திங்கள், 21 மே, 2018

கருணாநிதி ஆட்சி கலைப்பு ஈழம் காரணம் இல்லை பொய் புரட்டு பித்தலாட்டம் திரிப்பு திமுக

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 30
பெறுநர்: எனக்கு
தி.மு.க ஆட்சி ஏன் கலைக்கபட்டது?
கடந்த சில மாதங்களுக்கு முன் தி.மு.க தலைவரின் ஏமாற்று அறிக்கையில் "ஈழ விடுதலைக்கா எம் கழகம் இரு தடவை ஆட்சியை இழந்துள்ளது" என்று குறிப்பிட்டு இருந்தார். இவ்வறிக்கையின் உண்மைகளை அறிவதே இக்கட்டுரையின் பிராதான நோக்கம். தி.மு.க தலைவரின் பேச்சு திறன் முலம் அவர் நடந்த வரலாற்றை திரிபுபடுத்துகின்றார்.
இரு ஆட்சி கலைப்புக்கான காரணத்தை சற்று விரிபாகவே பார்க்கவேண்டியுள்ளது.
முதலாவது ஆட்சி கலைப்பு
முதலாவது ஆட்சி கலைப்பு 1976 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சாராக இருக்கும் போது நடந்தேறியது. அப்போது மத்தியில் இந்திரா பிரதமராக இருந்தார். இக்கலைப்புக்கு முன் மொழிந்தவர் மறைந்த மக்கள் திலகம் எ.ம்.ஜி.ஆர் ஆகும். தி.மு.க வின் ஆட்சியில் உழல்/லஞ்சம் தலை விரித்தாடுகின்றது என்ற புகாரின் அடிப்படையில் இந்திய அரசியல் சட்டம் 356 ஆம் பிரிவு உபயோகித்து தி.மு.க வின் ஆட்சி கலைக்கபட்டது.
தி.மு.க ஆட்சி 15/3/1971 தொடக்கம் 31/01/1976 வரை நிடித்தது. அதன் பின்னர் ஆட்சி கலைப்பால் ஜானாதிபதி ஆட்சி 30/06/1977 வரை நிடித்தது. அதன் பின்பு நடந்த தேர்தலின் எம்.ஜி.ஆர் அமோக வெற்றி பெற்றார்.
இதன் பின்பு சுமார் 12 ஆண்டுகாலம் தி.மு.க வால் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. எம்.ஜி.ஆர் ரின் மறைவுக்கு பின் 1989 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க அரியனை எறியது. அதுவும் அதிக காலம்
நிடிக்கவில்லை!!
எம்.ஜி.ஆர் ரின் புகார் தவிந்து இன்னுமொருகாரணமும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் உண்டு. அப்போது மத்தியில் இந்திரா பொது தேர்தலை தவிர்ப்பதற்காக 26/06/1975 இல் அவரசகால நிலையை பிரகனப்படுத்தி இருந்தார். தனக்கு ஒத்துழையாத தலைவர்களை நாட்டின் பாதுகாப்பை காராணம் காட்டி சிறைப்படுத்தினார், அத்துடன் சிலரின் ஆட்சியும் கலைக்கபட்டது.
தி.மு.க அவரசகால நிலையை எதிர்த்து பெரும் போராட்டங்களை நடத்தியது. இந்த தலையிடியை போக்குவதற்கு இந்திரா எம்.ஜி.ஆர்r
இன் ஒரு கருவியாக பயன் படுத்தினார். இதைப்போலவே இந்திராவால் குஜராத் ஆட்சியும்
கலைக்கபட்டது.
இக் காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் விரியம் அடையவே இல்லை ஆனால் அதே நேரத்தில் தான் த.வி.கூ உதயமானதும் அதைத்தொடர்ந்த வட்டுகோட்டை ஈழ பிரகடனமும்.
ஆகவே கருணாநிதி சொல்வது போல் ஆட்சி கலைப்புக்கும் ஈழ போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தோன்றவில்லை.
இரண்டாம் ஆட்சி கவிழ்ப்பு
இரண்டாம் ஆட்சி கவிழ்ப்பு 30/01/1991 இல் நடந்தேறியது. அப்போது சொல்லப்பட்ட காரணம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும் அதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுப்பதற்கு தி.மு.க அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சட்டம் ஒழுங்கு சீர்குலைய காரணமானக இருந்தவர்கள் ஈழ போராளிக்குழுக்கள் (குறிப்பாக புலிகள்) என்றும், அவர்களுக்கு தி.மு.க அரசு துனைபோவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த காலகட்டத்தில் தான் ஜெயலலிதாவின் ஈழ/புலி எதிர்ப்பு நிலை ஆரம்பமாகின்றது. அதே சமயம் தி.மு.க வுக்கு ஈழ/புலி ஆதரவு சாயம் பூசப்பட்டது. ஆகவே ஜெயலலிதாவின் ஈழ/புலி எதிர்ப்பு நிலைக்கு முதன்மை காராணம் அரசியலே என்பது தெளிவாகின்றது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு அப்போது நடந்த மிக முக்கியமான சம்பவம், ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் பத்மநாபாவின் படுகொலை. இது ஆனி மாதம் 1990 இல் சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இவருடன் 13 ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களும், 2 பொதுமக்களும் கொலை செய்யபட்டனர்.
கவனிக்கவும், ஆட்சி கலைக்கபட்டது 30/01/91 இல் படுகொலை நடந்தது 19/06/1990 இல். ஏன் உடனே ஆட்சியை ஜானாதிபதி கலைக்கவில்லை?
காரணம் அ.தி.மு.க வுக்கு இசைவான அரசு அப்போது மத்தியில் இல்லை என்பாதால்.
மத்தியில் யார்?
89 இல் நடந்த பொது தேர்தலில் ராஜீவ் தலமையிலான கூட்டனி (அ.தி.மு.க உட்பட) தோல்வியை தழுவியது, ஜானதா தளம், பி.ஜே.பி கூட்டனி ஆட்சியை கைப்பற்றயது. வி.பி சிங் (ஜானதா தளம்) 02/12/1989 இல் பிரதம மந்திரியானர். ஆனால் அவரால் 10/11/1990 வரை தான் ஆட்சி செய்யமுடிந்தது. இவரின் காலத்தில் தான் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.
ஜானதா தளத்தில் இருந்து பிரிந்து வந்து சமயாவாடி ஜானதா தளம் என்ற புதுக்கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சியான காங்கரசின் ஆதரவோடு சந்திர சேகர் வி.பி. சிங் க்கு பின் பிரதமனானர்.
இப்போது அ.தி.மு.க வுக்கு சார்பான ஆட்சி மத்தியில், ஆகவே பழைய ( 6 மாதத்துக்கு முன்) படுகொலையை காரணம் காட்டி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று தி.மு.க வின் ஆட்சி 30/01/1991 கலைக்கப்பட்டது.
சந்திர சேகர்க்கான ஆதரவை ராஜீவ் விலக்கிக்கொண்டதால் மறுபடியும் பொது தேர்தல் 91 இல் வந்தது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தான் அவர் 21/05/1991 இல் கொலை செய்யப்பட்டார்.
இரு ஆட்சி கவிழ்ப்பிலும் மாநிலத்தின் எதிர்க்கட்சியான அ.தி.மு.க முன் மொழிய, மத்தியில் அதிகாரத்தில் இருந்த காங்கரஸ் வழி மொழிய ஜானாதிப்தி நிறைவேற்றினார்.
இதில் ஈழ போராட்டமோ/புலிகளோ எங்கே வருகின்றார்கள். இரண்டாம் ஆட்சி கலைப்பில் பத்மநாபாவின் படுகொலை ஒரு பங்கு வகிக்கிறது என்பது உண்மையே தவிர அது முதன்மை காரணம் அல்ல.
-----------
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் »
தமிழகம்
ஆட்சிக் கலைப்பு: கருணாநிதி சொல்வதை தமிழர்கள் நம்ப மாட்டார்கள் - ராமதாஸ்
Published:March 29 2009, 11:37 [IST]
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக கருணாநிதி ஆட்சி 2 முறை கலைக்கப்படவில்லை. இதுதொடர்பாக அவர் சொல்வதை இனியும் தமிழர்கள் நம்ப மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஏன் கலைக்கப்பட்டது திமுக ஆட்சி?
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை தமிழர்களுக்காக, இரண்டுமுறை ஆட்சியைப் பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று கலைஞர் கூறிவருகிறார். இரண்டு முறை ஆட்சியை இழந்தது ஈழத் தமிழர்களுக்காகவா? என்பதை அலச வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
முதன் முதலில் 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசான காங்கிரஸ் அரசால், அன்றைய தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை. பிறகு, ஆட்சி கலைப்புக்கு என்ன காரணம்?
நெருக்கடி நிலைக்கு எதிராக தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் மிகவும் கோபம் கொள்கிறார். அதைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி ஆட்சி கலைக்கப்படுகிறது.
தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.
1983-ம் ஆண்டில் தான், இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியது. அப்போது, கலைஞர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்யும்படி அப்போது யாரும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை. அவராகவே ராஜினாமா செய்தார்.
இந்திய அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறி விட்டது; எத்தனையோ வெளிநாடுகளின் பிரச்சினையை ஐ.நா. கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாரா முகமாக இருந்துவிட்டது.
நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது என்றெல்லாம் குற்றம் சாற்றி ராஜினாமா செய்தார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலேயே மேல் சபைக்கு போட்டியிட்டு உறுப்பினராகிவிட்டார் என்பது வேறு விவகாரம்.
அதற்கு பின் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி கண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. 37 தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சியை இந்திராகாந்தியின் துணையுடன் கலைத்தார். அடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார். இது வரலாறு.
1991-ம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி மாதத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? வி.பி.சிங்குடன் மிக நெருக்கமாக இருந்தார் என்பதற்காக, அப்போது தி.மு.க. அரசு ராஜீவ்காந்தியின் ஆசியோடு கலைக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில், ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதாகும்.
எனினும், அரசியலை நன்கு அறிந்த அனைவருக்கும் தெரியும், அப்போது எதற்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்று சுருங்கச் சொன்னால் இரண்டு முறை தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல், டெல்லியில் ஏற்பட்ட அதிகார மாற்றங்கள், உருவான கூட்டணி மாற்றங்கள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத் தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் ஆட்சி பறிக்கப்படவில்லை.
எனவே, ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று இனிமேலும் கூறினால் அதனை தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்காது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

இராமதாசு அறிக்கை பாமக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக