செவ்வாய், 5 ஜூன், 2018

பாவாணர் பூர்வீகம் குடும்பம் பள்ளர் திருநெல்வேலி

aathi1956 aathi1956@gmail.com

பிப். 9
பெறுநர்: எனக்கு
பாவாணர் வரலாறு :

திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார் கோயில் வட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பிறக்கடையான்பட்டி என்னும் கோமதிமுத்துபுரம் என்ற ஊரில் பிறந்தவர் என் தாத்தா பாவாணர்... அவர்களின் குடும்ப விவரம்

பாண்டியக் குடும்பனார் -சிவனியம்மாள் குடுமிச்சி இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள்
1.பெரியகருப்பணக் குடும்பன்
2.சின்னக் கருப்பணக்குடும்பன்
3.வெள்ளையம்மாள் குடுமிச்சி
4.பிறக்கடையாள் குடுமிச்சி
5.குப்பம்மாள் குடுமிச்சி

சின்னக் கருப்பணக்குடும்பன் என்பவர் கிருத்தவ மதத்திற்கு மாறி தனது பெயரை தோக்காசு முத்துச்சாமி குடும்பனார் என்று மாற்றிக் கொண்டு தனது உறவு பெண்ணான வள்ளியம்மை குடுமிச்சியை மணந்தார்.

முத்துச்சாமி குடும்பனார் -வள்ளியம்மை குடுமிச்சிக்கு இருமகன்கள்
1.மார்க் 2.ஞானமுத்து

ஞானமுத்துக் குடும்பனார் -சங்கரன்கோயில் கிருத்துவ பள்ளி ஆசிரியர், இவருக்கு கோயிற்பட்டி வட்டம் பாண்டவர் மங்கலம் குருபாதம் -பாக்கியத்தாய் என்பவர்களின் மகளாகப் பிறந்த பரிபூரண மள்ளத்தியரை திருமணம் செய்து வைத்தனர்.

குருபாதம் -பாக்கியத்தாய் பிள்ளைகள்
1.ஆசிர்வாதம் 2.பரிபூரணம், 3.ஞானபூரணம் 4.அன்பாயி 5.நேசம்மாள்

ஞானமுத்துக் குடும்பனார் -பரிபூரண மள்ளத்தியர் இணையர்க்கு பத்துப் பிள்ளைகள், பத்தில் நாலுவர் இறந்துவிட, மீதி அறுவரே இருந்தனர் அவர்கள்

1.மேசியாதாசக் குடும்பனார்
2.குருபாதக் குடும்பனார்
3.சுவாமிதாச குடும்பனார்
4.பாக்கியத்தாய் மள்ளத்தியர்
5.தவமணி மள்ளத்தியர்
6.தேவநேசக் குடும்பனார்

பாவாணர் அவர்களின் பெற்றோர்கள் இறந்துவிட, அவரை பார்க்கும் பொறுப்பை உடன்பிறந்த தமக்கை பாக்கியத்தாய் ஏற்றுக் கொண்டார்

பாவாணர் திருமண நிகழ்வு :

பாவாணர் அவர்களுக்கு தனது ஒன்றுவிட்ட அக்காள் (அன்னமுத்துவின்) மகள் எசுத்தர் பொன்னம்மாளை 1925 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.. எசுத்தர் பொன்னம்மாள் என்பவர் பாவாணரின் சிற்றன்னை ஞானபூரணத்தின் மகள் அன்னமுத்துவின் மகளாவார். அன்னமுத்துவை ஓட்டப்பிடாரத்திற்கு தெற்கே வேப்பங்குளத்தில் ஆசிர்வாதம் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்திருந்தனர். அதாவது பாவாணர் தனது மருமகளான எசுத்தரை மணந்தார்.

பாவாணர் -எசுத்தர் பொன்னம்மாள் (1925) இருவருக்கும் ஒரு ஆண்பிள்ளை பிறந்தது, அவரது பெயர் அழகிய மணவாள தாசன் , ஒராண்டு (1926)கழித்து எசுத்தர் இறந்து விடவே, அழகிய மணவாள தாசனை தனது அண்ணன் மேசியாதாசனிடம் கொடுத்து விட்டு, தமிழ் ஆய்வில் மீண்டும் ஈடுபட சென்றுவிட்டார்.

பின்னர் தனது அக்காள் பாக்கியத்தாயின் வேண்டுதல்களுக்கு இணங்கி, பாக்கியத்தாயின் மகள் நேசமணி மள்ளத்தியரை இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களது திருமணம் 1930 ல் நடந்தது.

பாவாணர் -நேசமணி மள்ளத்தியர் திருமண வாழ்வு மற்றும் பிள்ளைகள் :
1.நச்சினார்க்கினிய நம்பி
2.சிலுவையை வென்ற செல்வராயன்
3.அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்
4.மடம் தவிர்த்த மங்கையர்க்கரசி
5.மணிமன்றவாணன்
6.பைந்தமிழ்வளர்த்த பாண்டியர் (சிறு வயதில் இறப்பு)

நேசமணி மள்ளத்தியர் (27.10.1963) ல் இறந்தார்.

பாவாணர் அவர்கள் 43 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், 23 மொழிகளை பேசியும், 174 பட்டங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்தவர்.

பாவாணரின் சிறந்த கருத்துக்கள் :

"தமிழை வடமொழிவல்லாளுண்மையிலிருந்து மீட்கவே இறைவன் என்னைப் படைத்தான்"

"தமிழுக்கும், தமிழருக்கும் நான் படும்பாட்டை இறைவன் ஒருவனே
அறிவான்"

"தமிழ் வீழ்ந்ததால் தமிழன் வீழ்ந்தான், தமிழை மீட்டால் எல்லாம் சரியாகிவிடும் "

"தமிழுயர தானுயர்வான் தமிழன் "

"தமிழ் திராவிடத்திற்கு தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் "

"எனக்கு வறுமையுமுண்டு, மனைவி மக்களுமுண்டு அதோடு மானம் உண்டு"

"தமிழே உலகின் முதல் மொழி, தமிழனே உலகின் முதல் மாந்தன்"

தேவநேயர் ஆக்கிய நூல்கள்தொகு

இசைத்தமிழ்க் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்இசையரங்கு
இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 
#.இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்
இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் (1968) 89 பக்கங்கள்
உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்
உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951) 251 பக்கங்கள்
ஒப்பியன்மொழி நூல் (1940) 378 பக்கங்கள்
கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் என்னும் இசைநூல், இசைப்பாடல்கள் 35 கொண்டது#. பக்கங்கள் 33
1937
#.கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் (1937) 84 பக்கங்கள்
கட்டுரை வரைவியல் என்னும் இடைத்தரக் கட்டுரை இலக்கணம் (1939, 1952)
160 பக்கங்கள்கட்டுரை எழுதுவது எப்படி? 36 பக்கங்கள்கடிதம் எழுதுவது எப்படி? (1984)
36 பக்கங்கள்கிறித்தவக் கீர்த்தனம் (1981?)
25 இயற்பாக்கள்,
50 இசைப்பாக்கள் கொண்டதுசிறுவர் பாடல் திரட்டு (1925)
கதை, விளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது#.
மருத நிலப் பாடல்கள் (1924)
சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து (1943) 104 பக்கங்கள்
சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961)
46 பக்கங்கள்சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) 120 பக்கங்கள்செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985) 574 பக்கங்கள்
#.தமிழ் இலக்கிய வரலாறு (1979) 326 பக்கங்கள்தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் (1954) 144 பக்கங்கள
தமிழ் வரலாறு (1967) 319 பக்கங்கள்
தமிழர் திருமணம் (1956)
96 பக்கங்கள்தமிழன் எப்படிக் கெட்டான் 1940
தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள்
தமிழர் வரலாறு (1972) 382 பக்கங்கள
்தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977)
செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள்#. முன்னுரை, மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது#.திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 812 பக்கங்கள் கொண்டது
#.தொல்#. எழுத்து - குறிப்புரை (1946)தொல்#. சொல் - குறிப்புரை (1949)
பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966) 240 பக்கங்கள்
பழந்தமிழராட்சி (1952) 170 பக்கங்கள்#.
பாவாணர் பாடல்கள், பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களைத் தொகுப்பசிரியர் இரா#. இளங்குமரன் தொகுத்து#.பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது#. தொகுப்பு#. இரா#. இளங்குமரன்#.#.
மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978)
250 பக்கங்கள்முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953)
344 பக்கங்கள்#. குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
வடமொழி வரலாறு (1967) 350 பக்கங்கள் கொண்டது#.
வண்ணணை மொழி நூலின் வழுவியல் (1968) 122 பக்கங்கள்#.
வேர்ச்சொற் கட்டுரைகள் (1973) 298 பக்கங்கள்#.
என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா#. கு#.பூங்காவனம்#. பக்கங்கள்??The Primary Classical Language of the World (1966) 312 பக்கங்கள்.

#மருதநிலப் பண் என்பதே பாவாணர் முதல் முறையாக எழுதியது.

பாவாணர் அவர்கள் 1981 சனவரி 16 ம் தேதி இரவு 12:30 இறந்தார்.

மேலே உள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள :
1.#பாவாணர் #நோக்கில் #பழந்தமிழரசும்மரபும் குடிமரபியல் நூல் -#செந்தில்மள்ளர்

2.பாவாணரின் நூல்கள்

தகவல்
என்றும் மண் மான மள்ளர் குல மீட்பில்
இரா. வசந்த் தமிழ்வேந்தன்
மள்ளர் மீட்புக் களம்
தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக