ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

வைகோ கருணாநிதி மீது கொலைப்பழி மதிமுக பிளவு சோனியா காலைநக்கி பேட்டி

aathi1956 aathi1956@gmail.com


இணைப்புகள்
வெள்., 15 ஜூன், 2018, பிற்பகல் 4:12
பெறுநர்: நான்

Posted 27 Dec 2006 
வைகோ விவரிக்கும் ‘கிடுகிடு’ ஆபரேஷன்
‘‘என் கட்சியையும் உயிரையும் காப்பாற்றினார் சோனியா!’

p42.jpg
வைகோவை தடா வில் கைது செய்த போதுகூட இவ்வளவு பரபரப்பாக இருந்த தில்லை, ம.தி.மு.க&வின் தலைமை அலுவலக மான தாயகம். கட்சிக்குள் போர்க்கொடி தூக்கிய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் 25&ம் தேதியன்று தாயகத்தைக் கைப்பற்றப் போவதாக செய்திகள் பரவ, அன்றைய தினமே அனைத்துக் குழு கூட் டத்தையும் கூட்டினார் வைகோ. இதனால் தகித்துக்கொண்டிருந்தது தாயகம்.
சரியாக மாலை ஐந்து மணிக்குக் கட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வந்த வைகோவால் தனது காருக்குள் ஏறமுடியாத அளவுக்குத் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ‘முக்கியமான காரியமா ஏர்போர்ட்டுக்குப் போறேன். கட்சி ஆபீஸை யாரும் கைப்பத்த முடியாது. நீங்க இருக்கற வரைக்கும் எனக்கும் ஒண்ணும் ஆகாது’ என்று அனைவரையும் ஆறுதல் படுத்திவிட்டு காருக்குள் ஏறிய வைகோ, பிரத் யேகப் பேட்டிக்காக நம்மையும் உடன் ஏற்றிக் கொண்டார். போக்குவரத்து நெருக்கடி யில் கார் நீந்திச் செல்ல ஆரம்பிக்க, ‘‘கலிங்கப் பட்டியில இருக்கற தலித் கிறிஸ்தவர்கள் புதுசா ஒரு சர்ச் கட்டியிருக்காங்க. அதைத் திறக்க என்னைக் கேட்டுக்கிட்டாங்க. இக்கட்டான சூழ்நிலையில வருவாரோ மாட்டாரோனு நினைச்சுக்கிட்டிருப்பாங்க. அதான் அவங்களோட அழைப்பை ஏற்று இதோ ஊருக்குப் போயிக்கிட்டிருக்கேன்’’ என்று தன் தொண்டையைச் சரிசெய்தவராக நம் கேள்விகளை எதிர்கொள்ளத் துவங்கினார் வைகோ.
p43.jpg
‘‘தாயகத்தைக் கைப்பற்றும் கலவரத் திட்டத்தை இப்போதைக்கு ஒத்திப் போட்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்... அப்படியானால், திரும்பவும் தாயகத்துக்கு ஆபத்து இருக்கிறது என்கிறீர்களா?’’
‘‘ரத்தக்களறியை ஏற்படுத்தி எங்கள் இயக்கத் தலைமை யகத்தைக் கைப்பற்ற முதலமைச்சர் கருணாநிதி திட்டம் தீட்டியிருக்கிறார் என்பதை என்னால் சான்றுகளோடு நிரூபிக்க முடியும். மாநகராட்சித் தேர்தல்களை எந்த குண்டர்களை வைத்து நடத்தி முடித்தார்களோ, அதே குண்டர் படையை வைத்துத் தாயகத்தைக் கைப்பற்ற 24&ம் தேதி மதியத்திலிருந்தே முயன்று வருகிறார்கள் என்ற செய்தி எனக்கு ஆதாரப்பூர்வமாக வந்து சேர்ந்து விட்டது.
அதன் பிறகுதான் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி இருவருக்கும் இங்குள்ள நிலமையை விளக்கி விரிவான கடிதம் அனுப்பினேன். எங்கள் தொண்டர்களும் அறவழியில் எதையும் சந்திக்க முந்தையநாள் இரவிலிருந்தே தாயகத்தில் கூடத் துவங்கி விட்டார்கள். நானும் இரவு முழுக்கக் கட்சி நிர்வாகிகளுடன் பேசி, மறுநாள் எப்படி கூட்டத்தை நடத்துவது என்பதைப் பற்றி முடிவெடுத்தோம். எங்களின் அந்த வியூகங்களைக் கண்டு அஞ்சியே தாயகத்தைக் கைப்பற்றும் திட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டிருக்கிறார்கள். வெட்டவெளியில் பொட்டல் காட்டில் ஒரே ஒரு கொடியோடு இருந்து கொண்டு கட்சியை நடத்தவும் எங்களுக்குத் தெரியும். வெறும் கட்டடத்தைக் கைப்பற்றுவதால் ம.தி.மு.க. என்கிற இயக்கத்தை அழித்துவிட முடியாது!’’
‘‘உங்களுடைய கடிதத்துக்குப் பிரதமர் மற்றும் சோனியாவின் ரியாக்ஷன் என்ன?’’
‘‘நான் அனுப்பிய கடிதம் பிரதமர் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தபோது அவர் கொல்கத்தாவில் நடந்த ஒரு அரசு விழாவில் இருந்தார். கடிதத்தை பிரதமர் படித்து விட்டார் என்ற தகவலை அவரது உதவியாளர் எனக்குத் தெரிவித்தார். அதேபோல் சோனியா அவர்களும் படித்து விட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது. இருவரிடமிருந்தும் எனக்கு வந்த தகவல் என்னவென்றால், ‘ஒரு கட்சியை உடைப்பது, அதன் அலுவலகத்தைக் கைப்பற்றுவது என்பது அநாகரிகமான, பொறுத்துக் கொள்ள முடியாத செயல்’ என்பதுதான். என்னிடம் இந்தச் செய்தியை சேர்ப்பித்த கையோடு, எனக்கு எதிரானவர்களுக்கும் சோனியா அவசர எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதனால்தான் என் கட்சி அலுலகத்தின் மீதும், என் மீதும் நடக்க விருந்த குண்டர்படை தாக்குதல் தவிர்க்கப்பட்டி ருக்கிறது. என் கட்சியும், உயிரும் தப்பியிருக்கிறது.’’
‘‘இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலை என்ன?’’
‘‘நடைப்பயணத்தின் துவக்கத்தி லும், முடிவிலும் எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் சகோதரி ஜெயலலிதா. அதேபோல தற்போது எங்கள் இயக்கத்துக்கு ஆளும் கட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் குறித்தும் சில விஷயங் களை என்னோடு பகிர்ந்து கொண் டார். கலைஞர் அ.தி.மு.க&வுக்கும் அதன் பொதுச்செயலாளரான தனக்கும் கொடுத்த நெருக்கடிகள், எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை நிர்மூலமாக்கும் வேலைகளில் இறங்கி, அதில் தோற்றுப்போன விவரங்கள் என அனைத்தையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட சகோதரி ஜெயலலிதா அவர்கள், ‘உங்கள் இயக்கத்தையும் அழித்துவிட இப்போது புதுக்கணக்குப் போட்டிருக்கிறார் கருணாநிதி. அவரது கெட்ட எண்ணங்கள் என்றைக்குமே நிறைவேறாது’ என்று என்னிடம் சொன்னார்.’’
‘‘நீங்கள் படிப்படியாக உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சொல்வதைக் கேட்க ஆரம்பித்திருப்பதாகவும், உங்கள் மகனை அரசியலுக்குக் கொண்டு வந்து வாரிசு அரசியலுக்கு வழிவகுப்பதாகவும் செஞ்சி ராமசந்திரன் சொல்லியிருக்கிறாரே?’’
‘‘எங்கள் கட்சி அலுவலகமான தாயகத் துக்கே என் மகன் இரண்டு முறைதான் வந்தி ருக்கிறார். நான் சிறையில் இருந்தபோது முரசொலி மாறனின் இறுதிக் காரியங்களில் கட்சியினரோடு சேர்ந்து போவதற்காகத் தாயகத்தின் வாசல் வரை வந்திருக்கிறார். இதோ இன்றைக்குக் கட்சி அலுவலகத்தைக் கைப்பற்ற குண்டர் படை வரவிருப்பதாகச் செய்திகள் கிளம்பவும், முதல் ஆளாக வந்து தாயகத்தின் முன்பாக தொண்டர்களோடு தொண்டராக உட்கார்ந்தார். அவரோடு என் குடும்ப உறுப்பினர்களும் உட்கார்ந் தார்கள். கட்சி அலுவலகத்துக்கு முன்பு ரத்தக்களறி ஏற்பட்டால், அப்போது சிந்தும் முதல் சொட்டு ரத்தம் என் குடும்ப ரத்தமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். என் எண்ணத்தைச் செயல் படுத்த என் குடும்ப உறுப்பினர்கள் கட்சி அலுவலகத்துக்கு முன்பு வந்து உட்கார்ந்தார்கள். காரணம், நான் கட்சியையும் கட்சித் தொண்டர்களையும்தான் என் குடும்பத்துக்கும் மேலாக மதிக்கிறேன். மற்ற கட்சிகளில் பதவி சுகங்களுக்காக வாரிசுகளை கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வருவார்கள். நான் ரத்தம் சிந்த அழைத்து வந்தேன். இதைத்தான் குடும்ப அரசியல் என்று என் அருமை நண்பர் செஞ்சியார் சொல்கிறாரா?
சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியை என் சொந்தத் தம்பிக்குக் கொடுக்காமல், ஒரு கட்சித் தொண்டனுக்குக் கொடுத்தேன். என் தம்பி ரவிச்சந்திரன் ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக ஒரு வருடம் சிறையில் இருந்தவன். தன் சொந்த சம்பாத்தியத்தைப் பல கிராமங்களின் முன்னேற்றத்துக்காக செலவு செய்தவன். இந்த முறையும் எந்தப் பதவி யும் தேவையில்லை என்று ஒதுங்கியிருந்தவனை, அந்தக் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் நிற்க வைத்து, ஜெயிக்க வைத்தார்கள். அவனுக்கு எந்தப் பதவியை வேண்டு மானாலும் நான் தரலாம். மற்ற அரசியல் வாரிசுகளை விட அத்தனை தகுதிகளும் அவனுக்கு இருக்கிறது. ஆனாலும் அதை நான் செய்யவில்லை, அதை என் குடும்பமும் விரும்பவில்லை. இது எல்லாமே செஞ்சியாருக்குத் தெரியும். ஆனால் பாவம், அவர் என்ன செய்வார்? கலைஞர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்கிறார்.’’
‘‘எல்.ஜி&க்கு கண்டிப்பாக அமைச்சர் பதவி வாங்கிக் கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்தீர்களாமே?’’
‘‘நான் யாருக்கும் எப்போதும் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதில்லை. நான் இயக்கத்தை ஆரம்பித்தபோது, ‘என் பின்னால் வந்தால் சில காலத்துக்குப் பதவி சுகங்கள் கிடைக்காது, என்னோடு வருகிறவர்களுக்கு வலிகள்தான் மிஞ்சும்’ என்று திட்டவட்டமாக அறிவித்தவன் நான். ஆனால் இந்த முறை எல்.ஜி. திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரானவுடன், தன்னை எப்படியாவது மந்திரியாக்கி விடுமாறு என்னை நச்சரிக்கத் துவங்கினார். ஒரு கட்டத்தில் செஞ்சியாரும் சேர்ந்துகொண்டு ‘வாங்கினால் இரண்டு மந்திரி பதவிகளை வாங்குங்கள்’ என்று தொல்லை கொடுக்கத் துவங்கினார்.
வேறு வழியின்றி பிரதமரிடம் அவர்களுக்குப் பதவி கேட்டு அணுகினேன். அப்போது அவர், ‘மிஸ்டர் வைகோ... உங்கள் கட்சி மந்திரிசபையில் சேரவேண்டுமானால் தி.மு.க. மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்வார்களா?’ என்று கேட்டார். அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நான் கேட்டபோதுதான், எங்கள் எம்.பி&க்களையும் காட்டித்தான் தி.மு.க. மந்திரி பதவிகளைப் பெற்ற விஷயத்தைக் கூறினார். இது குறித்து நான் சோனியாவிடமும் விளக்கம் கேட்க, அவரும் அதை உறுதி செய்தார். ‘இது எனக்கு கசப்பான மறக்க முடியாத அனுபவம்’ என்று சோனியா அம்மையாரிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். மந்திரி பதவிக்காக ஆசைப் படும் அவர்கள் இருவரும், இப்போது எங்களுக்கு எதிராகக் கொடி தூக்குவதை விட்டுவிட்டு, கலைஞரிடம் ம.தி.மு.க&வுக்கு செய்த துரோகத்துக்குக் காரணம் கேட்க வேண்டும். அதைத் தான் என் முன்னாள் தோழர்களிடம் நான் எதிர்பார்க் கிறேன்.’’
‘‘எல்.ஜி&யும், செஞ்சியாரும் கருணாநிதி சொல்படிதான் ம.தி.மு.க&வுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கிறார்கள் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?’’
‘‘முடியும்! நான் ஆதாரமில்லாமல் எதையும் சொல்ல மாட்டேன். ஈழத் தமிழர் பிரச்னைக்காக நான் கடந்த மாதம் 27&ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தேன். என்னோடு உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு விட்டு அன்று இரவு சென்னைக்குக் கிளம்பிய எல்.ஜி&யும், செஞ்சியும் விமான நிலையத்திலிருந்து நேராகக் கலைஞரின் சி.ஐ.டி. நகர் இல்லத் துக்குச் சென்று சுமார் இரண்டு மணிநேரம் பேசியிருக்கிறார்கள். அப்போது போடப்பட்ட சதித்திட்டங்கள்தான் இன்றைக்கு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதை கலைஞரால் மறுக்க முடியுமா?
இன்னொரு பொய்யையும் கலைஞர் சொல்ல ஆரம்பித் திருக்கிறார். வேலூர் சிறையிலிருந்து வெளியில் வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவனை, ‘தேர்தல் வருது, உன்னோட பிரசாரம்தான் இப்போ எடுபடும். சீக்கிரமா வந்துடு, அடம்பிடிக்காதே’ என்று என்னைக் கெஞ்சி வெளியில் வரச் சொன்னவர் கலைஞர். ஆனால், அவர்தான் என்னை வெளியில் கொண்டு வந்தது போல் பேசிக் கொண்டிருக்கிறார். இதையும் கலைஞரால் மறுக்க முடியாது. நாங்கள் இருவரும் பூந்தமல்லி சிறை வளாகத்தில் பேசிக் கொண்டதற்கு பல சாட்சிகள் உள்ளன.’’
‘‘செஞ்சியாரும், எல்.ஜி&யும் சேலத்தில் பொதுக்குழுவைக் கூட்டுவோம் என்று சொல்லியிருக்கிறார்களே?’’
‘‘அது ஒரு சாதாரண கூட்டமாகத்தான் இருக்கும். அதுவும் ஆளும்கட்சியினர் ஏற்பாட்டில் நடக்கும் ஒரு கூட்டமாகத் தான் இருக்கும். அந்த அற்ப கூட்டத்துக்கு ம.தி.மு.க&வின் பொதுக்குழு கூட்டம் என்று பெயரிடுவது வெட்கக்கேடான விஷயம்!’’
நன்றி ஜீனியர் விகடன்
http://www.vikatan.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக