திங்கள், 21 அக்டோபர், 2019

வேளாளர் வேளிர் தொடர்பு இலக்கியம் தொல்காப்பியம்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 14 ஜூலை, 2018, பிற்பகல் 6:55
பெறுநர்: எனக்கு
அழகன் ஆசிரியர்
வேளாளரே வேளிர் ஆவர்:
பிற்காலத்தில் # அவ்வேளிர் பால் மகட் கொண்டு சம்மந்தம் பெற்ற பேரரசர்கள் அவரது சிற்றரசுகளை ஆதரித்துவந்ததோடு, அவரினத்து
# வேளாளர் பலரைத் தம் அரசியற்கு உரியவராக்கி நாடுகள் பல அளித்தும்,வரிசைகள் கொடுத்தும் அமைச்சாராகவும் தண்டத் தலைவராகவும் நியமித்துப் போற்றி வந்தனர்.
தொல்காப்பியனார்,இவ் வேளாளரில் தாழ்ந்தவர் பலரால் மிகுதியும்கொள்ள
ப்பட்டு வந்த தொழிலால் பற்றி "வேளாண்மாந்தர்க் குழுதூணல்ல தில்லதென மொழிப் பிறவகை நிகழ்ச்சி" என மரபியலில் கூறினாரேனும், தங்காலத்தே இன்னோர் சிற்றரசாய்ச் சிறந்து விளங்கினமையாளும், இவரினத்தார் தமிழ் மூவேந்தர் சார்பில் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தாமையானும்,
"வேந்துவினை யியற்கை வேந்தனி னொரீ இய
ஏனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே"
வில்லும்வேலுங் கழலுங் கண்ணியும்
தாரும் ஆரமுந் தேரும் வாளும்
மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய"
வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே."
என்னும் சூத்திரங்களால், இக்குலத்தாரையே பெரும்பான்மை கருதி,அவர்க்கு அரசர்க்குரிய வரிசை பலவும் கூறிப்போதல் காணலாம்.இது பற்றியே உரையாசிரியர்களும் வேளாளரது உயர்வுபுலப்படும் இடமெல்லாம் அதனை அவருளுயர்ந்த உழுவித்துண்ணும் வேளாளர் மேலும்,தாழ்வு புலப்படுமாயின் அவரிலிழிந்த உழுதுண்ணும் வேளாளர்மேலும் ஏற்றிச் செல்வராயினர்.இனி,தமிழ்நாட்டில் பண்டை காலத்தே விளங்கிய சிற்றரசர்கட் பெரும்பாலானோர் இவ்வேள் குலத்தவாரேயாவர்.
(வேளிர் வரலாறு,இராகவயைங்கார்)
நேற்று, PM 6:34 ·

புத்தகம் நூல் சாதி வெள்ளாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக