ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஈவேரா பிராமணர் வாக்கு கேட்ட மற்றொரு நிகழ்வு ஆதரவு பார்ப்பனர்

aathi tamil aathi1956@gmail.com

26/9/15
பெறுநர்: எனக்கு
எங்கே அந்த பத்து இலட்சம்?
எங்கே பிராமண எதிர்ப்பு?
எங்கே தமிழர் ஆதரவு?
1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத்
தொகுதியில் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட தமிழரான வழக்கறிஞர்
பி. பாலசுப்பிரமணியத்தை (இந்தப் பி.பாலசுப்பிரமணியம்தான் 1944ஆம் ஆண்டில்
சேலத்தில நடந்த நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம்
செய்யப்பட்ட மாநாட்டில் கொடியேற்றி வைத்தவர்) எதிர்த்துக் காங்கிரசு
தரப்பில் போட்டியிட்ட பிராமணரான டி.டி. கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து
ஈ.வெ.ரா.வாக்குக்கேட்டார். மேலும், பி.பாலசுப்பிரமண
ியத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்ற கெட்ட நோக்கத்துடன் சுயேட்சையாக
எசு.இராமநாதன் என்பவரை என்ஜின் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட வைத்தார்.
அப்போது எங்கே போனது ஈ.வெ.ரா.வின் “பார்ப்பனர்” எதிர்ப்பு? ஈ.வெ.ரா.வின்
“பிராமண”எதிர்ப்பு போலியானது என்பதற்கு இது மேலும் ஓர்
எடுத்துக்காட்டு..........
அந்தத் தேர்தலில் தனக்கு எதிராகவும் பிராமணரான டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு
ஆதரவாகவும் பரப்புரை செய்த ஈ.வெ.ரா.விடம் நேரடியாகத் தமிரான
பி.பாலசுப்பிரமணியம் பேசியதை அடியில் காண்க:-
“உடனே பி.பா., பழையவற்றை மறக்காமல், நினைவுகூருங்கள் நீங்கள் சுயமரியாதை
இயக்கம் நடத்திக்கொண்டு, நாடு முழுக்க விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து
வந்தீர்கள்.......
“நான் உதிரியாய்ச் சிதறிக்கிடந்த தொழிற் சங்கங்களை இணைத்து
நீதிக்கட்சியுடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்பட்ட பின்னர் அல்லது
சுயமரியாதை இயக்கத்துடன் நீதிக்கட்சிக்குத் தொடர்பு ஏற்பட்ட பின்னர்,
இரண்டும் ஒன்றாகக் கலந்தன.......
“ஏற்கனவே எங்களால் நன்கு பரவி வேரூன்றிய நீதிக்கட்சியை உங்களிடம் நம்பி
இணைத்தோம்; நீதிக்கட்சியை உங்கள் கைகளில் கொடுத்த்தற்கு நான்தான் காரணம்.
அதுமட்டுமா? பொப்பிலி அரசரிடமிருந்த என்னின் நெருக்கமான பழக்கத்தால்,
“ஜஸ்டிஸ்“ ஆங்கில இதழினையும், டி.ஏ.வி. நாதனையும் உங்களிடம் ஒப்படைவு
செய்தேன். நானே “ஜஸ்டிஸ்” இதழினில் உங்களைத் தீவிரமாக ஆதரித்து
எழுதினேன்........
“இதையெல்லாம் மறக்காமல், மனதில்நினைவுறுத்தி, என்னை என் தொகுதியில்
ஆதரிப்பதுதான் நன்றியான செயலாகும். எனவே, பிராமணரான வேட்பாளரான
டி.டி.கேவை ஆதரிக்காமல், தமிழரான என்னை ஆதரிப்பதே ஏற்கத்தக்கது என
வாதாடியும் பெரியார் கறாராக மறுத்தே விட்டார்” (செ. அருள்செல்வன்,
அண்ணாவின் அரசியல் குரு, பக்கம் 212.)ஒரு சமயம் பி.பாலசுப்பிரமண
ியம் தமிழராக அல்லாமல் தெலுங்கராக இருந்திருந்தால், பிராமணர் எதிரப்பு
பேசி பி.பாலசுப்பிரமணியத்தை கண்டிப்பாக ஆதறித்திருப்பார்....
ஈ.வெ.ரா. வடநாடு செல்லும் போது அவருடன் சென்று ஆங்கிலப் பேச்சை தமிழில்
மொழி பெயர்த்துச் சொன்னவர்தான் இந்த பி.பாலசுப்பிரமணியம்........
சண்டே அப்சர்வர்க் இதழ் நடத்தி நொடிந்து போயிருந்த காலம் அது.
பி.பாலசுப்பிரமணியத்தை தேர்தல் போட்டியில் இருந்து திரும்பப்பெற
டி.டி.கிருஷ்ணமாச்சாரி நீதிக்கட்சி பிரமுகர் ஒருவரிடம் ரூபாய் 10 இலட்சம்
பி.பாலசுப்பிரமணியத்திடம் கொடுக்கும்படி கொடுத்து அனுப்பினார், அதை வாங்க
மறுத்த பி.பாலசுப்பிரமணியம் Get Lost என்று விரட்டிவிட்டார். அந்த 10
இலட்ச ரூபாயுடன் ஈ.வெ.ரா.விடம் திரும்பிச் சென்ற நீதிக்கட்சி பிரமுகர்
திரும்பி வரும் போது வெறும் கையுடன் திரும்பி வந்தார். எங்கே அந்த 10
இலட்சம்?...........
ஆனால், 1957ஆம் ஆண்டில் நடந்த அதே நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.
தரப்பில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி
பெற்ற தனது அண்ணன் மகனான ஈ.வி.கே. சம்பத்துக்கு எதிராக ஈ.வெ.ரா. பரப்புரை
செய்யவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க செய்தியாகும். இதுதான் தண்ணீரை
விட அரத்தம் கெட்டியானது என்பதோ? இதை நாம் சொல்லவில்லை! குத்தூசி
குருசாமி சொன்னார்!.................????
?????????????????????
எங்கே அந்த 10 இலட்சம்?
எங்கே பிராமண எதிர்ப்பு??
எங்கே பிராமணர் அல்லாதார் ஆதரவு???
இதுதான் ஈ.வெ.ரா.வின் யோக்கியதை. இந்த ஈ.வெ.ரா.வை வீழ்த்துவது ஒவ்வொரு
தமிழனின் தலையாயக் கடமையாகும்!
தமிழ்த் தேசியத்தை எழுச்சியுர செய்வது, அதைவிட தலையாயக் கடமையாகும்!.............

ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள் வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக