வியாழன், 30 மார்ச், 2017

தமிழ் எனும் சொல் இலக்கியத்தில் இலக்கியம் சங்ககால வார்த்தை சங்கம் மருவிய

aathi tamil aathi1956@gmail.com

25/1/16
பெறுநர்: எனக்கு
தமிழ் எனும் சொல் பயன்பட்டுள்ள 2000 + ஆண்டுகள் பழமையானது இவை
எனவே ததமிழ் எனும் சொல் பற்றியே

தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான்
தென்புலம் காவலர் மருமான் ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடைக்
கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்
தமிழ்* நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரையும் அறிதே சிறுபாணாற்றுப்படை

புண்உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண்உமிழ் கழுகின் கானம் நீந்திச்
சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு
வில்இலைத்து உண்ணும் வல்ஆண் வாழ்க்கைத்
தமிழ்* கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே  அகநானூறு 31

களம்கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பலஇறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ
நோய்இல ராக நம் காதலர் வாய்வாள்
தமிழ்* அகப் படுத்த இமிழிசை முரசின்
வருநர் வரையாப் பெருநாள் இருக்கை  அகநானூறு 227

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்* தலை மயங்கிய தலையாலங் கானத்து புறம் 19

நளிஇரு முந்நீர் ஏணி யாக
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்*க் கிழவர்
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்
அரசுஎனப் படுவது நினதே பெரும
 புறம் 35

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி
தண் தமிழ்* பொது எனப் பொறாஅன் போர் எதிர்ந்து
கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என  புறம் 51

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென 10
வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்*கெழு கூடல் தண்கோல் வேந்தே
புறம் 58

தமிழ் உள்ளம்
பாடியவர்: பெருஞ்சித்திரனார்
பாடப்பட்டோள் : புலவரின் மனைவி
திணை: பாடாண் துறை: பரிசில்
தலைப்பில்

நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே புறம் 163
புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்
தான் மலர்ந்தன்றே
தமிழ்*வையைத் தண்ணம் புனல் 60
பரிபாடல் 6

வையை
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண்தமிழ்* ஆய்வந்திலார்
கொள்ளார் இக் குன்று பயன்
பரிபாடல் 9

செவ்வேள்
தெரிமாண் தமிழ்* மும்மைத் தென்னம் பொருப்பன்
பரிமா நிரையின் பரந்தன்று வையை பரிபாடல் திரட்டு 4 வையை
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்தமிழ்*க் குடிகள்
தாது உண் பறவை அனையர் பரிசில் வாழ்நர்
 பரிபாடல் திரட்டு 8
மதுரை

தண் தமிழ் வேலித் தமிழ் நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரைகொடித் தேரான்
குன்றம் உண்டாகும் அளவு
பரிபாடல் திரட்டு 9
மதுரை

சிறிஇலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்தமிழ்* செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி 10 பதிற்றுப்பத்து 63
-----------------------------------------------------------
http://groups.google.com/group/tamilmanram


aathi tamil aathi1956@gmail.com

25/1/16
பெறுநர்: எனக்கு
சங்க காலத்திற்குப் பிகு
பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய
வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேரா தவர் ஐந்திணை ஐம்பது பாயிரம்
நாணிலான் சால்பும் நடையிலான் நன்னோன்பும்
ஊணிலான் செய்யும் உதாரதையும் - ஏணிலான்
சேவகமும் செந்தமிழ் தேற்றான் சுவிச்செயலும்
நாவகமே நாடின் நகை சிறு பஞ்ச மூலம் 11
காதல் கொழுநனைக் காட்டி அவளொடுஎம்
கட்புலம் காண விண்புலம் போயது
இறும்பூது போலும்அஃது அறிந்தருள் நீயென
அவனுழை இருந்த தண்தமிழ் ச் சாத்தன் 10
யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்: சிலம்பு 1.புகsர் பதிகம்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் 35
அசையா மரபின் இசையோன் தானும்
இமிழ்கடல் வரைப்பில் தமிழ கம் அறியத்
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னு¡ல் நன்கு கடைப்பிடித்து 40 சிலம்பு 3 அரங்கேற்று காதை
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் 1
தமிழ் வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு சிலம்பு 8 வேனில் காதை
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்
தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின் என்ற 60 சிலம்பு 10 நாடுகாண் காதை
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்
இமிழ்கடல் வேலியைத் தமிழ் நா டாக்கிய 165
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை சிலம்பு 25 காட்சிக் காதை
குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண் தமிழ் வரைப்பிற்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொரு ளின்பம்
மக்கள் தேவ ரெனவிரு சார்க்கும் 5
சிலம்பு நூற் கட்டுரை
கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண் தமிழ் ப் பாவை 25
தொழுதனள் நிற்ப அத் தொல் மூதாட்டி மணிமேகலை பாயிரம்
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப 95
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
மா வண் தமிழ் த் திறம் மணிமேகலை துறவு
ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் மணிமேகலை பாயிரம்
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் -
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண் தமிழ் வினைஞ்அர் தம்மொடு கூடிக்
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை 110 மணிமேகலை 19 சிறைக்கோட்டம்
அறக்கோட்டம் ஆக்கிய காதை
கைஅகத்து எடுத்துக் காண்போர் முகத்தை
மை அறு மண்டிலம் போலக் காட்ட
'என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்
தென் தமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய்!
மாரி நடு நாள் வயிறு காய் பசியால் 140 மணிமேகலை 19 ஆபுத்திரனோடு
மணிபல்லவம் அடைந்த காதை
கொற்றங்கொள் நேமி நெடுமால் குணம் கூறவிப்பால்
உற்றிங்கொர் காதல் கிளரத் தமிழ் நூற்க லுற்றேன்
மற்றிங்கொர் குற்றம் வருமாயினு நங்கள் போல்வார் சூளாமணி பாயிரம் அவைஅடக்கம்
தேறு சொல்லாத தமிழ் த்தென் வேம்பயர் அண்ணல் செங்குவளை
நாறு மல்லாகத்து நாராயணன் பண்டை நான்மறையும் 90 சிராமலை அந்தாதி
மல்பயந்த மார்வன் மணியன்மகன் மதிள் வேம்பையர்கோன்
நற்பந்தமார் தமிழ் நாராயணன் அம்சிராமலை மேல்
பெருந்தமிழ்விரித்தஅருந் தமிழ் ப்
புலவனும்
பாய்பார்அறியநீயேஆதலின் 55
கல்லாடம் வேலன்வணக்கம்
பொதியப்பொருப்பன்மதியக்கருத்தி
னை10
கொங்குதேர்வாழ்க்கைச்செந் தமிழ்
ூறி
பொற்குவைதருமிக்குஅற்புடன்உ
கல்லாடம்
கடல் அமுது எடுத்துக் கரையில் வைத்தது போல்
பரப்பின் தமிழ் ச் சுவை திரட்டி மற்றவர்க்குத் 15
தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள் கல்லாடம் 3

https://groups.google.com/forum/m/#!topic/tamilmanram/bc9Wcp_bn0c

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக