ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

நிலம் கையகப்படுத்த முடியாதபடி சட்டம் வழக்கு

aathi1956 aathi1956@gmail.com

சனி, 23 ஜூன், 2018, பிற்பகல் 3:42
பெறுநர்: நான்
Basheer Acf
சேலம்-சென்னை 8 வழி பாதை பிரச்சனைக்கு ஓர் சட்ட பார்வை.
# அதிகம்_ஷேர்_செய்யுங்கள் .
இந்த நில எடுப்பிற்கு எதிராக, ஆட்சேபணை தெரிவித்தாலும், நீதிமன்றம் சென்றாலும், நில எடுப்பு திருத்த சட்டம் 68/1984. கீழ் தடை பெறுவது சிரமம். என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் சொல்லியுள்ளேன்.
நில எடுப்பு (LAND ACQUISITION) மற்றும் நில எடுப்பு திருத்த சட்டம் 68/1984. கீழ் பொது காரணங்களுக்காக தேவைப்படும் தனியார் நிலத்தை கையகப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர், படிவம் ஐ, இணைப்பு XII படிவம் I வருவாய் நிலை ஆணை எண். 90 கீழ் விண்ணப்பித்து செயல்படுத்த இயலும். இழப்பீட்டு தொகை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்காத நிலையிலும், பிரிவு 31(2) ன் கீழ் தொகையினை நீதி மன்ற வைப்புத் தொகையாக வைக்கவும், அதற்கு பிரிவு18ன் கீழ் குறிப்பு அனுப்பிட நடவடிக்கை எடுக்க இயலும். அவசரத்தன்மை கொண்ட நேர்வுகளில் தீர்ப்புக்கு முன்னதாக நிலத்தினை அரசு வசப்படுத்த பிரிவு 17 யின் கீழ் அரசால் முடியும்
அப்படியானால், "நில எடுப்பு திருத்த சட்டம் 68/1984" தினை எதிர் கொள்ள பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக இருந்தால், அதற்கு முன் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கையினை கையில் எடுக்க வேண்டும்? "CONSTITUTION (73th AMENDMENT) ACT, 1992, 11th SCHEDULE (Article 243G)" சட்ட அங்கீகாரத்தின் படியும், "U/s 3(6) in Tamil Nadu Act 21 of 1994" சட்ட பிரிவின் கீழ் ஓர் அவசர ஒருங்கிணைந்த கிராம சபை தீர்மானங்களை இயற்ற செய்து அதனை இந்த வழக்கில் இணைக்கலாம். மத்திய அரசின் சட்டத்தினை விட இந்திய அரசியலமைப்பின் இந்த சட்ட தீர்மானம் வலிமையானது. முன்னெடுப்பு செய்யுங்கள்

8வழி சாலை புதுமுயற்சி யோசனை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக