புதன், 7 பிப்ரவரி, 2018

கந்துவட்டி நெல்லை தீக்குளிப்பு உலா வரும் இரண்டு செய்திகள் வதந்தி

aathi tamil aathi1956@gmail.com

24/10/17
பெறுநர்: எனக்கு
Palani Deepan
மறுப்பக்கம்...?
நம்பிராசன் முத்தையா
·
நெல்லை.தீக்குளிப்பு சம்பவம் பற்றி காவல்துறை நண்பர் ஒருவரின் பதிவு
உண்மையா?
"கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே
மெய். நீங்க எல்லாம் கந்து வட்டி என்று சொல்லி அனுதாப பதிவு போடுறீங்களே
அது உண்மை அல்ல. நடந்த விபரங்களை வரிவாக காணலாம் வாங்க:"
***********************************************
"தேவர் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் பக்கத்து பக்கத்து வீட்டில்
அக்கா தங்கை போல பழகுறாங்க"
"இதில் ஒரு பெண் தன் கஷ்டங்களை சொல்லி அக்கா, அக்கா என்ற உரிமையில் பணம்,
நகைகள் வாங்கி உள்ளார்"
"பணம் வட்டிக்கு கொடுக்கப்படவில்லை. அன்பினால் கொடுக்கப்பட்டது."
"பணம் கொடுத்த பெண்ணின் கணவன் வெளிநாட்டில் கூலி வேலை பார்க்கிறார்"
"தங்கை என்ற பாசத்தில் கணவனுக்கு தெரியாமலே பணம், நகைகளை கொடுத்து உள்ளார்"
"வெளிநாட்டில் இருந்து கணவன் வந்த உடன் தங்கையிடம் பணம், நகைகளை திரும்ப
கேட்டு உள்ளார்"
"பணம் வாங்கிய பெண் பணம், நகைகளை கொடுக்காமல் திருப்பூர் சென்று
விடுகிறார். கணவன், பிள்ளைகளை விட்டு விட்டு"
"அதன் பின்பு பணம், நகை கொடுத்த பெண் நிலை பாவம் ஆகிறது. அதன் பின்பு
தான் பணம், நகை கொடுத்த மேட்டர் இருவரின் கணவன்களுக்கு தெரியவருகிறது"
"பணம், நகை வாங்கியவர்கள் முந்திக் கொண்டு ஒரு புகாரை காவல் நிலையத்தில்
அளிக்கிறார்கள்"
"புகாரின் பேரில் காவல் நிலையத்தில் விசாரணை நடக்கிறது. பணம், நகை
வாங்கியவர்களிடம் கொடுக்க தற்போது வழி இல்லை"
"அதனை சிறிது சிறிதாக கொடுத்து விடும்படி பேசி முடிக்கப்பட்டது."
"பணம், நகை கொடுத்த பெண் தங்கை என்ற பாசத்தில் கொடுத்து ஏமார்ந்து போன
விரக்தியில் பூச்சி மருந்தை குடித்து விடுகிறார்"
"பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் அனுமதி ஆகிறார். 6 நாட்களாக
ஆகி இன்று காலை தான் வீட்டுக்கே வந்துள்ளார்"
"பணம், நபை வாங்கிய பெண்ணணின் கணவனுக்கு யாரோ ஒருவர் ஐடியா கொடுக்கிறார்."
"நீங்க மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் மையத்தில் போய் தீக்குளிப்பது
போல நாடகம் ஆடுங்க. அப்புறமா உங்களுக்கு சாதகமாக அரசு செயல்படும். நீங்க
அவர்களுக்கு எப்பவுமே பணம், நகை தரவே தேவையில்லை என்று"
"தீக்குளிக்க நாடகம் ஆட சென்றவர்கள் பெட்ரோல் வாங்கி செல்கிறார்கள். அதன்
பின்பு விளையாட்டு வினையாகிறது"
"இது தான் உண்மையான சம்பவமே."
"இதில் கந்து வட்டி என்று ஒன்றுமே இல்லை. தமிழக அரசின் மீதும், மாவட்ட
ஆட்சியர் மீதும் தவறு இல்லை"
"விசாரணை செய்து முடித்து வைத்த காவல்துறை அதிகாரிகளும் சிறப்பாக
செயல்பட்டு தான் உள்ளனர்"
"காவல்துறை நண்பர்கள் நியாயமான முறையில் தான் செயல்பட்டு உள்ளனர்"
"ஒரு சம்பவம் நடந்த உடனே என்ன? ஏது என்று தெரியாமலே முகநூலிலும்,
வாட்சப்பிலும் அரசு அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் குறை
சொல்வதே சரியான முறையா?"
"இனியாவது வதந்திகளைப் பரப்பாதீர்கள்"
8 மணி நேரம் · பொது
Mathi Vanan மற்றும் 28 பேர்
முந்தைய கருத்துகளைப் பார்க்கவும்…
Durairaj Durairaj
நல்லா இருக்கு அந்த போலீஸ்காரரோட பதிவு.எதற்கு போலீஸ்டேன்.ஒரு
ஆலமரம்த்தின் கீழ் கட்டபஞ்சாயம் நடத்தலாமே
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 7 மணி நேரம் முன்பு
Vijaya Kumar C
இதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. Wait and see
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 7 மணி நேரம் முன்பு
Palani Deepan பதிலளித்தார் · 1 பதில்
Nithiyaanandan Anandannithiyaanandan
நம்பும்படிஇல்லை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 7 மணி நேரம் முன்பு
Thulakol Soma Natarajan
|| காவல்துறை நண்பரும் நீங்களும்
ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு
செய்து இந்தத் தகவலை உலகறியச் செய்தால்
உங்கள் நேர்மை உலகறியும்.
செய்யுங்கள் Mr. Adrocate
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 7 மணி நேரம் முன்பு
கலைச்செல்வம் சண்முகம்
இதை பாருங்கள்..
திருநெல்வேலி தீக்குளிப்பு சம்பவத்தில் ஊடகத்தை குறை சொல்பவர்களே!!
இசக்கிமுத்து 1,45,000 கடன் வாங்கியிருக்கிறார். 2,34,000 பணம் திரும்ப
குடுத்திருக்கிறார். இருந்தும், மேலும் 75 ஆயிரத்தை கொடுக்க சொல்லி
நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள் கந்துவட்டிகாரர்கள். கந்துவட்டிகாரர்
களுக்கு ஆதரவாக அக்கிராமத்தின் அதிமுக பிரமுகர் முன்னாள் பஞ்சாயத்து
தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் செயல்பட்டிருக்கிறார். இவர் அச்சன்புதூர்
போலீசார் மூலமாக இசக்கிமுத்துக்க
ு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
பாவம் கூலி தொழிளாளி என்ன செய்ய முடியும்? மாவட்ட ஆட்சியரிடம் 5 முறை மனு
கொடுத்தும் பயனில்லை. ஒரு முறை இரு முறை அல்ல 5 முறை. எந்த நடவடிக்கையும்
இல்லை.
2003- ல் கந்து வட்டி தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு இன்று முதல்
நடைமுறையில் உள்ளது. ஏன் இச் சட்டம் இவர்களை பாதுகாக்கவில்லை.? சம்பவம்
நடைபெறும் போது ஊடகத்தினர் வேறொரு அரசியல் கட்சியினர் நடத்திய
ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்து கொண்டிருந்தனர். அலறல் சத்தம் மற்றும்
பரபரப்பு ஏற்பட்ட பின்னரே அங்கு செல்கின்றனர். அங்கு அவர் களுக்கு உதவி
செய்தவர்கள் ஊடகத்தினர், அரசு ஊழியர்கள், மற்றும் மனுச் செய்ய
வந்தவர்கள், அருகில் இருந்த காவல்துறையினர் அலறி அடித்து
ஓடியிருக்கின்றனர்.
பொதுவாகவே திங்கள் கிழமை மனுநீதி நாள் அப் பொழுது மனுச் செய்ய
ஏராளமானவர்கள் வருவது இயல்பு. இசக்கிமுத்து போல வருபவர்களை அடையாளம்
கண்டு காவல்துறையிடம் எச்சரிக்கை செய்து காப்பற்றுவர்களே ஊடகத்தினர்
தான்.இதில் அவர்கள் வேறு பணியில் இருந்ததால் தடுக்க முடியவில்லை... இதில
யாரைக் குறை சொல்கிறீர்கள். பணத்தை முதலீடாக போட்டு பணஅறுவடை செய்யும்
தொழில் செய்பவர்கள் நல்லவர்கள், நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர்
நல்லவர்கள், கண்டுக்காத ஆட்சித் தலைவர் நல்லவர், மக்களை இந்தநிலையில்
வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் நல்லவர்கள் , பேஸ்புக் குலயும், வாட்ஸப்
மட்டிலும் புரட்சி பேசுறகிறவர்கள் நல்லவர்கள்..., சம்பவத்தை பார்த்து
பதறி போய் இந்த கொடுமையை உலகத்திற்கு சொல்ல பதிவு செய்து விட்டு இசக்கி
முத்து குடும்பத்திற்கு கண்ணீரோடு உதவ ஓடிய பத்திரிக்கை யாளன்
தவறானவனா?.......K7 TAMILNEWS
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 7 மணி நேரம் முன்பு
Ramasubramanian Subbiah
நம்மை திசை திருப்புவதற்காக காவல்துறையின் முட்டாள்தனமான கதை சொல்லல்
அன்றி வேறு மாதிரி இருக்க வாய்ப்பில்லை.
அதே காவல் சரகத்தைச் சேர்ந்த ராம்குமார் சிறையில் கரண்ட் கம்பியைக்
கடித்து தற்கொலைசெய்து கொண்டதாகக் கதை கட்டியவர்கள் தானே?
இவர்களை எப்படி நம்பவது?
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 6 மணி நேரம் முன்பு
அ. அறிந்தீ
எந்த வரியிலும் உண்மைத்தன்மை இல்லை
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
Thandavamoorthy Manampathy
காவல்துறை பரப்பும் பொய்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரம் முன்பு
Sakthivel Shanmugam
ராஜ்குமார் ஒயரை கடிச்சி தற்கொலை செய்துகொண்டதாகவும் பல காவல்துறையினர்
தெரிவித்தனர்...
அதுபோல் இதுவும் இருக்கலாம்...
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 36 நிமிடங்களுக்கு முன்பு
Sindha Mathar
மிக மிக தரம்தாழ்ந்த கேவலமான மனிதநேயமற்ற பதிவு இது.
சிறு குழந்தையின் மரணத்தை கண்டபின்னும் இது போல கதை எழுதி கந்துவட்டியை
ஊக்குவிக்க இந்த காவல்துறையால் மட்டுமே முடியும்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 8 நிமிடங்களுக்கு முன்பு
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக