ஞாயிறு, 9 ஜூலை, 2017

கமில் சுவலபில் செக் நாட்டு தமிழறிஞர் நிரம்ப அழகியர்

aathi tamil aathi1956@gmail.com

27/7/14
பெறுநர்: எனக்கு
செக் நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில்
Published: Monday, November 17, 2008,
12:47 [IST]
முதல் பக்கம்
அறிஞர் வானமாமலை அவர்கள் தமிழில்
எழுதிய நாட்டுப்புறவியல் சார்ந்த பல
கட்டுரைகளை ஆங்கிலத்திலும் செக்
மொழியிலும் மொழிபெயர்த்துள்ளதாக
அறியமுடிகிறது.குறிப்பாக முத்துப்பட்டன்
கதை பற்றி வானமாமலை அவர்கள்
சரஸ்வதி ஏட்டில் எழுதிய கட்டுரைகளைக்
கண்ட கமில் சுவலபில் அவர்கள்
அக்கதையை உலகிலேயே மிகச்சிறந்த
கதைப்பாடல்களுள்
இது ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மதன காமராசன் கதை, மயில்
இராவணன்கதை இரண்டையும் ஆங்கிலத்தில்
பெயர்த்து பிற நாட்டினர்க்கு அறிமுகம்
செய்துள்ளார். 1987ல் வெளி வந்துள்ள
இந்நூல் நம் நாட்டுப்புறக்
கதைப்பாடல்களையும்
இதிகாசங்கள்,புராணங்களையும்
நன்கு அறிமுகம் செய்யும் முன்னுரையைப்
பெற்றுள்ளது.இருளர்மொழியில் வழங்கும்
கதைப்பாடல்களையும் இக் கதையுடன்
இணைத்து ஆராய்ந்துள்ளார். தமிழ்
சமஸ்கிருத மொழிகளில் கிடைக்கும்
விக்கிரமா தித்தியன் கதையையும்
ஆய்வு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.
பாரதியார் பாடல்களில் கமில் சுவலபில்
அவர்களுக்கு நல்ல பயிற்சி இருந்தது.
பாரதியார் பற்றி 1952 அளவில் மிகச்சிறந்த
ஆய்வுகளை நிகழ்த்தி தரமான
கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிப் பாரதிப்
புகழை உலகிற்கு உணர்த்தியவர். 'தமிழ்
கல்சர்'என்னும் இதழில் பாரதி குறித்து பல
கட்டுரைகளைக் கமில் சுவலபில்
எழுதியுள்ளார்.பாரதி பாடல்கள் (bharathi s
Poems) என்னும் தலைப்பில் இவர்
எழுதியுள்ள
கட்டுரை பாரதியை நன்கு அறிமுகம்
செய்கிறது.
புதிய ஆத்திசூடியையும் அதன்
சிறப்புகையும் கமில் மிகச்சிறப்பாகப்
பாராட்டி எழுதியுள்ளார்.
பாப்பா பாட்டு என்னும் பாடலைக் கமில்
ஆய்வுக்கு உட்படுத்தி குழந்தைகளுக்குப்
பாராதியார் சொன்ன
அறிவுரைகளை நினைவுகூர்ந்து எழுதியுள்ளார்.
பாப்பா பாட்டின் சில
பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும்
வழங்கியுள்ளார்.16 பாடல்களில் பாரதியார்30
சமற்கிருதச் சொற்களை ஆண்டுள்ளார் எனக்
கமில் சுவலபில்
குறிப்பிட்டுள்ளார்.'வெற்றி எட்டுத் திக்கும்
எட்டக் கொட்டு முரசே'
என்று பாரதி பாடியுள்ள பாடலையும்
திறனாய்வுக்கு உட்படுத்தி யுள்ளார்.பாரதியாரின்
பாடல்களை அறிமுகம் செய்யும்
கட்டுரையாகவும் திறனாயும்
கட்டுரையாகவும் இது உள்ளது.
பாரதியாரின் இளமை வாழ்க்கையையும்
கமில் சுவலபில் ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக
அறிமுகம் செய்துள்ளார். பாரதியார் கால
இந்திய நிலை,தமிழக
நிலை ஆகியவற்றை அரசியல்,சமூகப்
பின்புலத்துடன் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
பாரதியாரின் கல்வி,காசி வாழ்க்கை,
திருமணம், எட்டயபுர அரண்மனை வாழ்க்கை,
விடுதலை உணர்வு, கல்வியில்
சிறந்து விளங்கியமை யாவும் கமில்
சுவலபில் அவர்களால் மிகச்சிறப்பாக
எழுதப்பட்டுள்ளன.
உ.வே.சாமிந்தரின்
வாழ்க்கை வரலாற்றை விளக்கும் என்
சரித்திரம் என்னும் நூலை கமில் சுவலில்
அவர்கள் The Story of My Life என்னும்
பெயரில்
மொழிபெயர்த்துள்ளார்.இரண்டு பகுதிகளாக
வெளிவந்துள்ள இந்நூல்
வெளிநாட்டினருக்கு உ.வே.சா.அவர்களின்
பணிகளை அறிவிக்கும் ஆவணமாக
விளங்குகிறது.
திராவிட மொழிகளின் ஒப்பீட்டு ஒலியியல்
(Comparative Phonology), நீலகிரிப்
பழங்குடி மக்கள் மொழி (இருளர் மொழி)
உள்ளிட்ட நூல்கள் இவருக்கு நிலைத்த
புகழைப் பெற்றுத் தந்தன.
சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு,
மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட
மொழிகளிலிருந்து செக், ஆங்கிலம்,
ஜெர்மனி, சுலோவக்
மொழிகளுக்கு மொழிபெயர்ப்புப் பணிகள்
வழியாக இலக்கியப் பணி செய்துள்ளார்.
நூல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
என இதுவரை 500 மேற்பட்ட
படைப்புகளை வழங்கியவர்.
பல்வேறு அமைப்புகளில்
இருந்து பணிசெய்துள்ளார். சாகித்திய
அகாதெமியின் சிறப்பு கருத்துரையாளரகவும்
இருந்துள்ளார். உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழியில்
ஆய்வு இதழ் உள்ளிட்ட பல இதழ்களின்
ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
பணி ஓய்வுக்குப் பிறகும் பிரான்சில்
நூலாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
தமிழுக்கு இவர் ஆற்றியுள்ள
பங்களிப்பு என்றும் தமிழர்களால்
நினைவுகூரத்தக்கன. ஆராயாத் தக்கன.
கமில் சுவலபில் நூல்கள் சில:
1.Siddha Quest for Immortality Sexual,
Alchemical and Medical Secrets of the Tamil
Siddhas, the Poets of the Powers
2.Hippalos The conquest of the Indian Ocean
3.Comparative Dravidian Phonology,
4.Dravidian Linguistics: An Introduction
5.Tamil Literature, E.J. Brill, Leiden, 1975,
6.Companion Studies to the History of Tamil
Literature,
7.The Smile of Murugan: On Tamil Literature
of South India,
8.The Poets of the Powers: Magic, Freedom,
and Renewal,
9.Literary Conventions in Akam Poetry
10.Two Tamil Folktales: The Story of King
Matanakama, the Story of Peacock Ravana,
11.Lexicon of Tamil Literature,
12.Nilgiri areal studies,
13.Introducing Tamil literature,
14.Ananda-tandava of Siva-sadanrttamurti:
The development of the concept of Atavallan-
Kuttaperumanatikal in the South Indian
textual and iconographic tradition,
15.Introduction to the Historical Grammar of
the Tamil Language,
16.The Irulas of the Blue Mountains,
Foreign&Comparative Studies
17.Tamulica et Dravidica: A Selection of
Papers on Tamil and Dravidian Linguistics,
18.Classical Tamil Prosody An Introduction
19.The Story of My Life (2 volumes)
20. History of Tamil Literature
21.Tirumurugan
22.The Poets of Powers
23.Tamil Literature
24.Tolkappiyam - collatikaram
25.Tamil Trations on Subrahmannya Murugan
(இன்று (நவம்பர் 17), கமில் சுவலபில் பிறந்த
நாள்)
நன்றி: http://muelangovan.blogspot.com/
-முனைவர் மு.இளங்கோவன்
( muelangovan@gmail.com )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக