வியாழன், 30 மார்ச், 2017

நாயக்கர் காமுகர்கள் பெண்ணடிமை வன்கொடுமை சான்று கெட்டிபொம்மு கட்டபொம்மு கட்டபொம்மன் குலதெய்வம் சிறுதெய்வம் பெண்ணுரிமை

aathi tamil aathi1956@gmail.com

6/2/16
பெறுநர்: எனக்கு
Go Green உடன் வெற்றிப் பேரொளி சோழன் .
பூவாடைக்காரி:
"தஞ்சை நாயக்கர் ஆட்சி காலத்தில் பாளையக்காரர்கள் கண்ணில் படும் அழகிளம்
பெண்களை கடத்திச் சென்று வன்புணர்ந்து அடிமைகளாக விற்று விடுவர். பிரேவ்
ஹார்ட் படத்தில் வருமே - திருமணம் ஆனால் முதலிரவு அப்பகுதி
படைத்தலைவனுடன் நடக்க வேண்டும் என்று, அது போல பூப்படைந்த பெண்களை கடத்தி
வந்து வன்புணர்ச்சிக்குள்ளாக்குவர். இதிலிருந்து தப்பிக்க பூப்படைந்த
பெண்களை கௌரவக் கொலைகள் செய்வதும் நடந்துள்ளது. அப்படி கொல்லப்பட்ட
பெண்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பான பெண் தெய்வப் பெயர்
வழங்கப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் இவ்வகை தெய்வங்களுக்கு
பூவாடைக்காரி என்று பெயர் வழங்கப்படுகிறது. (தமிழக வரலாற்றில்
தரங்கம்பாடி - 1 இராமச்சந்திரன்.சீ - உங்கள் நூலகம், ஆ, சிவசுப்பிரமணியன்
செப் 2013).
விடுதலைப் போர் வீரன் கட்டபொம்மனுக்கும் கூட இவ்வகை கதையாடல் உண்டு. அது
குறித்து நாட்டுப்புற வழக்கும் உள்ளது. 7 அண்ணன்களுக்குப் பிறந்த தங்கையை
கட்டபொம்முவிடமிருந்து காக்க அவர்கள் கொன்ற கதை அது."
இதுபோன்ற சிறுதெய்வ வழிபாடு என்பது மனிதர்களாக வாழ்ந்து தெய்வங்களாக
மாறியவர்களே; இதுவே உண்மை வரலாறு; மாறாக தெய்வமே மனிதர்களாக மாறியதென்பது
அவதாரமெடுத்தது என்பதெல்லாம் புனைவுகளாகத் தெரிகின்றன. மேற்கண்ட
தகவல்களின் முழு வரலாறு தெரிந்தவர்கள் கூறவும்...
Ramasamy Arumugam Slm ஐயா, வெற்றிப் பேரொளி சோழன் ஆகியோரின் கவனத்திற்கு...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக