ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

மனோரமா ஈழ ஆதரவு ஆச்சி ஈழம் தமிழச்சி மறவர் நடிகர் சினிமா திரைத்துறை

aathi tamil aathi1956@gmail.com

13/10/15
பெறுநர்: எனக்கு
குங்குமம் இதழில் ,ஆச்சி மனோரமாவின் தொடரிலிருந்து
1983ம் ஆண்டில் ரொம்பவும் பிடிவாதமாக இருந்து கந்தன் ஆர்ட்ஸ், என்ற நாடக
சபாக்காரர்கள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தார்கள். நான் எவ்வளவோ
மறுத்தும் அவர்கள் விடுவதாக இல்லை என்பதால் அரைமனதுடன் ஒப்புக்கொண்டேன்.
விழா ஏற்பாடுகளை அவர்கள் செய்து கொண்டிருந்த போது இலங்கையில் பயங்கர
இனக்கலவரம் ஏற்பட்டது அதில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் - தாய்மார்கள் -
குழந்தைகள் என்று வித்தியாசம் இல்லாமல் சிங்கள வெறியர்களால் கொன்று
குவிக்கப்பட்டார்கள். தமிழ் இனமே ரத்தக்கண்ணீர் வடித்தது. இப்படிப்பட்ட
கொடிய சூழ்நிலையில் எனக்கு விழா ஒரு கேடா? என்னிடம் மிகுந்த பாசமும் -
அன்பும் - நட்பும் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் கொலைக்களத்தில்
நிறுத்தப்பட்டிர ுக்கும் போது நான் எனக்கு விழா கொண்டாடிக் கொண்டால்
நானும் ஒரு தமிழச்சி ஆவேனோ? என் அடி வயிறு பற்றி எரியும் போது எப்படி
என்னால் பூபாள ராகம் பாட முடியும்? அதனால், விழா நடத்த ஏற்பாடு செய்த
அந்த நல்ல உள்ளத்தவர்களை அழைத்து "கண்டிப்பாக விழா நடத்தக் கூடாது.
அப்படி நடத்தினால் நான் வரமாட்டேன்" என்று கூறி நிறுத்திவிட்டேன். "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக