செவ்வாய், 19 ஜூன், 2018

தெலுங்கு வடுகு ஆந்திரா பெயர்க்காரணம் வரலாறு ஒரிசா தொடர்பு கலிங்கம்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 13
பெறுநர்: எனக்கு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
அழகன் பத்தர் மற்றும் 4 பேருடன் இருக்கிறார்.
அறிந்துகொள்வோம்..
# தெலுங்குப் பெயர் வரலாறு....
தெலுங்கிற்கு வடுகு ஆந்திரம் என்னும் பெயர்களுண்டு. தெலுங்கு என்பது தெலுங்கராலேயே இடப்பட்டது; # வடுகு என்பது தமிழராலும், ஆந்திரம் என்பது ஆயராலும் இடப்பட்டன.
தெலுங்கு தமிழ்நாட்டிற்கு வடக்கில் வழங்குவதால் வடுகு எனப்பட்டது. தெலுங்கு என்பதன் பண்டை வடிவம்
# திரிலிங்கம் என்பது. இது முதலாவது தெலுங்குநாட்டுப் பெயராயிருந்து பின்பு அந் நாட்டு மொழியைக் குறித்தது. ஆந்திரம் என்பதும் இங்ஙனமே.
1.தாலமி என்னும் ஞால நூலாசிரியர் 'த்ரிக்ளுப்தொன்' 'த்ரிக்ளுப்தொன்', 'Triglupton' `Triglupton' என ஒரு கங்கைக்கரை நாட்டையும்,
2.பிளினி என்னும் சரித்திராசிரியர் 'மெர்டொகலி கம்' (மூன்று கலிங்கம்) என ஓர் இந்திய நாட்டையும் குறித் திருப்பதனாலும்,
3.ஒரு பண்டை இந்திய அரச மரபினர் 'திரிக லிங்கத் தலைவர்' என்னும் பட்டத்தைச் சூடிக் கொண்டதாக ஒரு கல்வெட்டுக் கூறுவதாலும்,
4.புராணங்களிலும் ஒரு செப்புப் பட்டயத்திலும் 'திரிகலிங்கம்' என்னும் பெயர் காணப்படுவதாலும்,
5.பிளினி என்பவர் கலிங்கத்தினும்(
Calingae) வேறாக மக்கோ-கலிங்கே (Macco-Calingae), கங்கரிதெசு - கலிங்கே
(Gangaridas - Calingae) என இரு நாடுகளைக் குறிப்பதாலும்,
6.பாரதத்துள் கலிங்கர் மும்முறை குறிக்கப்படுவதாலும்,
7.கலிங்கம் (ஒரிசா மாகாணமும் கஞ்சங் கோட்டகமும்) என ஒரு தெலுங்கு நாடிருந்ததாலும்,
8.பண்டைத் தெலுங்கு நாட்டின் ஒரு பாகம் கலிங்கம் என்னும் பொதுப்பெயர் கொண்ட முப்பகுதியா யிருந்ததென்றும், அதனால்
# திரிகலிங்கம் எனப்பட்ட தென்றும் அறியலாம்.
திரிகலிங்கம் என்பது, முறையே திரிலிங்கம் - தெலுங்கம் - தெலுங்கு என மருவிற்று.
தாரநாதன் என்னும் திபேத்தச் சரித்திராசிரியர் தெலுங்கு நாட்டைத் திரிலிங்கம் என்றும், அதன் ஒரு பகுதியைக் கலிங்கம் என்றும், அதன் தலைநகர் கலிங்கபுரம் என்றும் குறித்துள்ளார்.
தெலுங்கு என்னும் பெயர் தெலிங்க, தைலிங்க, தெலுகு, தெனுங்கு தெனுகு என்னும் பல வடிவங்களிலும் தெலுங்கர்க்குள் வழங்கிவருகின்றது. இவற்றுள் தெனுகு என்னும் வடிவத்தைச் சிறந்ததாகக்கொண்டு அதற்குத் 'தேன் போன்றது' என்னும் பொருள் கற்பிப்பது தெலுங்குப் பண்டிதர் வழக்கம்!*
தெலுங்குநாட் டெல்லை
தென்னிந்தியாவில், 1.கிழக்கே கடற்கரை யொட்டிப் பழவேற்காட்டிலிர
ுந்து சிக்காக்கோல் வரைக்கும், 2,மேற்கே மராட்டிய மைசூர்ச் சீமைகளின் கீழெல்லை வரைக்கும், 'கொடுக்கப்பட்ட கோட்டங்கள்' (Ceded districs) 3.கர்நூல் ஐதராபாத்துச் சீமையின் பெரும்பகுதி 4.நாகபுர நாட்டின் ஒரு பகுதி கோண்டுவனம் ஆகிய இடங்களில் பெரும்பாலும் தாய் மொழியாகப் பேசப்படுவது தெலுங்கு.
@# ஐயன்_பாவாணர் ..
திராவிடத்தாய் நூலில்...
++++
++++
இவன்,
தனித்தமிழ் மீட்பு புரட்சிப்படை...
ந.சுரேசு அகப்படை மள்ளன்..

வடுகர் தெலுங்கர் வேர்ச்சொல் சொல்லாய்வு திரிவடுகம் எல்லைகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக