விசாகப்பட்டினம் தமிழ்க் கல்வெட்டு.
ஆந்திர மாநிலத்தில் வங்கக் கடற்கரையில் ஒரிசாவை ஒட்டி அமைந்துள்ள
விசாகப்பட்டினம் அக்காலத்தில் குலோத்துங்கசோழப
ட்டினம் என அழைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுக் குறிப்பு :
விசாகப்பட்டினத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன. இவற்றில் சக
ஆண்டு 1012 (கி.பி 1090) இல் வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டு
விசாகப்பட்டினத்தைக் குலோத்துங்கசோழபட்டினம் எனக் குறிப்பிடுகிறது.
இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தைச் சேர்ந்ததாகக்
கருதப்படுவதால் அம்மன்னனின் காலத்தில் இத்துறைமுகம் சோழ அரசின்
கட்டுப்பாட்டிலிருந்தது என்பதையும் இங்கு தமிழ் வணிகர்கள் முக்கியப்
பங்கு வகித்தனர் என்பதையும் உணரமுடிகிறது. இத்துறைமுகத்தில் அஞ்சுவண்ணம்
வணிகக் குழுவினர் இருந்து செயல்பட்டதையும் அக்குழுவினர் அங்கிருந்த
ஐநூற்றுவப் பெரும்பள்ளிக்காகக் கொடை பெற்றுக்கொண்டதையும் கல்வெட்டுகள்
வாயிலாக அறியமுடிகிறது. விசாகப்பட்டினத்
தில் படியெடுக்கப்பட்டுள்ள தெலுங்கு மொழிக் கல்வெட்டில்
(தெ.இ.க.தொ.10:211) குலோத்துங்க பிரதிவி ஈசுவரன் என்ற ஒரு அதிகாரியின்
பெயர் காணப்படுவதிலிருந்து கலிங்கத்து பரணி பாடப்பட்ட சோழ மன்னன்
குலோத்துங்கனின் அரசு சார்ந்த செயல்பாடுகள் இங்கு இருந்ததை இக்கல்வெட்டு
வெளிப்படுத்துகிறது.
ஆந்திர மாநிலத்தில் வங்கக் கடற்கரையில் ஒரிசாவை ஒட்டி அமைந்துள்ள
விசாகப்பட்டினம் அக்காலத்தில் குலோத்துங்கசோழப
ட்டினம் என அழைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுக் குறிப்பு :
விசாகப்பட்டினத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன. இவற்றில் சக
ஆண்டு 1012 (கி.பி 1090) இல் வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டு
விசாகப்பட்டினத்தைக் குலோத்துங்கசோழபட்டினம் எனக் குறிப்பிடுகிறது.
இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தைச் சேர்ந்ததாகக்
கருதப்படுவதால் அம்மன்னனின் காலத்தில் இத்துறைமுகம் சோழ அரசின்
கட்டுப்பாட்டிலிருந்தது என்பதையும் இங்கு தமிழ் வணிகர்கள் முக்கியப்
பங்கு வகித்தனர் என்பதையும் உணரமுடிகிறது. இத்துறைமுகத்தில் அஞ்சுவண்ணம்
வணிகக் குழுவினர் இருந்து செயல்பட்டதையும் அக்குழுவினர் அங்கிருந்த
ஐநூற்றுவப் பெரும்பள்ளிக்காகக் கொடை பெற்றுக்கொண்டதையும் கல்வெட்டுகள்
வாயிலாக அறியமுடிகிறது. விசாகப்பட்டினத்
தில் படியெடுக்கப்பட்டுள்ள தெலுங்கு மொழிக் கல்வெட்டில்
(தெ.இ.க.தொ.10:211) குலோத்துங்க பிரதிவி ஈசுவரன் என்ற ஒரு அதிகாரியின்
பெயர் காணப்படுவதிலிருந்து கலிங்கத்து பரணி பாடப்பட்ட சோழ மன்னன்
குலோத்துங்கனின் அரசு சார்ந்த செயல்பாடுகள் இங்கு இருந்ததை இக்கல்வெட்டு
வெளிப்படுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக