்கள் அப்பாவின் வழி அம்மாவும் இன்னமும் மருத்துவச்சி என்ற பெயருடன் தான் எங்கள் ஊரில் இருக்கிறார் நான் மருத்துவ குளத்தில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன் ஐம்,(மருத்துவர், நாவிதர், பண்டிதர், மங்களர்,) பட்டங்களை பெற்றதால் அம்பட்டன் என்று அழைக்கப்பட்டார் என்றும் எங்க தாத்தா கூறுவார் எனது தாத்தாவின் பெயர் மாணிக்கம் பண்டிதர் எனது தெருவின் பெயர் மாணிக்க பண்டிதர் திரு நான் வசிக்கும் நகரத்தின் பெயர் மருத்துவர் காலனி பெருமிதம்

பிராமணர் ஆமாத்தியர் ஆமாத்ய சதுர்வேதி மங்கலம் தமிழ்ச்சாதி தொடர்பு அறுவைசிகிச்சை நாவிதர்
 அம்பட்டர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக