புதன், 8 ஜூலை, 2020

எ.வ.வேலு வரலாறு 1 மெக்கானிக் கருணாநிதி எதிர்ப்பு பிறகு ஸ்டாலின் ஆதரவு சவுக்கு திமுக நாயுடு

aathi1956 aathi1956@gmail.com

சனி, 8 செப்., 2018, பிற்பகல் 12:12
பெறுநர்: எனக்கு

திமுகவின் மண்டகசாயம்.

BY  · JULY 2, 2018
இந்த ஆண்டு மார்ச் 15 அன்று, திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  மார்ச் 15 அன்றுதான் எவ.வேலுவுக்கும் பிறந்த நாள்.   அப்போது சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்தது.   அன்று நடந்த கூட்டத்தில் 35 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.   10 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.  அன்று அந்த கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, வேலுவை பற்றி இப்படி பேசினார் “உங்களை வழிநடத்தும் அண்ணன் வேலு, உங்களை மட்டும் வழிநடத்தவில்லை.   திமுகவையும் வழிநடத்துகிறார்.  தளபதியையும் வழி நடத்துகிறார்.   அண்ணன் வேலு மட்டும் இல்லையென்றால் திமுக 89 எம்எல்ஏக்களை பெற்றிருக்கவே முடியாது.”
வேலுவின் செல்வாக்கு அத்தகையது. இன்று வேலுவை பகைத்துக் கொண்டால், திமுகவில் இருக்கவே முடியாது.  அழித்து நசுக்கி விடுவார்.  திருவண்ணாமலை அருகே உள்ள சே.கூடலூர்.  அதுதான் அவரது சொந்த ஊர்.   வேலு பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார்.   பின்னர் அவர் நடத்தும் பாலிடெக்னிக்கில் படித்த இளங்கோ என்ற மாணவர், வேலுவுக்காக எம்ஏ தேர்வு எழுதினார்.  இப்போது வேலு எம்.ஏ பட்டதாரி.   வேலுவுக்காக தேர்வெழுதிய அந்த இளங்கோ மர்மமான முறையில்  சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து போனார்.
வேலுவின் தொடக்கம் மிக மிக எளிமையானது.    பம்ப் செட் மெக்கானிக்காகத்தான் இருந்தார் வேலு.  பின்னர் திருவண்ணாமலை பகுதியில் பிரபலமாக இருந்த தாமோதரன் பஸ் சர்வீஸில் கண்டக்டராக இருந்தார். 1972ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, அதில் இணைந்தார் வேலு.   தண்டாரம்பட்டு ஒன்றியத்தின் துணை அமைப்பாளர் பதவி கிடைக்கிறது.  77 தேர்தலில் தண்டாரம்பட்டு தொகுதிக்காக அலைந்தாலும் வேலுவுக்கு அது கிடைக்கவில்லை.   ஆனால் இவரது செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருந்த்து.   அப்போது அதிமுகவில் செல்வாக்காக இருந்த அமைச்சரான ப.உ.சண்முகத்துக்கு அல்லக்கையாக தன்னை மாற்றிக் கொள்கிறார் வேலு.    1984ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், தண்டாரம்பட்டு சீட் வேண்டும் என்று போராடுகிறார் வேலு.   ப.உ.சண்முகத்தின் அல்லக்கையாக சிறப்பாக பணியாற்றியதால், அவர் பரிந்துரையில் தண்டாரம்பட்டு சீட் கிடைத்து எம்எல்ஏவாகிறார் வேலு.
ஜெகதரட்சகன், விஐடி விஸ்வநாதன், முனிரத்னம், ஜேப்பியார் போன்றோர் திடீர் கல்வித் தந்தைகளாக உருவெடுத்தது போலவே வேலுவும் கல்வித் தந்தையாகிறார்.
இன்று வேலு கீழ்கண்ட கல்வி நிலையங்களுக்கு உரிமையாளர்.
அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவ வேலு உறைவிடப் பள்ளி, கரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை.  ராமச்சந்திர உடையார் மற்றும் ஜேப்பியாரைப் போலவே, வேலுவும் எம்ஜிஆரின் பினாமியாக இருந்தே கல்வித் தந்தை ஆகிறார்.   திருவண்ணாமலைக்கு கருணாநிதியோ, ஸ்டாலினோ வந்தால், அருணை கல்லூரி வளாகத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில்தான் தங்குவார்கள்.
எம்ஜிஆர் இறந்ததும், அவர் உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதாவை இறக்கி விட்ட புகழுக்கு இவரும் கேபி.ராமலிங்கமும் சொந்தக்காரர்கள்.  அந்த சம்பவம் வேலுவை புகழடைய வைக்கிறது.
89 தேர்தலில் ஜானகி அணியில் இரட்டைப் புறா சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவுகிறார் வேலு.   பின்னர் ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்கியதும், ஜெயலலிதா  அணிக்கு தாவ முயற்சி செய்கிறார் வேலு.  ஜெயலலிதாவை சந்தித்து, அவருக்கு ஒரு பட்டுப் புடவை பரிசளித்து, அந்த கூடாரத்தில் நுழைய முயற்சித்தார்.  ஆனால் ஜெயலலிதா இவரை ஏற்கவில்லை.
பின்னர் ஆர்எம்.வீரப்பன் தொடங்கிய எம்ஜிஆர் கழகத்தில் இணைந்தார் வேலு.   எம்ஜிஆர் கழகத்தின் சார்பில், திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்துக்கு அத்தனை செலவும் வேலுதான்.
கே.பாக்யராஜ், 1989ம் ஆண்டு, எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று ஒரு கட்சியை தொடங்குகிறார்.  அதில் இணைந்த வேலு, அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகிறார்.    பின்னர் பாக்யராஜ் கட்சி தேராது என்று தெரிந்ததும் அதிலிருந்து  வெளியேறி, திரைத் துறையில் கால் பதிக்கிறார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த இயக்குநர் வி.சேகர் எடுத்த, நான் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் என்ற படங்கள் வேலுவின் தயாரிப்புதான்.  1992ம் ஆண்டு வெளியான திலகம் என்ற படத்தில் வேலு வில்லனாக நடித்துள்ளார்.   நல்ல வேளை, நடிப்பு ஆசையை அப்படியே நிறுத்தி விட்டார்.   தொடர்ந்து நடித்திருந்தால் தமிழகத்தில் பாதி பேர் செத்திருப்பார்கள்.
மீண்டும் ஜெயலலிதாவிடம் இணைவதற்காக “’புரட்சித் தலைவி திராவிடத் தாய்தான்” என்ற புத்தகத்தைத் தயாரித்து, கவிஞர் வாலியிடம் அணிந்துரையும் வாங்கி, அச்சடித்து வைத்து இருந்த நேரத்தில்,  தமிழகத்தில் கடுமையான ஜெயலலிதா எதிர்ப்பு அலை.  இந்த நேரத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டால் போணியாகாது என்பதை உணர்ந்து, அப்போது பாட்சா திரைப்பட 100வது நாள் விழாவில் ரஜினியின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும், ரஜினி பக்கம் சாய்ந்தார்.     அப்போது திருவண்ணாமலையில், பட்டுச் சேலைகளை தானமாக அளித்து, ஒரு யாகம் நடத்தப்பட்டது.   அதன் முழுச் செலவும் வேலுதான்.
பின்னர் 1996ல், மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸில் இணையப் பார்த்தார்.  ஆனால் மூப்பனார் இவரை சேர்க்கவில்லை.
அடுத்து வேலு, திமுக பக்கம் கண் பதித்தார்.   1993ல் ராணிப்பேட்டையில் நடந்த இடைத் தேர்தலின்போது, பிரச்சாரத்துக்கு வந்த கருணாநிதி மீது தாக்குதல் நடைபெற்றது.  அந்த தாக்குதலை முன்னின்று நடத்தியவர் வேலுதான்.  இது போல, திருவண்ணாமலையில், திமுக தலையே தூக்க விடாமல் தொடர்ந்து செயல்பட்டவர் வேலுதான் என்பதால், திமுக உள்ளே அவரை நுழைய விடக் கூடாது என்று பலர் முனைப்பாக இருந்தவர்.  ஆனால், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த செ.மாதவனை பிடித்து, திமுகவில் நுழைந்தார் வேலு.
திமுகவில் நுழைந்த்தும், முக்கிய புள்ளிகள் யாரென்று பார்த்து, துரைமுருகன் மற்றும் பொன்முடியை கையில் போட்டுக் கொண்டார் வேலு.  இருவருக்கும் சரக்கு உள்ளிட்ட அனைத்து சப்ளைகளையும்  செய்தது வேலுதான்.  பொன்முடியின் பெயரை பொன்குடி என்றே வைக்கலாம்.  அப்படி சரக்கு அடிப்பார்.  ஒரு நாள் இரவில் இரண்டு புல் பாட்டில்களை சாதாரணமாக காலி செய்வார்.
ஆ.ராசா 2ஜி வழக்குக்காக டெல்லிக்கு அலைந்தபோது, பொன்முடிக்கு சரக்கு வாங்கிக் கொடுத்தே என் பணமெல்லாம் காலியாகி விடும் என்று கூறியதாக சொல்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக