புதன், 8 ஜூலை, 2020

உள்நாட்டில் 81 ரூ வெளிநாட்டுக்கு 34 ரூ பெட்ரோல் விற்பனை மோடி பாஜக

aathi1956 aathi1956@gmail.com

சனி, 1 செப்., 2018, முற்பகல் 10:12
பெறுநர்: எனக்கு
இந்தியர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81; வெளிநாடுகளில் ரூ.34க்கு ஏற்றுமதி: ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்

https://tamil.thehindu.com/india/article24832064.ece/amp/?__twitter_impression=true

https://www.vikatan.com/news/india/135587-india-sold-petrol-diesel-to-foreign-countries-with-half-price-of-inside-india-selling-price.html

https://twitter.com/rssurjewala?lang=en

Modi government selling petrol, diesel cheaper abroad: Congress

https://energy.economictimes.indiatimes.com/news/oil-and-gas/modi-government-selling-petrol-diesel-cheaper-abroad-congress/65623230

https://www.ndtv.com/india-news/congress-attacks-modi-government-over-rising-fuel-prices-1909185

https://indianexpress.com/article/india/modi-govt-selling-petrol-diesel-cheaper-abroad-congress-5334077/

இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாட்டு மக்களுக்கு இது குறித்து இந்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும். பேரல் விலை குறைந்தும் எரிபொருள் விலை குறையாதது மற்றும் வெளிநாடுகளுக்கு குறைந்த விலைக்கு விற்க இந்திய மக்கள் ஏன் அதிக விலை கொடுத்து எரிபொருள் வாங்கவேண்டும். இதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

பேரல் விலை குறைந்தும், இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்காமல் இருந்து, மக்களின் வரியை, வெளிநாடுகளுக்கு குறைந்த விலைக்கு எரிபொருள் விற்பதன் மூலம் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் மாபெரும் தேச துரோகம் செய்துள்ளது பா.ஜ.க. அரசு.

...

இந்தியர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81; வெளிநாடுகளில் ரூ.34க்கு ஏற்றுமதி: ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்
புதுடெல்லி
Published : 31 Aug 2018 17:20 IST
Updated : 31 Aug 2018 21:32 IST
இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.81க்கு விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒரு லிட்டரை 34 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவாலும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தி வருகின்றன.
இதனால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.81.58 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டர் ரூ.74.18 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது. இந்தக் கடுமையான விலை ஏற்றத்தால், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளன. காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூட, கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பின், பெட்ரோல் மீது உற்பத்தி வரி 211.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, டீசல் மீது 433.06 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12 முறை உற்பத்தி வரி ஏற்பட்டுள்ளது என சாடியுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெட்ரோல், டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் விலையைக் கேட்டிருந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் தாக்கல் செய்த மனுவுக்கு தற்போதுதான் மத்திய அரசின் மங்களூரு பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
அதில் 2018, ஜனவரி 1-ம் தேதி முதல் 2018,ஜூன் 30-ம் தேதிவரை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஹாங்காங், மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரசு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த நாடுகளுக்கு பெட்ரோல் ஒருலிட்டர் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், டீசல் ஒரு லிட்டர் ரூ.34 முதல் ரூ.36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு மிக மிக மலிவாக, பாதிவிலைக்கு மத்திய அரசு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் கூறுகையில், ''இந்தியாவில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.69 முதல் ரூ.75 விலையிலும், டீசல் லிட்டர் ரூ.59 முதல் ரூ.67 வரையிலும் விற்பனையானது. ஆனால், அந்த நேரத்தில் வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒருலிட்டர் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், டீசல் ஒரு லிட்டர் ரூ.34 முதல் ரூ.36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஆகியவை அமெரிக்கா, ஈராக், இங்கிலாந்து, இஸ்ரேல், ஜோர்டான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது'' எனத் தெரிவித்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை பெட்ரோலிய கச்சா எண்ணெயை அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் முக்கிய நாடாகவும், அதேசமயம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் முன்னணியில் இருந்து வருகிறது என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
உலகளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் 24100 கோடி டாலருக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது சர்வதேச சந்தையில் 3.9 சதவீதமாகும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு உயர்ந்த தரத்தில் பெட்ரோலியப் பொருட்களை சுத்திகரித்துக் கொடுத்தால், அதற்கு ஏற்றார்போல் விலை கிடைக்கும் என்பதால் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் இந்தியில் ட்விட் செய்துள்ளார்.
----------
 கார்த்திக்.சி Home
› செய்திகள் › இந்தியா
உள்நாட்டில் பெட்ரோலை 81 ரூபாய்க்கும் டீசலை 74 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் மத்திய பா.ஜ.க அரசு வெளிநாடுகளுக்கு பெட்ரோல் 34 ரூபாய்க்கும் டீசலை 36 ரூபாய்க்கும் விற்பனை செய்து இந்தியர்களின் முதுகில் குத்துகிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுரேஜ்வாலா விமர்சித்திருக்கிறார்.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வதும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் என்பவர் வெளிநாடுகளுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யப்படும் விலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதில், '2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதிவரை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஹாங்காங், மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 32 - 34 வரையிலும், ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 34 - 36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டது' தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுரேஜ்வாலா, 'அதிகமான வரிகள் மூலம் 11 லட்சம் கோடி ரூபாய்வரை அரசு கொள்ளையடித்துள்ளது. இந்தியர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான விலையில் பெட்ரோல், டீசல் வாங்கிவரும் நிலையில், மோடி அரசு வெளிநாடுகளுக்கு குறைவான விலையில் பெட்ரோல் டீசலை விற்பனை செய்கிறது. 2014-ம் ஆண்டு டீசல் மீதான சுங்கவரி 3.46 ரூபாய் இருந்தது. தற்போது அது 15.33 ரூபாயாக இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 12 முறை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் எரிபொருள் கொள்ளையை பொதுமக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். வரக்கூடிய தேர்தலில் அதற்கான பதிலடி கொடுப்பார்கள். இந்தியாவில் பெட்ரோல் 78 ரூபாய் முதல் 86 ரூபாய்க்கும் டீசல் 70 ரூபாய் முதல் 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேநேரத்தில் 15 நாடுகளுக்கு பெட்ரோலை லிட்டருக்கு 34 ரூபாய்க்கும், 37 நாடுகளுக்கு டீசலை 37 ரூபாய்க்கும் இந்தியா விற்பனை செய்கிறது' என்று குற்றம்சாட்டினார்.
oil price in india india
இந்தியா
பெட்ரோல் டீசல் விலை 
Posted Date : 20:19 (31/08/2018) Last updated : 20:38 (31/08/2018)
`வெளிநாடுகளுக்குஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.34க்கு விற்கும் இந்தியா!’- ஆர்.டி.ஐதகவலை முன்னிறுத்தி காங்கிரஸ் குற்றச்சாட்டு
------------
Modi govt selling petrol, diesel cheaper abroad: Congress
Congress chief spokesperson Randeep Surjewala claimed the common man was suffering due to spiralling prices of such products and the government had "looted" the country of over Rs 11 lakh crore due to levy of "monstrous taxes".
By: PTI | New Delhi |
Published: August 31, 2018 4:20:20 pm
Congress spokesperson Randeep Singh Surjewala claimed the common man was suffering due to spiralling prices of such products and the government had "looted" the country of over Rs 11 lakh crore due to levy of "monstrous taxes".(ANI)
The Congress Friday accused the BJP government of selling petrol and diesel to other nations at far cheaper rates than to Indian citizens and alleged the people, who were suffering due to the all-time high prices, would give it a befitting reply in elections for this “betrayal”.
Congress chief spokesperson Randeep Surjewala claimed the common man was suffering due to spiralling prices of such products and the government had “looted” the country of over Rs 11 lakh crore due to levy of “monstrous taxes”.
ADVERTISEMENT
“The Modi government is selling cheap petrol and diesel to foreign countries, as Indians suffer due to the all-time high prices,” he said.
“The monstrous taxes being levied by the government have resulted in the skyrocketing petrol and diesel prices. The Modi government has already profited by over Rs 11 lakh crore from draconian taxes on fuel,” he alleged in a statement.
The Congress leader claimed the petrol and diesel prices were at an all-time high and the common man, the middle class, the farmers, the transporters and small and medium businesses were bearing the brunt of it.
“Petrol and diesel in India are available in the range of Rs 78-86 and from Rs 70 to 75 respectively, but an RTI reply revealed the Modi government is selling petrol to 15 countries at just Rs 34 per litre and diesel to 29 countries at Rs 37 only. These include England, Australia, America, Malaysia and Israel. This is how the government betrayed and backstabbed the people of India,” he alleged.
ADVERTISEMENT
Surjewala claimed in July 2017, the Congress had demanded that petrol and diesel be brought under the ambit of the GST, but the government and the BJP refused to listen.
“Now, the people of India will answer the BJP by giving it a befitting reply in the upcoming elections,” he said.
The Congress leader alleged the excise duty of petrol was just Rs 9.2 per litre in May 2014, while it is Rs 19.48 per litre now.
He claimed the excise duty of diesel was just Rs 3.46 per litre in May 2014 to Rs 15.33 per litre now. The central excise duty has been hiked 12 times since the BJP came in to power.
He said the prices of essential commodities were burning holes in the budgets of the all Indians and the people would “not forgive and forget” the government for the “fuel loot” and they “will give a befitting reply to the BJP in the forthcoming elections”.
He said while skyrocketing diesel prices of Rs 70.26 per litre in Delhi were impacting farmers’ lifeline, besides a stinging effect on the runaway food inflation, the prices of petrol which touched a high of Rs 78.57 per litre in Delhi had gravely impacted the transportation and commuting cost of the common man.
He said the prices of petrol and diesel in the country’s financial capital Mumbai had touched Rs 86 per litre and Rs 74.59 respectively owing to taxes imposed by the BJP governments in the Centre and the State.
-------------

ஏற்றுமதி எரிபொருள் தகவலறியும் பொருளாதாரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக