ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

கார்ப்பரேட் போஸ்கோ 5000 ரூ லாபம் 27 ரூ மட்டுமே அரசுக்கு

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 19 ஜூன், 2018, பிற்பகல் 2:24
பெறுநர்: நான்
முத்து கிருஷ்ணன்
Posco நிறுவனத்திற்கு ஒரியா மலைகளை வெட்டி பாக்ஸைட் எடுக்க இந்திய அரசும் ஒரியா மாநில அரசும் அனுமதி அளித்து அவர்களுக்கு இங்கு எடுக்கப்படும் கனிம வளங்களை posco நிறுவனத்தின் தாயகமான தென் கொரியா விற்கு அனுப்ப தனி துறைமுகத்தையே ஒரிய அரசு நிர்மாணித்து கொடுத்தது,
பாக்ஸைட் வெட்டி எடுக்க பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன, மக்கள் ஏதிலிகளாக்கி வெளியேற்றப் பட்டனர், விவசாயிகள் வேளாண் நிலத்திலிருந்து வெளியற்றப்பட்டனர், கிராமங்கள் ஊர்கள் முற்றாக அழிக்கப்பட்டன நீர்நிலைகள் நிர்மூலமாக்கபட்டது, எதிர்த்த மண்ணின் மக்கள் மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி நர வேட்டையாடி கொல்லப்பட்டனர்,
இது வளர்ச்சி என்று ஆளும் வல்லூறுகள் வாதமிட்டன, அதில் அரசுக்கு லாபம் அதை கொண்டு தான் மக்கள் நலத் திட்டங்களை நடைமுறை படுத்துகிறோம் என்று முழங்கினார்கள், மக்களை வெளியேற்றி விட்டு எந்த மக்களுக்கான நலம் என்று யாரும் கேட்கவில்லை,
அரசுக்கு இதில் வருவாய் கிடைக்கிறதாம் எவ்வளவு தெரியுமா ஒரு டன் இடுபொருளாக எடுக்கப்படும் மண்ணுக்கு 27 ரூபாய் ஆனால் அந்த ஒரு டன் மண்ணை வைத்து அந்த நிறுவனம் ஈட்டும் தொகை 5,000 ரூபாய்(ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கு),
பசுமை வேட்டையின் விபரீதம் இன்று தமிழகத்தைச் சுற்றி சூழ்ந்து நிற்கிறது, நமக்கு இரண்டு வாய்ப்புகள் ஒன்று அகதிகளாக வெளியேறுவது அல்லது போராடி இந்த வல்லரசியலை விரட்டுவது....
அருண்ரங்கராசன் சுப்பிரமணியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக