ஞாயிறு, 17 நவம்பர், 2019

ஐயப்பன் வரலாறு பாண்டியர் வாரிசு பௌத்தம் தொடர்பு இன்று தெலுங்கு பிராமணர் கையில்

aathi1956

<aathi1956@gmail.com>
23 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:40
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
தமிழர் கோவிந்த ராசு ராசு
Govind Raj:
ஐயப்பன் கோயில் - தெரியாத உண்மைகள்
கேரளா சபரிமலையில் உள்ள ஐயப்பன், உண்மையில் புராண கதை அல்ல, அது வரலாற்று பூர்வமான உண்மை. ஆனால் அந்த உண்மை இந்து பக்தர்கள் விரும்பும் உண்மை அல்ல, ஐயப்பன் உண்மையில் இந்து கடவுள் அல்ல அது ஒரு பவுத்த கோயில், அதை விட வினோதம் என்னவென்றால், அய்யப்பனே புத்தரை வணங்கி வந்த ஒரு அரசகுடும்ப இளவரசன் என்பது தான்.
இங்கு சொல்லப்பட்டிருப்பது, கற்பனை அல்ல, பந்தள அரசவம்சத்தில் வந்த, கேசரி பாலக்ருஷ்ண பிள்ளை எழுதிய Followers, மற்றும் ஈழவர்செம்பாட்டு என்ற நூலிகளில் இருந்து பெரும்பகுதியும் நலன்கல் கிருஷ்ணபிள்ளை மற்றும் டாக்டர்.எஸ்.கே.நாயர் ஆகியோரின் புத்தகங்களிலிருந்தும், திரு.ஜம்னாதாஸ் எழுதிய திருப்தி புத்தர் கோயிலே என்ற புத்தகத்திலிருந்தும் சொல்லப்படும் வரலாறே
ஐயப்பன் பற்றிய புராண கதைகளை சுருக்கமாக பார்த்தால், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்தவன், கழுத்தில் மணியுடன் காட்டில் குழந்தையாக பந்தள ராஜனால் கண்டெடுக்கப் பட்டு, அவனிடம் வாழ்கிறான் (காது கேளாத வாய்பேச முடியாத குருவின் மகனை குணப்படுத்துகிறான் (கேரள கிருஸ்த்துவ மதத்தின் தாக்கம்), சின்னம்மாவின் சூழ்ச்சியால் காட்டுக்கு புலிப்பால் கொண்டு வர போகிறான், அங்கே மகிஷியை கொல்கிறான், பின்னர் உதயணன் என்ற கொள்ளையனை கொல்கிறான், பின் சபரி மலையில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்கிறான். உண்மையிலேயே நான் படித்த புராண கதைகளில் அந்த கதாசிரியரின் ஒரு தனித்துவ முத்திரை (Author’s Personal Touch) இல்லாத கதை இதுவென்று தான் சொல்வேன்.
ஐயப்பனின் உண்மை வரலாறு என்னவென்று பார்ப்போம், இதற்கு முன் பாலக்காட்டில் நம்பூத்ரிகள் அந்நாட்டு மன்னனால் விரட்டி அடிக்கப்பட்ட வரலாறில் நாம் கிபி 1200-ல் சடவர்ம சுந்தரபாண்டியன் மற்றும் சடவர்ம வீரபாண்டியன் இருவருக்கும் ஏற்பட்ட வாரிசு தகராறில் மாலிக்காபூர் (உண்மையில் மாலிக்காபூர் இஸ்லாமிய மதத்தை தழுவிய குசராத்தி பார்பனன், அலாவுதீன் கில்ஜியிடம் அடிமையாகா வேலை பார்த்தவன், கில்ஜியின் ஓரினசெர்க்கைக்க
ு பலநாள் பயன்பட்டு வந்த இவன் கில்ஜியின் கடைசி காலத்தில் இந்த ஒரே ஒரு திறமையின் அடிப்படையில் படைத்தலைவன் ஆக்கப்பட்டவன், கில்ஜி இறந்த பிறகு, சக தளபதிகளால் கொல்லப்பட்டவன்) உள்ளே நுழைந்து பஞ்சாயத்து செய்ததை பார்த்தோம், இதில் தோற்று ஓடிய வீரபாண்டியனும் அவனது குழுவும் கேரளா நாட்டில் அடைக்கலம் புகுந்தனர். அங்கே பந்தள நாட்டில் கைபுலதம்பன் என்ற மன்னன் அவர்களுக்கு அடிக்கலம் தந்தான். கைபுலத்தம்பன் வாரிசு இல்லாமல் இறந்து போக நாயர்கள், தமக்குள் ஏற்ப்பட்ட சண்டையில், யாருக்கும் வேண்டாம், பாண்டியனே மன்னனாக இருக்கட்டும் என்று அவனை முடிசூட்டுகின்றனர்.
கி.பி. 1300-களில், பஞ்சம் காரணமாக பாண்டிய நாட்டிலிருந்து சிறு படைகளோடு, கொள்ளையடிக்க கேரள காட்டுபகுதிக்கு வருகிறான் உதயணன் என்ற பாண்டிய மறவர் வீரன். இவன் அங்கு தலப்பாரா, இஞ்சிப்பாரா, கரிமலா ஆகிய இடங்களில் கோட்டைகள் கட்டி வருவோர் போவோரிடம் கொள்ளை அடித்து வருகிறான். இந்த பாதை, பழங்காலத்திலிருந்தே, கடல் வழியே வரும் அராபிய ராவுத்தர்கள் (இஸ்லாம் வருவதற்கு முன் குதிரை வணிகர்களின் பெயர்), முண்டகாயம், இடுக்கி, பந்தனம்திட்ட பகுதிகளில் வெள்ளாளர்கள் (விவசாயகுடிகள்) வியாபாரத்திற்கு பயன் படுத்திவந்த பாதையாகும்.
சபரிமலையில் இருந்த புத்த கோயிலின் பழைய பெயர், அவலயோகிச்வர விகாரம், அங்கே மக்கள் வழி பட்ட தெய்வம் தர்ம சாஸ்தா என்ற அவலயோகிச்வர ஸ்ரீபுத்தர். சபரிமலையை சுற்றி உள்ள பகுதிகளின் பேர்கள் பெரும் பாலும் பள்ளி, காவு என்ற சொல்லை கொண்டிருக்கும் கருநாகப்பள்ளி, பள்ளிக்கால், பரணிக்காவு, புத்தனுர்(போத்தனூர்). சாத்தன், புத்தஞ்சன், சாச்த்தவு போன்ற பெயர்கள் புத்தரை குறிக்கும் சொற்களே.
முன்னர் சொல்லப்பட்ட கொள்ளையன் உதயணன், பலமுறை அவலயோகிச்வர விகாரத்தை கொள்ளையடிப்பது வழக்கம், அங்கே அருகே இருந்த அலங்காடு, அம்பலப்புழா என்ற இரண்டு ஊர்மக்கள் அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற சண்டையில் இருந்த்தது உதயணனுக்கு, தன் கொள்ளை வேட்டைக்கு வசதியாக இருந்த்தது.
ஒருமுறை உதயணன், பந்தள நாட்டிக்கு வந்தான், (பந்தளம் – பத்து தளம் – பத்து ஊர்களை கொண்ட ஒரு சிறு நாடு), அவன் வந்த போது நாட்டில், அரசன் மற்றும் முக்கய வீரர்கள் யாரும் இல்லை, வயதான் தளபதி காம்பிள்ளில் பணிக்கர் மட்டுமே இருந்தார், வந்த உதயணன் அரசனின் தங்கையான இளவரசியையும் தூக்கி செல்கிறான்.
அவளை காதலித்து வந்த பணிக்கரின் மகன், உதயணன் கோட்டைக்குள் ரகசியமாக புகுந்து அவளை மீட்கிறான். ஆனால் தப்பித்த இளவரசி நாட்டுக்கு திருப்பினால் தான் புனிதம் இல்லாதவள் என்று நம்பூதிரிகள் என்று சொல்லுவார்கள் என சொல்ல இருவரும், பொன்னம்பலமேடு காட்டுபகுதிக்குள் சென்று வசிக்கிறார்கள், அவர்களுக்கு ஐயப்பன் என்ற மகன் பிறக்கிறான். இங்கு அவர்களுக்கு பெரிதும் உதவுவது பெரிசெரி பிள்ளை என்ற வேளான்குல தலைவன், இவரே பின்நாளில் ஐயப்பனின் ம
ாமன் என்று அழைக்கப்படுகிறார். ஐயப்பன் பிறகு செம்பொறா குருகுலத்தில் களரி பயின்று வருகிறான்.
பிறகு ஒரு நாள் பந்தள ராஜா, போனம்பலமேடு பகுதியில் வேட்டைக்கு வரும் போது, தன தங்கையை பார்த்துவிட, எனக்கும் வாரிசு இல்லை, என் மருமகன் தான், இனி நாட்டை ஆளவேண்டும், என்று கூறி அழைத்து செல்கிறான்.
ஒருமுறை, காட்டெருமைகளின் தொல்லை அதிகமாக இருக்க, ஐயப்பன் அவற்றை விரட்ட, சிலகாலம் தனகி வேட்டையாடிய இடமே எரிமேலி (எருமை கொல்லி) பகுதி.
இறுதியாக உதயணனை அழித்து, அவலயோகிச்வர விகாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தன பொறுப்பை நிறைவேற்ற ஐயப்பன் முடிவுசெய்கிறான். உதயணன் இதற்குள் பெரும் பலத்துடன் வளர்ந்து விட்டதால், தனியாக முடியாது என்று சுற்றி உள்ள மற்ற அரசர்களின் உதவியை நாடுகிறான், முதலில் காயம்குளம் அரசனை நாடுகிறார், அவர் தன மக்கள் கடற்கொள்ளையரால் அவதிபடுவதாகவும், அவர்களை அடக்கினால், தான் உதவ தயார், என்று கூறுகிறார். காரணவர் என்ற அந்த நாட்டின் படைத்தலைவனின் உதவியோடு, ஐயப்பன் கடற்கொள்ளையரை வெல்கிறான், அந்த கொள்ளையர் தலைவன் வாவர் என்ற பெயர் கொண்ட இஸ்லாமியன், ஐயப்பன் அவனின் விரத்தை மெச்சி தன் படைகளுடன் சேர்த்து கொள்கிறான்.
பின்னர், நட்பு அரசர்கள் படைகளுடன், பந்தள நாட்டின் தலைமை தளபதி கடுத்தநாயர், வில்லன், மல்லன், என்ற இருசிறந்த வீரர்கள், மற்றும் வாவர் ஆகியோரின் தலைமையில் பெரும் படையை சேர்த்துக்கொண்ட
ு உதயணனை அழிக்க புறப்படுகிறான்.
தன் படைகளை முன்று பிரிவுகளாக ஐயப்பன் பிரிக்கிறார்.
1. வாவரின் தலைமையில் ஆலங்காட்டு யோகம்
2. கடுத்தநாயர் தலைமையில் அம்பலப்புழா யோகம்
3. வில்லன் மல்லன் தலைமையில் பந்தலநாடு யோகம்
என்பவை அவற்றின் பெயர்கள்
ஆலங்காட்டு யோகம் மற்றும் அம்பலப்புழா யோகம் படைகள் போரிட்டதையே இன்று பெட்டதுள்ளல் என்ற பழக்கமாக மாறிவிட்டது. சண்டைக்கு புறப்பட்ட படைகள் அவலயோகிச்வர விகாரத்தை நெருங்கிய போது, அமைதியான கோயிலின் அருகே செல்லும் போது போர்கருவிகளை எடுத்து செல்லக் குடாது என்று அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கிழே வைத்து விட்டு செல்ல சொன்னான். அதுவே இன்று பக்தர்களின் சரம்குத்தி என்ற பழக்கமாக மாறிவிட்டது.
இம்மூன்று படைகளும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு என்று மூன்று திசைகளிலிருந்து தாக்க நாலவது திசையில் அரபிக்கடல் வழிமறிக்க இறுதியாக கொள்ளையன் உதயணன் கொல்லப்படுகிறான்.
அவலயோகிச்வர விகாரத்தை புனரமைத்து, புதிய அவலயோகிச்வரர் சிலையை நிர்மாணிக்கும் வரை இப்போது சபரி மலையில் மணிமண்டபம் இருக்கும் இடத்தில் அமர்ந்து மேற்பார்வை செய்துவந்தான், பின்னர் தன் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்தான்.
1300-ல் நடந்த இந்த வரலாறு எப்போது புராணமாக மாற்றப்பட்டது என சரிவர தெரியவில்லை.
அனாலும் சபரி மலை தர்ம சாஸ்தா கோயில் என்பதை அங்கே உள்ள வழக்கங்களை கொண்டு அறியலாம்.
உதாரணமாக தர்மம் (அ) தம்மம் என்பது புத்தமத வார்த்தையே, புத்தமத நூலான அமரகோசம் “சத்தா தேவ மனுசானாம்” சாத்தான் என்றால் புத்தர் என்று சொல்கிறது. பழைய புராண நூலான விஷ்ணு புராணத்தில் ஐயப்பனை பற்றிய எந்த குறிப்பும் இல்லை ஆனால், பிற்காலத்தில் எழுதப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தில் ஐயப்பன் வருகிறார், இதிலிருந்து நாம் அறிவது பிற்காலத்தில் பாகவதத்தில் ஐயப்பன் செர்க்கப்படிருக்க வேண்டும் அல்லது பாகவதமே 1400-பின் தான் எழுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஐயப்பன் கையில் காட்டும் சின் முத்திரை, உலகில் உள்ள எல்லா புத்த சிலைகளிலும் காண முடியும். ஐயப்பனின் அய்துங்கள் எல்லாமே போதிசத்துவரின் ஆயுதங்களே.
பிரபல வரலாற்று ஆசிரியர் வானமாமலை கூறுவது என்னவென்றால், புத்தமதம், தமிழ்நாட்டில் அழியவில்லை, பவுத்த கதைகள் அனைத்தும் விஷ்ணு கதைகளாக மாற்றப்பட்டுவிட்டன, அய்யனார், சாஸ்தா, தர்மராஜா, போதிராஜா இவை அனைத்துமே புத்தர் வழிபாடே.
இவை எல்லாவற்றையும் கடந்து அய்யப்பன் கோயில் வழி பாட்டில் ஒருவித சமத்துவத்தை காணலாம், எல்லா சாதியினரும் தன குழுவுக்கு குருசாமி ஆகலாம், தீவிரமான விரதங்கள், விரதம் இருக்கும் ஒரு பார்பானை காட்டுங்கள் பார்போம்
பத்மசம்கிதை என்ற வேதபுராண நூல், ஐயப்பன் கோயிலில் பூஜை செய்ய வேண்டியது பரசவா என்னும் சூத்திரனாக இருக்க வேண்டும் என்கிறது, அனால் அதையும் பார்பனர் ஏமாற்றி அவர்க்கே எடுத்து கொண்டார்கள்.
இதில் மோற்றும் ஒரு வேடிக்கை என்னவென்றால், கேரளாவில் இருக்கும் கோயிலில், தலைமுறை தலைமுறையாய் பூஜை செய்பவர்கள் ஆந்திரா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட தெலுங்கு பார்பனர், விஜயநகர பேரரசை கடைசி வம்சமான அரவிடு வம்சத்தினரான நாயகர்கள் ஆண்ட போது இந்த அவலயோகிச்வரர் இந்து ஐயப்பனாக மாற்றப்பட்டிருக
்கலாம்.
இதற்கும் ஒரு காதலி பரசுராமன் ஆந்திர தேசத்தில் இருந்து இரண்டு பார்பனரை அய்யப்பன் கோயிலில் பூஜை செய்ய கூட்டிவந்தான், அவர்களை ஆற்றை கடந்து வர சொன்ன போது, ஒரு பார்பான் தண்ணியின் மீது ஏறி நடந்துவந்தான், அவனை பரசுராமன் தாரைநேன்னிள்ளார் என்றான
், அடுத்தவன் ஆற்றுநீரை இரண்டாக பிளந்து நிற்கச்செய்து, அடியிலிருந்த மண் தரையில் நடந்து வந்தான் அவனை தாளமண் என்று அழைத்து நீ தான் உயர்ந்தவன் எனவே நீ தான் அய்யப்பனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்றான் அன்று முதல் இன்றுவரை தாளமண் குடும்பத்தினரே அங்கு பூஜை செய்து வருகின்றனர்,
1821-ல் பந்தளம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் சேர்க்கும் போது சுமார் 48 கோயில்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சேர்க்கப்பட்ட போது சபரி மலையும் செர்க்கபடுகிறது. பின்னர் இப்போது அங்கிருக்கும் சிலையே 1910-ல் தான் நிறுவப்படுகிறது. 1975-ல் அங்கிருந்த கோயில் தீக்கிரையாகிறது (அல்லது ஆக்கப்பட்டதா தெரியாது) அதன் பின் இப்போது நாம் பார்க்கும் வடிவில் கோயில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு அதன் பழைய பவுத்த அடையாளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது.
8 ஏப்ரல், PM 10:10 · Facebook
கோயில் 

Aathimoola perumal prakash 
search பாண்டி மகன் சபரிமலை ஐயப்பன் வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக