ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

அடப்பு ஈமச்சடங்கு ஆவி வழிபாடு

aathi1956 aathi1956@gmail.com

சனி, 9 ஜூன், 2018, முற்பகல் 10:14
பெறுநர்: நான்
அடப்பு என்பது இந்து சமய சாவுச்சடங்குகளில் ஒன்றாகும். அடப்பு ஏற்படும் காலங்களில் இறந்தவரின் ஆவியானது சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லும் வழியானது அடைக்கப்பட்டு விடுமென நம்பப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவருடைய இறப்பின் நேரத்தினைக் கொண்டு ஜோதிடத்தின் மூலமாக அடப்பின் காலத்தினை கணிக்கின்றனர். ஒருவர் தன்னுடைய காலம் முடியும் முன்பே இறந்துவிட்டால் இவ்வாறு அடப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. ஜோதிடர்களைக் கொண்டு கணித்தபடி அடப்பின் காலம் மாதக்கணக்கலும், வருடக்கணக்கிலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தக் காலத்தில் அவர் வீட்டில் இறந்திருந்தால் அவர் படுத்திருந்த இடத்தில் ஒரு நிறை சொம்பில் நீர் வைத்தும், தீபம் ஏற்றியும் வருகிறார்கள். இந்தக் காலங்களில் நற்காரியங்களை செய்வதிலிருந்து விலக்களிக்கிறார்கள். இந்த அடப்பு சடங்குமுறை ஆவி வழிபாட்டு முறையாகும்.
இந்த அடப்பு சடங்கில் திண்ணை என்றொரு முறையுள்ளது. இந்த முறையில் கோழியொன்றினை பலி கொடுத்து அதை சமைத்து உண்கிறார்கள். மாமன் மச்சன் உறவுக்காரர்கள் உண்ட கோழியின் எழும்பினை சவமாகக் கருதி அதனை திண்ணை போன்ற அமைப்பினை உருவாக்கி மூடி வைக்கின்றனர். இந்த சடங்கு ஆவிச்சடங்கில் சற்று அபாயகரமானது என்று நம்பப்படுகிறது. இந்தக் காலங்களில் இறந்தவர் அந்த இல்லத்திலேயே வாழ்கிறார் என்பது நம்பிக்கையாகும். இந்தக் காலங்கள் முடிந்தபிறகே எட்டுப்படைத்தல் நடைபெறுகிறது.
இவற்றையும் காண்க
ஈமச் சடங்குகள்
ஆதாரங்கள்
வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.
தகவல் பாதுகாப்பு •
கணினி பதிப்பு அடப்பு 
மெய்யியல் நீத்தார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக