வெள்ளி, 31 மார்ச், 2017

கிரேக்கம் தமிழ் தொடர்பு சான்று பாண்டியர்

aathi tamil aathi1956@gmail.com

20/1/16
பெறுநர்: எனக்கு
இந்தக் கிரேக்கத்தின் பணக்காரப் பெண்களும், சீமாட்டிகளும் தங்களுடைய
நாட்டு செல்வத்தை எல்லாம் கொண்டு போய் பாண்டிய நாட்டில் கொட்டுகிறார்கள்

- ப்ளீனி என்ற கிரேக்க அறிஞர்

இந்தப் பாண்டிய நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகளும்
முத்துகளும் கிரேக்கத்துப் பெண்களால் அதிகமாக விரும்பி வாங்கப்பட்டன.
எனவே தங்களுடைய செல்வங்களை எல்லாம் கொண்டு போய் தமிழ்நாட்டில்
கொட்டுகிறார்கள் என்று ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன், ஓர் ஐரோப்பிய
வரலாற்றாசிரியர் எழுதியுள்ளார்.

தகவல்: ஊர் மீண்டு செல்லுதல் நூலிலிருந்து

>>> மரபை திரும்பிப் பார்த்தால் இன்று ஏன் இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது புரியும். இனப்பெருமை, பழமைவாதம் பேசுகிறோம் என்று ஒரு கூட்டம் நம்மை காலத்துக்கும் ஏய்த்துக் கொண்டிருக்கிறது. உழவியல், அறம் சார்ந்த வாழ்வியல், பொருளியல், அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், கலைகள், இயற்கையியல் இன்னும் எவ்வளவோ உள்ளது நம் மரபிலிருந்து கற்றுக் கொள்ள. மரபு திரும்புதல் ஒன்றே நம் தமிழ்க் குமுகத்தை காக்கும் வழி.

வாருங்கள் மரபு திரும்புவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக