|
14/9/14
![]() | ![]() ![]() | ||
அஞ்சாத சிங்கமென்றும், அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர்முன், பேதையர்முன் ஏழையர்முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து, தன்சாதி தன்குடும்பம்
தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் நீ கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை, என்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து,
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள்
செய்துவைத்து
நகத்துநுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில்உள்ள சாமிபோல மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியா மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே நீ கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல.
- கவிஞர் கண்ணதாசன் வரிகள்..
[[குறிப்பு: அன்று கண்ணதாசனை வாயாற வைத தமிழினம்
இன்று வயிறார அழுகிறது.. அவன் (கண்ணதாசன்)
சொன்னது உண்மையென்று.. ]]
பிஞ்சான நெஞ்சினர்முன், பேதையர்முன் ஏழையர்முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து, தன்சாதி தன்குடும்பம்
தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் நீ கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை, என்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து,
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள்
செய்துவைத்து
நகத்துநுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில்உள்ள சாமிபோல மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியா மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே நீ கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல.
- கவிஞர் கண்ணதாசன் வரிகள்..
[[குறிப்பு: அன்று கண்ணதாசனை வாயாற வைத தமிழினம்
இன்று வயிறார அழுகிறது.. அவன் (கண்ணதாசன்)
சொன்னது உண்மையென்று.. ]]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக