ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

வேளிர் வடக்கு பூர்வீகம் இலக்கியம் தடவு அகத்தியர் குடியேற்றம்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 5 ஜூன், 2018, முற்பகல் 10:01
பெறுநர்: நான்
அழகன் தமிழன்
தமிழருக்கு வடக்கிருந்து மூலம் காட்ட எண்ணுவோராகிய ஆரியர்,வந்தேறி,சிலப் புராண பாசமுள்ள தமிழர் ஆகியோருக்கு வசதியாய் போய்விட்ட இரண்டு தரவுகள்:
1) நச்சினார்க்கினியார் தொல்காப்பிய உரையில் கூறியுள்ளதாவது...... வேளிர்,அரசர் ஆகியோரை அகத்தியர் துவராபதியினின்று கொண்டு வந்து காடு கெடுத்து நாடாக்கினார் என்பதாகும்.
--------------------------------*-------------------------------
நச்சினார்க்கினியர், "அகத்தியனார்...
...........துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கி" எனத் தொல்காப்பியப் பாயிரவுரையிலும், "மலைய மாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழ
ை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்" என அகத்திணை யியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.
-----------------------------------*-------------------------------
2)புறம் 201 இல் இருங்கோவேளை விளிக்கும் கபிலர்,அவன் வடக்கிலுள்ள முனிவனின் வேள்வியில் தோன்றி,துவரை நகரை ஆண்ட வேளிரின் 49 வது தலைமுறையினன் என்றது.....
---------------------------------*--------------------------------
"நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்க னுடைமையிற் பாண்கட னாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்"
------------------------------*---------------------------------
கடைக்கழக காலத்திலேயும்,அதன் பின்பும் ஆரியம் என்னும் கறையான் தமிழை ,ஆரியப் பிராமணர் வாயிலாகப் பீடித்து அரிக்கத் தொடங்கி விட்டதை இவற்றின் வாயிலாக அறிய முடிவதோடு குமரிக் கண்டத்தின் உண்மை வெளிவரும் வரை இந்நிலை நீடிக்கும் என்பதும் கவலைக்குரியதாகும்.
3 ஜூன், 11:47 AM ·

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_288.html
வேளிர் வன்னியர் நெருப்பு திரிபு வடபால் முனிவர் தடவு கற்பனை கபிலர் ஓமகுண்டம் நெருப்பிலிருந்
fbtamildata.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 5 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_433.html?m=1
தடவு வேள்விக்குண்டம் இல்லை வேள்விற்குன்றம் வன்னியர் வடபால் முனிவர் வேளிர்
fbtamildata.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 4 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_703.html
மைசூர் ஹஸன் ஹசன் துவரை தமிழ் பகுதி வேளிர் வன்னியர் ஹொய்சளர்
fbtamildata.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 3 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_106.html
கண்ணன் தமிழர் துவாரகா துவரை அகத்தியர் வடபால் முனிவர் வேளிர் சிந்துசமவெளி
fbtamildata.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக