புதன், 8 ஜூலை, 2020

கம்மாளர் ஆசாரி பற்றி இலக்கியம் தொகுப்பு மரம் கொல்லர்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 4 செப்., 2018, பிற்பகல் 4:21
பெறுநர்: எனக்கு

தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்
தமிழ் இனத்திலேயே வழிகாட்டி பலர் இருக்க அடுத்தவனை தேடுவானேன் என ஒரு பதிவுதான் போட்டேன்
திராவிடனுக கம்மாளன் தமிழன் இல்லைன்னு கூவுறானுக அவனுகளுக்கு இந்தப் பதிவு
கம்மாளர்களைப் பற்றிய இலக்கிய குறிப்புகள் சில...
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல
ஈமும் கம்மும் உரும் என் கிளவியும்
ஆ மு பெயரும் அவற்று ஓர்_அன்ன (தொல். எழுத்து. 328)
என்னும் தொல்காப்பிய நூற்பாவில் "கம்" எனும் சொல் தொழிற் பெயர் என குறிக்கப்பட்டுள்ளது.
மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அந்நாற் சொல்லும் தொழிற்பெயரியல." (எழுத். 345)
என்னும் தொல்காப்பிய நூற்பாவில் கன்னாரத் தொழில் குறிக்கப் பட்டுள்ளது.
"நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல" (தொல்.எழுத்து. 371)
என்பதில் கொல்லத் தொழில் குறிக்கப்பட்டுளது.
"ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த" (புறம்.353)
"உலைக்கல் லன்ன பாறை யேறி" (குறுந். 12: 1)
"பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும்
கருங்கைக் கொல்லன் இருப்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ" (பெரும்பாண். 436-8)
"நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்
எறிபொற் பிதிரின் சிறுபல் காய
வேங்கை வீயுகும்" (நற். 13 : 5-7)
"வன்புல மிறந்த பின்றை மென்றோல்
மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன
கவைத்தான் அலவன்" (பெரும்பாண். 206-8)
நல்லரா நடுங்க உரறிக் கொல்லன்
ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தகழும்"(நற். 125: 1-4)
"கருங்கைக் கொல்லனை யிரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே" (புறம். 180: 12-3)
என்னும் பகுதிகள், இற்றைக் கொல்லத்தொழில் நிலையாய் அன்றும் இருந்ததைக் காட்டும்.
"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல்" (குறள். 505)
- கருமம் என்பது தொழிலை குறிக்கின்றது.
"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு" (குறள் 267)
- "சுடச்சுட சுடரும் பொன்" பொற்கொல்லரை குறிக்கின்றது.
"பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின்
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்" (பெரும்பாண். 220-1)
"சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்மரும்" (மதுரைக். 512-3)
"ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல்கா சணிந்த அல்குல்
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ" (புறம். 353)
"உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம் புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப் பொலங்கல ஒருகா சேய்க்கும் நிலங்கரி சுள்ளியங் காடிறந் தோரே" (குறுந். 67).
என்பவை பொற்கொல்லரின் பணியைக் குறிப்பன. குறுந்தொகைச் செய்யுளில், பொற்கொல்லன் புதுக்கம்பியிற் கோக்குமாறு தன் உகிரால் (நகத்தால்) பற்றியிருக்கும் உருண்டையான பொற்காசிற்கு, வேப்பம்பழத்தைக் கவ்விக் கொண்டிருக்கும் கிளிமூக்கை உவமையாக கூறியுள்ளனர்.
தச்சு வேலையிற் சிறந்த வேலைப்பாடுள்ள செய்பொருள் தேராகும்.
"எம்முளும் உளனொரு பொருநன் வைகல்
எண்டேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே" (புறம்)
என்பது தேர்த்தச்சனைக் குறித்தது.
தச்சனை மரங்கொல் தச்சன் என்பது இலக்கிய வழக்கு. கொல்லுதல் வெட்டுதல்.
"மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே" (புறம். 206: 11-2)
தச்சுவேலை பெரும்பாலும் பல பலகைகளையும் கால்களை யும் ஒன்றாகத் தைத்தலாதலால், அப் பெயர் பெற்றது. தைச்சு - தச்சு. தைத்தல் இணைத்தல் அல்லது பொருத்துதல்.
ஐம்பெருங்காப்பியங்களாகிய சிலம்பு வளையாபதி மணி மேகலை குண்டலகேசி சீவக சிந்தாமணி என்பவை அணிகலன் பெயரிலேயே இருப்பதை அறிக
சங்க காலத்தில். அடர் வனத்தில் மரமேறி பழங்களை கொணர்ந்தவன் மூப்பன்.
விலங்குடன் போரிட்டவன் வேடன்.
வேட்டையாடிய விலங்கினை உறித்து பங்கிட்டவனும், காயம்பட்ட வேடனுக்கு தையல் போட்டவனும் அம்பட்டன்.
தீ பந்தம் ஏந்தி காவல் புரிந்தவன் ஏகாலி
இரவில் விலங்குகள் தாக்காமல் இருக்க துடிப்பறையை இசைத்து காவல் புரிந்தவன் துடியன் (உடுக்கை)
கிடைத்த பண்டத்தை (உணவுகளை) கொண்டு பசியை ஆற்றியனும் பிற்காலத்தில் நெருப்பில் சுட்டு பண்டம் ஆக்கியவனும் பண்டாரம்.
இவர்களே ஆதி தமிழ்குடியினர் இவர்களுக்கு ஆயுதம் செய்து கொடுத்தவன் கம்மியன் என்ற கம்மாளன்
வேட்டையாடும் காலத்தில்
1. மறவன் (ஈட்டி போன்ற ஆயுதமேந்தியவன்)
2. எயினன் (வில் போன்ற ஆயுதம் ஏந்தியவன்)
3. வலையன் (வலை கொண்டு வேட்டை)
4. நீர் வேட்டை (மீன்)
இதற்கும் ஆயுதம் செய்தவன் கம்மாளன்
தற்காலத்தில்
தாலி கட்டும் போது,
கட்டிலில் படுத்துறங்கும் போது,
குழந்தையை தொட்டிலில் போடும் போது,
குழந்தைக்கு நடை பழக்கும் போது,
காது குத்தும் போது,
கிடா வெட்டும் போது,
ஏர் ஓட்டும் போது,
பாத்தி கட்டும் போது,
களையெடுக்கும் போது,
அறுவடை செய்யும் போது,
விளைந்ததை படியளக்கும் போது,
வண்டியில் ஏற்றி வீடு சேர்க்கும் போது,
வீட்டு வாயிலில் தலைவணங்கும் போது,
காசை பூட்டி வைக்கும் போது,
இவற்றின் பின்னுள்ள உழைப்பு அனைத்தும் கம்மாளர்களுடையதே
பெருங்கோயில் மட்டுமல்ல என் முன்னோனுக்கு சான்று!
நீ உன் வரலாற்று சான்றாக எதை கொண்டுவந்தாலும் அதில் அனைத்திலும் இருப்பான் பாட்டனும் பூட்டனும்.
நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல் ஆயுதம் சான்றென சொல்வாயெனில், அவ்வாயுதத்தை உருவாக்கியவன் யார்?
கல்வெட்டை சான்றாக கொனர்வாயா, அக்கல்லில் எழுத்தை வெட்டியவன் யார்?
நாணயத்தை சான்றாக கொனர்வாயா, நாணயத்தை அடித்து அச்சேற்றியவன் யார்?
செப்பு / வெள்ளி பட்டயத்தை கொனர்வாயா, பட்டையத்தை அடித்தவன் யார்? அதில் எழுதியவன் யார்?
ஓலை சுவடியை கொனர்வாயா, சுவடியில் எழுதிய எழுத்தாணியை கொடுத்தவன் யார்?
இப்படி எதை நீ சான்றாக கொடுத்தாலும் அதில் என் முன்னோன் வாழ்வான் உயிரோடு.
தமிழனுக்கு பழம் பெரும் சான்று கல்லும் மண்ணுமே!
கல்லான என்னையும் மண்ணான என் உடன்பிறந்த குயவனையும் விடுத்து உனக்கேது வரலாறு.
1 செப்டம்பர், PM 11:06 ·

மா.செந்தில் குமார் அம்பில்.
உலகிலேயே குறைந்த வெப்பத்தில் அதிக வலிமையான இரும்பை வார்த்தெடுக்கும் திறன் தமிழர்களுக்கே உண்டு..
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று அன்று AM 9:15 மணிக்குு

Senthil Vel
மா.செந்தில்குமார் அம்பில்: ஜப்பானியர்களின் உலகத்திலேயே சிறந்த கடானா வாள்கள்

தமிழ்ச்சாதி ஆயுதம் குடிகள் மரம் மனிதநேயம் உயிர்நேயம் 

1 கருத்து: