புதன், 20 ஜூன், 2018

சாகர்மாலா பற்றி தொடர் 9 10

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்பிப். 22
பெறுநர்: எனக்கு
வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Ingersol Selvaraj மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-9
நாகை மாவட்டம்-சீர்காழியில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் அமைக்கபடவுள்ள புதிய துறைமுகத்திற்கான "தொழில்நுட்ப மற்றும் பொருளியல் சாத்தியக் கூறு ஆய்வறிக்கை" (Techno Economic Feasability Report-2016) ஆகத்தில் வெளியிடப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையின் அறிமுகப் பகுதியில், தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அமையவுள்ள அனல்மின் நிலையங்களுக்கு கொண்டுவரும் நோக்கில் சீர்காழியில் இந்த துறைமுகம் அமைக்க போவதாக தெரிவிக்கபடுகிறது. சென்னை எண்ணூரில் நிலக்கரியை கையாள சட்டச் சிக்கல்கள் உள்ளதால் அங்கு இருந்து தள்ளி 280 கிலோ மீட்டர் தொலைவில் புதுச்சேரி காரைக்காலில் உள்ள "மார்க்" தனியார் துறைமுத்தில் நிலக்கரி கையாளபடும் என்றும். அதற்கிடையில் ஒரு புதிய துறைமுகமாக சீர்காழி துறைமுகம் உருவாக்கபடுகிறத
ு என்று குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்து என்ன சின்ன துறைமுகங்கள் யாரால் நடத்தபட உள்ளது என்பதை நான் சொல்லல இந்திய அரசின் அரசிதழில் வெளியாகி உள்ளது. அந்த பட்டியல் கீழ்கண்டவாறு
1.திருக்குவளை துறைமுகம்-டிரைட
ம் என்ற வடநாட்டு தனியார் நாகையில் அமைக்கவுள்ள துறைமுகம் (2008 ஏப்ரல் மாதம் வெளியான அறிக்கை).
2.வனகிரி துறைமுகம்-என்.எஸ்.எல் என்ற ஆந்திர தனியார் நாகையில் அமைக்கவுள்ள துறைமுகம் (2009 சூலை மாதம் வெளியான அறிக்கை).
3.காவிரி துறைமுகம்-பி. இ. எல் என்ற பிரித்தானிய தனியார் நிறுவனம் அமைக்கவுள்ள துறைமுகம் (2010 சனவரியில் வெளியான அறிக்கை).
4.பரங்கிபேட்டை துறைமுகம்-ஐ. எல். எப். எஸ் என்ற வடநாட்டு தனியார் நிறுவனம் கடலூரில் அமைக்கவுள்ள துறைமுகம் (2010 மே மாதம் வெளியான அறிக்கை).
5.தரங்கம்பாடி துறைமுகம்-செட்ட
நாடு மின்சாரம் என்ற தனியார் நிறுவனம் நாகையில் அமைக்கவுள்ள துறைமுகம் (2012 சனவரி மாதம் வெளியான அறிக்கை).
6.பனையூர்-செய்யூர் துறைமுகம் - கடலோர தமிழ்நாடு மின்சார நிறுவனம் (Coastal Tamil Nadu Power Limited) விழுப்புரம் மரக்காணம் அருகே அமைக்கவுள்ளது.
இப்படியாக இருக்க கடலோர சரக்கு போக்குவரத்துக்காக (BIMSTEC Coastal Shipment Agreement) ஒன்றை உருவாக்கி வருகின்றனர். கடந்த 2017 நவம்பர் 27,28ல் புதுடில்லியில் கூடிய பிம்ஸ்டெக் செயற்பாட்டு குழு இந்த ஒப்பந்ததை பற்றி விவாதித்துள்ளனர்.
இது நடைமுறைபடுத்தபட்டால் கடலோரத்தில் 20 கடல் மைலுக்கு நடைபெறும். அதாவது, மீனவர்கள் 20 கடல் மைலுக்கு அப்பால் சென்று தான் பிடிபார்களாம் அதனால் அந்த இடைவேளையில் இவர்கள் சரக்கு போக்குவரத்து நடத்துவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
இளைஞர்களே நன்கு சிந்திக்கவும் இப்படி பெரிய பெரிய கப்பல்கள் போக்குவரத்து நடந்தால் மீன்கள் உற்பத்தி கம்மியாவதை விட. கடலோரமாக நாட்டுபடகு வைத்து மீன் பிடிப்பவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விகுறியாகும்.
இரண்டாவது 2016 பிப்பரவரியில் தமிழ்நாடு சட்டபேரவையில், "தமிழ்நாடு மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம்-2016" (Tamil Nadu Marine Fishing Regulation (amendment) Act, 2016) என்ற சட்டத் திருத்ததை அப்போதை மீன்வளத்துறை அமைச்சரான கே. ஏ. செயபால் முன்மொழிந்தார். பாரம்பரிய நாட்டுபடகுகள் இனிமேல் கரையில் மீன் பிடிக்க கூடாது 5.5 கிலோ மீட்டர் தள்ளி சென்று தான் மீன்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் படகுகள் தயாரிக்க தேவையான பொருட்கள், வலைகள் பெருந்தொழில் நிறுவனங்களிடையே தான் வாங்க வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது.
இந்த சட்டம் மீனவர்களை வளர்க்குமா இல்ல மீன் தொழிலிற்கு ஆபத்து உண்டாக்குமா என்பதை மக்களிடமே விட்டுவிடுகிறேன்.
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 8 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Ingersol Selvaraj மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-10
புதுச்சேரி கடலோர பகுதியில் அமைந்திருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சின்ன முதலியார் சாவடியில் வசிக்கும் மீனவர் ராஜாமணி, கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை சொந்தமான வீடு வைத்திருந்தார். ஆனால், தற்போது வேறு இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இதற்கு காரணம் கடல் அரிப்பு ஆகையால் அவரால் மீன்பிடி தொழிலுக்கும் சரியாக போக முடிவதில்லை.
கடந்த 2010 டிசம்பரில் தந்திராயன் குப்பத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பால் அடித்து செல்லபட்ட பல வீடுகளில் ஒரு வீடு தான் ராஜாமணி அவர்களின் வீடு. இவரை போல தந்திராயன் குப்பம், சின்ன முதலியார்சாவடி, கோட்டக் குப்பம், சோதனை குப்பம், வைத்திக் குப்பம், குறிச்சிக் குப்பம் என பல பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்பது குறிபிடதக்கது.
கிழக்கு கடற்கரை சாலை காலாபட்டியிலிருந்து புதுச்சேரி வரை 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு இப்பாதிப்புகள் தற்போது உணரபடுகிறது.
சென்னை- திருவொற்றியூர்,
எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடல் அரிப்பால் மணல் மூட்டைகளை வைத்து மக்களே தடுத்து இருப்பதை அனைவரும் அறிந்தததே. மேலும், பட்டினம்பாக்கம், திருவான்மியூர், கோவளம் பகுதிகளில் வாழும் மீனவர்களும் கடும் அவதிக்குள்ளாகி இருப்பது குறிபிடதக்கது.
தூத்துகுடியின் தெற்கு பகுதியில் கட்டபட்ட துறைமுகத்தால் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வேலப்பட்டி, தருவாய்குளம் உள்ள இடங்களில் கடல் அரிப்பு அதிமாகி இருக்கிறது. திரேச்புரம் அருகே உள்ள விவேகானந்தர் நகர் உள்ள இடங்களில் கடல் கொந்தளிப்பால் 60 மேற்பட்ட வீடுகள் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது. வேம்பார் எனும் கிராமத்தில் 12 ஆண்டுகள் முன்பு 20 மீட்டர் தள்ளி இருந்த கடல் தற்போது 10 மீட்டர் தொலைவிற்கு வந்துவிட்டதை கவனிக்கவும்.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வந்த லைலா புயலை தொடர்ந்து ஏற்பட்ட கடல் அரிப்பால் 50 முதல் 100 மீட்டர் அளவுக்கு கடல் வெளிவந்துள்ளது. இதை இன்றளவும் எந்த கவனிப்பும் இல்லாத நிலையில் அந்த மீனவர்கள் 8 கிலோ மீட்டர் தொலைவில் தங்கள் படகுகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
சிதம்பரம் பிச்சாவரத்தை சுற்றி அமைந்துள்ள சின்ன வாய்க்கால், எம். ஜி. ஆர் திட்டு, கண்ணகி நகர், முடசல் ஒடை, பீலுமேடு போன்ற இடங்களும் கடல் அரிப்பால் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.
நாகை மாவட்டம் வானகிரி கிராம மக்கள் கடல் அரிப்பின் காரணமாக தங்கள் படகுகளை வேறு வழியில்லாமல் கடலிலே நிறுத்தும் நிலை ஏறபட்டுள்ளது.
நெல்லை மாவட்டதின் திசையன்விளை அருகில் உள்ள உவரியில் கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கபட்டுள்ளனர். மின்கம்பங்கள், தார் சாலைகள், வீடுகளும் கடல் அரிப்பால் பாதிக்கபடுகிறது என்று அந்த பகுதி மக்கள் குறிபிடுகின்றனர்.
கன்னியாகுமரியில் மேல மணக்குடியில் கட்டபட்டிருந்த மீனவர் ஒய்வறை 12/5/2007ல் இடிந்து விழுந்தது. தேங்காய்ப்பட்டினத்தில் கடலோரத்தில் இருந்த தென்னை மரங்கள் வேரோடு கடலில் சாய்ந்தது. இராசாக்காமங்கலம் துறை, பள்ளம், அன்னை நகர், தூத்தூரில் இருந்து நீரோடி செல்லும் பாதை முற்றிலும் கடலால் அரிக்கபட்டுவிட்டது. இது இல்லாம வல்லவிளையிலும் கடல் அரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. 1000 ஆண்டு பழமையான பகவதி அம்மன் கோவிலும் கடல் அரிப்பால் பாதிக்கபடுள்ளது.
இப்படி இயற்கை கடல் அரிப்புகளை வேகபடுத்துவதில் அரசாங்கம் கொண்டு வரும் இந்த சாகர்மாலாவும் வருகாலத்தில் பெரும்பங்கு வகிக்கும். இயற்கையை அழித்தால் அது எதிர்வினையை கொடுக்க தான் செய்யும் அதுவே இயற்கையின் விதி.
ஒரு திட்டம் என்பது முடிந்த அளவு இயற்கையுடன் இணைந்து மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதாக இருக்க வேண்டும் அப்போ தான் நாட்டில் உற்பத்தி அதிகமாகும் உற்பத்தி அதிகமானால் பொருளாதாரம் உயரும். அதை விட்டுட்டு ஒட்டுமொத்தமாக அழித்து மக்களை அப்புறபடுத்தி அவர்களின் வாழ்வையே அழித்து கொண்டு வரும் திட்டம் எப்படி வளர்ச்சி திட்டமாகும்???
வளர்ச்சி வேலைவாய்ப்பு என்ற இரண்டு சொல்லில் மயங்குவதற்கு முன்பு சற்று ஆளமாக சிந்திக்கவும் ஏன் மீன் பிடி தொழிலும் தான் வேலைவாய்ப்பு உள்ளது அதை உயர்த்தினால் ஆண்டுக்கு 802 கோடி வருமானம் வரும் மீன்வளத்தில் இருந்து மேலும் அதிகரிக்கலாமே. அது மக்களின் வாழ்வையும் உயர்த்தும் உணவு தேவையையும் தீர்க்கும், பொருளாதாரத்தையும் உயர்த்தும் தானே???
அப்படி இல்லனா கடல் மூலமாக மின்சாரம் தயாரிக்கலாமே (Tidal wave Energy) அது நூறு சதவிதம் இயற்கையுடன் இணைந்தது தானே மற்ற நாடுகள் ளா இதுல வெற்றியும் கண்டுருக்காங்களே அதை பண்ணலாமே??
ஆக, சாகர்மாலா என்ற பெயர் இயற்கை மொத்ததையும் அழித்து கடல் மக்களை காவு வாங்க இவர்கள் தனியாரிடம் குத்தகைக்கு விடும் திட்டமாக தான் அது இருக்கிறது. கன்னியாகுமரி மக்களே படிப்பறிவில் முன்னிலையில் இருக்கும் நீங்க பொறுமையாக ஆய்வு செய்யுங்கள் நான் சொல்வதையாவது ஆய்வு பண்ணுங்க இவன் சொல்வது சரியா என்று ஆய்வு பண்ணுங்க.
கன்னியாகுமரி என்றாலே இயற்கை பேரழகு இன்றும் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் கன்னியாகுமரி தேடி வரகாரணம் அதுவே என்பதையும் மறந்துவிடாதீங்க, பூமியானது மனிதர்களும் பொருளாதாரமும் வளர்ச்சி பெற மட்டுமள்ள அனைத்து உயிர்களும் வாழவே தான் உள்ளது என்பதை சொல்லிக் கொண்டு பதிவுகளை முடிகிறேன்.
இன்னும் நிறைய விடயங்கள் உள்ளது அதை என் அறிவார்ந்த இளைஞர்கள் ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் கையில் உங்கள் இயற்கை வளம் மிகுந்த குமரி என்று சொல்லி இத்தோடு பதிவுகளை முடித்து கொள்கிறேன்.
பகுதி 9 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
நன்றி
நம் வரும் தலைமுறைக்கு நல்ல காற்று நீர் உணவை விட்டு செல்வோமாக.
வாழ்க வளமுடன்
வாழ்வோம் இயற்கையுடன்
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari
# savetamilnadu
1 மணி நேரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக