புதன், 8 ஜூலை, 2020

ஆப்பிரிக்காவிலிருந்து கருத்தியல் தவறு அகழ்வாராய்ச்சி சான்று குமரிக்கண்டம்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 6 செப்., 2018, பிற்பகல் 2:09
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றி உலகம் முழுவதும் பரவியது என்ற கோட்பாடு உடைபடத் தொடங்கிவிட்டது.
# தமிழகத்தில் (குமரிக்கண்டம்) மனிதன் தோன்றி உலகம் முழுவதும் பரவியது என்ற கோட்பாடு வலுப்பெறத் தொடங்கியுள்ளது...
#ஆப்பிரிக்காவில் ஏறத்தாழ 200000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் தோன்றி பின் 160000 ஆண்டுகளில் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவினான் என்றே இது வரை பல ஆய்வாளர்களும் கூறி வந்துள்ளனர்.
# இதற்கு இணையாக உள்ள # குமரிக் கண்டம் அல்லது # லெமூரியா கண்டக்கோட்பாட்டைப் பற்றி மேலை நாட்டு ஆய்வாளர்கள் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. # தமிழன் மற்றும் தமிழின் தொன்மையை மற்றும் தமிழனே தங்கள் முன்னோர்கள் என ஏற்பதில் அவர்களுக்கு உள்ள மிகப்பெரிய சங்கடம் காரணமாக இருக்கலாம்... #ஆனால் நம் தமிழ் நாட்டிலேயே குமரிக் கண்டக் கோட்பாட்டை விட்டுவிட்டு வெளியிலிருந்து தான் மனித இனம் இந்தியப் பகுதிக்குள் வந்தது என்று நிறுவ படாதபாடு படுவதுதான் ஏனென்று புரியவில்லை...
# தற்போது தமிழகத்தில் # புதுவை
# பொம்மையார் பள்ளம் பகுதியில் 1இலட்சத்து 66 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குழந்தையின் உடல் படிவம் கண்டெடுக்கப்பட்
டுள்ளதும், # அதிராம்பாக்கம் கொசஸ்தலை ஆற்றங்கரையில்
# ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதும் அவை 3 இலட்சத்து 85 ஆண்டுகள் பழமையானவை என்று உறுதிப்படுத்தப்பட்டதும் மனித பிறப்பிடம் என்பது ஆப்பிரிக்கா தான் என்ற கருத்தில் பலத்த அடியைக் கொடுத்துள்ளது....
# இனியாவது ஆய்வாளர்கள் குமரிக் கண்டம் பக்கமாக தங்கள் பார்வையைத் திருப்புவார்களா?.. # தமிழக அரசும், தமிழக ஆய்வாளர்களும் இது குறித்து ஆராய்ச்சி செய்வார்களா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக