சனி, 22 ஏப்ரல், 2017

கால்டுவெல் நாடார் மோதல் கிறித்தவ மதம் பரப்ப சூழ்ச்சி சாணார் பற்றி பொய் வரலாறு

aathi tamil aathi1956@gmail.com

18/8/15
பெறுநர்: எனக்கு
நாடாண்ட நாடார் குலம்
கால்டுவெல் மத புரோக்கரின் கட்டுக்கதைகள் ஆதாரத்துடன் முறியடிக்கப்பட்டது...
கால்டுவெல்
கி.பி 1840, 1847-1851 ஆகிய ஆண்டுகளில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சத்தில்
பல இலட்சம் மக்கள் மடிந்ததும், தப்பியவர்களில் பலர் அமெரிக்காவிற்கு
குடியேற சென்றனர், சிலர் இந்தியா போன்ற நாடுகளுக்கு மதபோதகர்களாய்
வந்தனர். அவ்வாறு வந்தவனே கால்டுவெல் என்ற மதபோதகன்.
கால்டுவெல் 8.1.1838ல் சென்னையில் தனது காலை ஊன்றினார். பின்னர்
28.11.1841ல் நாசரேத் மற்றும் இடையன்குடி வந்து சேர்ந்து தனது வேலையை
ஆரம்பித்தார்
இவர் தனக்கென வகுத்துக்கொண்ட பணிகளாவன:
பல கோடி இந்தியரை 10-15 கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் அடக்கி ஆள்வது கர்த்தரின்
ஆசீர்வாதத்தால் (Devine plan) மட்டுமே சாத்தியமாகி உள்ளது. அதற்கான
உதவிகளை தன்னை போன்ற பாதிரியார்கள் வழங்க வேண்டும்.
தமிழ் மொழியினை, சமஸ்கிருதத்திலிருந்து தனிமைப்படுத்தி, அதற்கான ஒரு சில
ஆதாரங்களை தேடி அலைந்து தமிழர்களின் தனித்தன்மையை (?) வெளிக்கொணருதல்.
பிராமணர்களை தனிமைப்படுத்துவ
து..மறவர், நாயக்கர் சாணார் (நாடாரில் ஒரு பிரிவினர்). தலித் மக்களை
இழிவு படுத்தி பேசுதல், எழுதுதல் அவர்களின் பெருமையை சீர்குலைத்தல்.
நாடார்கள். ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு
முன்புவந்து தென்தமிழ் நாட்டில் குடியேறிய “வந்தேறிகள்” என்பது.
பண்டைய தமிழர் சமயம் பூத வழிபாடு முறையை சார்ந்தது. அது இந்து சமயம் (?)
அன்று என்பது.
நாடார்கள் (சாணார்கள்) தலைவன் முற்காலத்தில் இராவணனின் தலைமை அமைச்சராக
விளங்கினான் எனும் ஆதாரமற்ற வரலாற்றை கண்டுபிடித்து கூறியது.
மறவர்களின் வீரகுணம், தமிழர்களின் அமைதி வாழ்க்கைக்கு புறம்பானது என்பது
(இதன் மூலம் தமிழர்களின் வீரத்தை மடக்கி மிதித்து ஆங்கிலேய
கிறிஸ்தவர்களின் ஆட்சிக்கு ஊறு சேராத வண்ணம் பார்த்துக் கொள்வது).
--------------
நாடார்களை பொருத்தளவில் அவர்கள் அன்றும் இன்றும் மற்றவர்களின் வீட்டு
எடுபிடி வேலைகளை செய்வது இல்லை. கால்டுவெல், தனது இருப்பிடத்தில் எடுபிடி
வேலைகளை செய்ய நாடார்களை நியமித்தபோது அவர்கள் எதிர்த்து கிளர்ந்தனர்.
இந்நிகழ்ச்சி அன்னாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. எனவே
அயர்லாந்தில் செல்டிக் மக்களை அவமானபடுத்தியது போன்று இங்கு
நாடார்களையும் அவமானப்படுத்த எண்ணினார். மேலும் பெரும்பான்மையான நாடார்
சமூகத்தை மதம் மாற செய்து விட்டால் மற்ற சாதியினரை எளிதாக மதம்மாற்றச்
செய்யலாம் என்பதே இவன் நோக்கம். நாடார்கள் தங்களை தாங்களே கீழ்சாதியினர்
என்று நம்ப வேண்டும் தங்களை தாங்களே வெறுக்க வைக்க வேண்டும் அதன்மூலம்
அவர்கள் தங்கள் மதத்தை வெறுத்து கிறிஸ்தவத்தில் இணைய வைக்கவேண்டும்
என்பதே இவனது குறிக்கோள்.
அதன் பொருட்டு கால்டுவெல் 1849ம் ஆண்டில் “திருநெல்வேலி சாணார்கள்,
அவர்களின் மதம் - மனநிலை மற்றும் பழக்க வழக்கங்கள்” (Tinevelly Shanars,
a Sketch of Their Religion and Their Moral Condition and
Characteristics, as a Caste) எனும் 77 பக்கங்கள் கொண்ட ஓர்
சர்ச்சைக்குரிய பிரசுரத்தை ஆங்கில - கிறித்துவ அரசு ஆதரவுடன்
ஆங்கிலத்தில் சென்னையில் வெளியிட்டார். அடுத்த ஆண்டில் இது புத்தகவடிவாக
லண்டனில் வெளியிடப்பட்டது.
இப்புத்தகம் இன்றும் சென்னை கன்னிமாரா படிப்பகத்தில் உள்ளது.
அப்புத்தகத்தில் கால்டுவெல் வரிக்கு வரி நாடார்களையும், பக்கத்திற்கு
பக்கம் பிராமணர்களையும், இந்து சமயத்தையும் இழித்தும், பழித்தும்
கூறியுள்ளார்.
நாடார்களைப் பற்றி...
Ø சாணர்கள் பனை ஏறுதலும், கருப்பட்டி தயாரித்தலும் மட்டுமே தொழில். சிலர்
விவசாயிகளாகவும், வியாபாரிகளாகவும் உள்ளனர் (புத்தகத்தின் பக்கம் 4)
Ø சாணார்கள் - ஸ்ரீலங்காவிலிரு
ந்து தமிழக தென் மாவட்டங்களில் குடியேறிய “வந்தேறிகள்”.
Ø அவர்கள் குடியேற வந்தபோது பனங்கொட்டைகளை தமிழகம் முழுவதும் விதைத்தனர்.
(பக்கம் 4 / பத்தி 3)
Ø இராவணனுடைய பிரதம மந்திரி மகோதாரா என்பவன் சாணார் குலத்தவன். (இதற்கு
ஆதாரம் ஏதும் கால்டுவெல் பாதிரியாரால் கொடுக்கப்படவில்லை).
Ø சாணார்கள் ஆடிமாதம் முதல் தேதியை விடுமுறை நாளாகவும், மிகவும்
மகிழ்ச்சிகரமான நாளாகவும் கொண்டாடுகின்றனர். ஏனென்றால் இதே தேதியில்தான்
சீதையை இராவணன் கவர்ந்து சென்றான்.
Ø இராமனுடைய துயரத்தை சாணார்கள் சந்தோஷமான நாளாக கொண்டாடுகின்றனர் -
பக்கம் 28. (இதற்கான சாட்சியங்களை கால்டுவெல்லால் கொடுக்க முடியவில்லை.
( வெறும் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது). ஆடி மாத இறுதி கொல்லம்
ஆண்டின் கடைசி நாள். இத்தேதியை நாடார்கள் மட்டுமின்றி தென்மாவட்டங்களில்
உள்ள மற்ற சமுதாயத்தினரும் “ஆடி இறுதி” என மகிழ்வான நாளாக
கொண்டாடுகின்றனர். (கால்டுவெல் ஆடி இறுதி என்பதற்குப் பதிலாக ஆடி முதல்
தேதி என தவறாக குறிப்பிட்டுள்ள
ார்.))
Ø சாணார்கள், கடவுளுக்கு பயப்படுகிறவர்கள் அல்ல. பொய் சொல்வதற்கு
தயங்காதவர்கள். ஏமாற்று வேலையையும், தாழ்வான குணங்களையும் உடையவர்கள்,
(பக்கம் 33) . இவர்கள் அறிவுபூர்வமானவர்கள் அல்லர். மிகவும் கோழையர்கள்
கூட. இவர்கள் நன்றி மறப்பவர்கள். சுயநலவாதிகள், சதிகாரர்கள்,
ஏமாற்றுக்காரர்கள், வணிக பொருள்களை திருடுபவர்கள், (பக்கம் 38, 39),
படிப்பறிவு இல்லாதவர்கள் (பக்கம் 52), நிலப்பிரச்சனைகளிலே காலத்தை
கழிப்பவர்கள் (பக்கம் 54).
Ø சாணார்கள் சோம்பேறிகள், மந்தபுத்தி உடையவா;கள், அவா;களின் குழந்தைகள்
அல்லது உறவினா;கள் காலரா நோயால் சாகும் தருவாயில் இருந்தால்கூட.
விழித்திருந்து அவர்களுக்கு ஊழியம் செய்யாமல் தூங்கும் தன்மை உடையவர்கள்
(பக்கம் 57).
Ø சாணார்கள் சுய சிந்தனை அற்றவர்கள். சுயமாக சிந்திக்காமல் தங்களுடைய
முன்னோர்கள் செய்த / கூறிய செயல்களுக்கே மதிப்பு கொடுப்பவர்கள். தங்களின்
வாழ்நாளில் பாதியை சோம்பேறித்தனமாகவே கழிப்பவர்கள். எந்த தொழிலை
செய்தாலும் இவர்களுக்கு அதனை பூரணமாக செய்யும் திறமை கிடையாது. கடனில்
மூழ்கி இருப்பவர்கள், ஏழைகள் (பக்கம் 58).
மொத்தத்தில் மேற்கிந்திய தீவிலுள்ள நீக்ரோ அடிமைகளை விட சாணார்கள்
அறிவாற்றலிலும், செயல்திறனிலும் தாழ்ந்தவர்கள் (பக்கம் 62) என்றும்
எழுதியுள்ளார்;.
அத்துடன், திராவிடர்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்களுக்கு முன்பு
இந்தியாவில் குடியேறியவர்கள் (வந்தேறிகள்) என்றும், அவர்களின் இந்திய
தமிழ்மொழி யுக்ரயின் (Ukraine) நாட்டு பகுதிகளில் பேசப்படும் ஸ்கைத்திய
மொழி குடும்பத்தைச் சார்ந்த (வந்தேறி), மொழியென்றும் அடையாளம்
காட்டியுள்ளார். (பார்க்கவும் அன்னாரின் ஒப்பிலக்கண நூல்.)
கால்டுவெல்லுக்கு மறுப்பு
முதலில் இவன் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர் "திருநெல்வேலிச் சாணார்கள்".
இது ஒட்டு மொத்த நாடார் சமூகத்தின் வரலாறல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள
வேண்டும். அப்போதுதான் நிறைய விடையங்கள் புரியும். இந்த உண்மை தெரியாமல்
நாடார்களே பலர் தங்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் கால்டுவெல் குறை
கூறிவிட்டதாக புலம்பிவருகின்றனர்.
1) சாணர்கள் பனை ஏறுதலும், கருப்பட்டி தயாரித்தலும் மட்டுமே தொழில் என்று
கூறுகிறான். அது உண்மையல்ல சாணர்கள் சங்ககாலம் தொட்டு பனையேறிகள் அல்ல.
எந்த ஒரு சங்கநூலும் சாணர்களை பனையேறிகள் என்று கூறவில்லை. சாணர் என்றால்
ரசவாதம் தெரிந்தவர், சித்தர்களுடன் தொடர்புடையவர்கள் என்றே பொருள்
கூறுகின்றன.
மேலும் அகராதிகள் சாணார் என்றால் புத்திக்கூர்மை உடையவன், செயல்திறன்
மிக்கவன் என்று கூறுகின்றன.
· இராட்லர் அகராதி (1834)
சாணான் – The same as கெட்டிகாரன், a capable man, one who is sharp witted.
· தமிழ்பாசை அகராதி (யாழ்பாணம் 1842)
சாணன் – கெட்டிக்காரன்
சாணான் – சான்றான்
· வின்ஸ்லோ அகராதி (1862)
சாணன் – a capable ,sharp witted man. நிபுணன்.
சாணான் – a man of a particular class of toddy drawers. ஓர் சாதியான்.
Same times சான்றான்.
· ) தமிழ்ப் பேரகராதி (யாழ்ப்பாணம் 1899)
சாணன் – சாணார், சாணாருட் பெரியவன் சான்றான்.
சாணன் – கெட்டிக்காரன்.
சாணான் – ஓர் சாதியான், சான்றான்.
இவ்வாறு 19 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட அகராதிகள் பொருள் கூறியுள்ளன.
சாணன், சாணான் இரண்டு சொற்க்களுமே ஒரே பெயரையே குறிப்பிடுகின்றன.
இதன் மூலம் சாணர்கள் சங்ககாலம் தொட்டு பனையேறிகள் அல்ல கடந்த சில நூற்றாண்டுகளாகவ
ே பனையேறிகளாக்கபட்டனர் என்பது புலப்படும்.
2) கால்டுவெல் எழுதிய அந்த புத்தகம் வந்த காலகட்டத்தில், இந்துக்களின்
ஒரு பிரிவினர் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை உண்மை என
நம்பி, ஒட்டுமொத்த நாடார்களையும் "சாணார்கள்", "இழிந்த சாதியினர்"
எனவும், அவர்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது
எனவும் தடுத்தனர்.
இது சம்பந்தமாக வழக்கு ஒன்றும் நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம்
நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது (OS நம்பர் 88 of 1872). அவ்வமயம்
ஈரோடு மாவட்டம் பாசூர் எனும் ஊரினை தலைமையிடமாகக்கொண்ட மடாதிபதி
அய்யாச்சாமி தீட்சிதர் (பிராமணர்) அவர்கள் கால்டுவெல் பாதிரியாரின் பொய்
பிரச்சாரத்தை கடுமையாக எதிர்த்தார்.
அதுமட்டுமின்றி நாடார்கள் ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வந்து குடியேறிய
“வந்தேறிகள்” அல்ல என்றும், அதற்கு மாறாக அவர்கள் தமிழகத்தை ஆண்ட பாண்டிய
குலத்தை சார்ந்தவர்கள், சத்திரியர்கள் எனவும் ஸ்ரீவைகுண்டம்
நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். மடாதிபதியின் சாட்சியத்தை
அடிப்படையாக கொண்டு ஆலய பிரவேச தடுப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நாடார்கள் வென்றனர்.
இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி vs இருளப்ப நாடார் வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது:-
"நாடார்கள் ,தீண்டத்தகாதவர்
களைப்போல் அல்லாது ,பிராமணர்கள் வசிக்கும் பகுதியான அக்க்ரகாரத்தின்
தெருவில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்... அவர்கள் தீண்டத்தகாதவர்கள்
அல்ல.. தூய்மையற்றவர்கள் என சாதி இந்துக்கள் நாடார்களை ஒரு போதும்
கருதியதில்லை"
1907 ஆம் ஆண்டு வி.பி.சுப்பிரமணிய முதலியார்;-
"வடஜில்லாக்களில்...சான்றோர் கீழ் ஜாதியாராக வழங்கப்படுவதில்லை.
கோவிலுக்குள் மற்ற சாதியினரோடு சமமாகப்போய் சுவாமி தரிசனஞ் செய்கின்றனர்.
தென் ஜில்லாச் சான்றோரே ,வட ஜில்லாக் களுக்குச் சென்றால்,அங்குள்ள
கோவில்களுக்குள் தடைபடாது சென்று சுவாமிதரிசனஞ் செய்கின்றனர்.
மறவர்,இடையரிலும் கீழ்படாத சாதி ஜனங்களுடன் கூட இருந்து விருந்து
அருந்துகின்றனர்
. ஒவ்வொரு பிரதேசத்திலும் வேசியர்களின் மக்களும், சரியான சம்பந்தமில்லாத
சம்பந்தத்தால் பிறந்த பிள்ளைகளும் ,அவ்வப்பிரதேசத்தில் பெருமிதமாயுள்ளபெருமிதமாயுள்ள சாதியோடு இரண்டு மூன்று தலைமுறைகளில் கலந்துவிடுவது
வழக்கமாயிருக்கிறது. உத்தம கலாச்சாரம் தவறாத சான்றோர்கள் , இவ்வாறு
கலப்பவர்களிலும் எவ்வளவோ மேல்பட்டவர்கள் என்பது சொல்லாமலே விளங்கும்"
இதுபோன்று தோன்றிய கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆலய பிரவேச
வழக்கில் (OS 33/1898) நாடார்களுக்காக தில்லைவாழ் (தீட்சிதர்)
அந்தணர்களும், பாசூர் அந்தணர்களும் மதுரை சார்பு நீதிமன்றத்தில்
சாட்சியம் அளித்தனர்.. நாடார்களுக்கு எதிராக நீதிமன்றத்தில், கால்டுவெல்
அவர்களின் பிரசுரங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கினை விசாரித்த
நீதிபதி, நாடார்களுக்காக சாட்சியம் கூறிய தீட்சிதர்களையும், பாசூர்
அந்தணர்களையும் கடுமையான அவமதிப்பிற்கு உள்ளாக்கினர். (பக்கம்
167-170-தோள் சீலைக்கலகம்). நாடார்கள் தண்டிக்கப்பட்டனர்.
நாடார்களுக்கு மட்டுமல்லாமல் தொண்டை மண்டல வெள்ளாள கவுண்டர் சமுதாயம்
ஆகியவற்றிற்கும். பாசூர் மடாதிபதியும் அவ்வூர் அந்தணர்களும் 18,19,20ம்
நூற்றாண்டில் சமுதாய குருவாக பெரும் சேவை ஆற்றியுள்ளனர். (பார்க்கவும் :
பொன்தீபங்களின் ‘கொங்க குலகுருக்கள்; கொங்கதேச சாமுத்திர கலாச்சார
கேந்திரம் வெளியீடு, ஈரோடு 2009) நாடார்களை பொறுத்த அளவில் அவர்களின்
ஆன்மீக, வணிக மற்றும் பொது வாழ்விற்கு இவர்கள் பெரும் துணையாய்
விளங்கியுள்ளனர்.
நாடார்கள் வாழும் கிராமங்களை பாசூர் அந்தணர்களின் குடும்பம் ஒவ்வொன்றும்
தனதாக்கி (தத்தெடுத்தும்) 5-10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அக்கிராமங்களுக்கு
சென்று அங்குள்ள மக்களுக்கு வேதாந்த சைவத்தை எடுத்து விளம்பி, சிவ தீட்சை
வழங்கி, பூணூல் அணிவித்து, சத்திரியர்கள் என மீண்டும் அறிவித்து
தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கினார்கள்.
நாடார்கள் வசிக்கும் ஊர்களுக்குள் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிலையை
பல்லக்கில் தூக்கி சென்று (அன்றைய ஆலய பிரவேச தடையை முறியடிக்க) வழிபாடு
நடத்திட செய்தனர். அதனில் ஒரு விக்ரகம் இன்றும் சேலம் கருமாபுரம் ஸ்ரீ
சிவசுப்பிரமணிய குருக்கள் வசம் சித்தர் கோவிலில் (சேலம்) உள்ளது (பக்கம்
114 - The History of Nadars by S. Sarada Devi).
சிவதீட்சை பெற்று பூணூல் அணிந்த நாடார்கள் சாதி பெயர் அன்றி
சத்திரியர்கள் என பொதுவாக அழைக்கப்பட்டனர். (இதன் காரணமாக பிறந்ததே
சத்திரிய வித்தியாசாலைகள்). கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை
தென்தமிழகத்தில் சிறு கிராமங்களில் கூட இவ்வாறு பூனூல் அணிந்த நாடார்கள்
பலர் காணக்கிடைத்தனர். உதாரணத்திற்கு இக்கட்டுரையின் ஆசிரியரின்
தந்தையார்; உமரிக்காடு (உமரிமாநகர்) சாமி நாடார் அவர்களும், அவரது
தமையனார்; சத்திரியர் அருணாசல நாடார் அவர்களும் பூணூல் அணிந்திருந்தனர்.
அதுபோன்று வேதங்களை சமஸ்கிருதத்தில் ஓதவல்ல சிவகாசி நாடார்கள் பலர்
இன்றும் உண்டு. (உதாரணம்: சிவகாசி தனபாலன் மோசி குடும்பத்தினர் -
ஆண்களும், பெண்களும்). இதன் காரணமாகவே காசிப்பழ நாடார் அவர்கள் 1987ல்
எழுதியுள்ள “ உமரிமாநகர் தல வரலாறு” எனும் நூலில் நாடார்களின் குருக்களாக
பாசூர் அந்தணர்களை குறிப்பிடப்பட்ட
ுள்ளதை காணலாம்.
ஹார்டுகிரேவின் அரைகுறை செய்திகள்..
"இராமநாதபுரம் நகரத்தில் வாழும் நாடார் சமூகத்தினர் செழிப்பான நிலையைக்
கமுதி நாடார்களும் அனுபவித்து வந்தனர். அவர்களைப் போன்று சமூகத்தில்
உயர்ந்த தகுதிக்கான உரிமை பெற்றுக்கொண்டனர். இங்குள்ள நாடார்களும்
பிராமணர்களைப் போன்று வேட்டியைக் கட்டிக்கொள்ளவும் (பஞ்சகச்சம்),
குடுமிவைத்துக் கொள்ளவும் தொடங்கினர்"
ஹார்டுகிரேவ் கருத்து ஒரு அரைகுறை உண்மையாகும்.
வேதம் கற்றுக் கொள்வதும் ,முப்பிரிநூலும் சத்திரிய தர்மமாகும்
.அதனால்தான் அண்மைக்காலம் வரையிலும் அதாவது திராவிட இயக்கத்தின் பிராமண,
வடமொழி எதிர்ப்பு வலுவடையும் வரையில்,பல்வேறு ஊர்களிலுமிருந்த உயர்குடி
நாடார்கள் பூனூல் அணித்ந்து வந்தனர். சைவ மடங்களைச் சார்ந்த பிராமணர்,
நாடார் ஊர்களுக்குச் சென்று ,நாடார்களுக்கு மந்திர உபதேசங்கள் செய்து
,முப்பிரி நூல் அணிவித்தது, தொன்று தொட்டு நடந்து வந்ததாகும்.
ஹார்டுகிரேவ், அனுமந்தன் போன்றோர் கேலி செய்து எழுதியுள்ளதைப் போன்று
இப்பழக்கங்கள் சத்திரிய நடர்களிடமிருந்து சென்ற ஒன்றிரண்டு
நூற்றாண்டுகளுக்
குள் கற்றுக் கொண்டு, மேல் சாதியினர் எனப் பாசாங்கு செய்யவில்லை. அவை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாடாண்ட சத்திரியரிடம் தொடர்ந்து வந்தச்
சம்பிரதாயமாகும்.
2) பனையின் பூர்வீகம் இலங்கையா?
இதற்க்கு ஏற்கனவே மறுப்பு தெரிவித்து கட்டுரை தொகுத்து எழுதப்பட்டுள்ளது.
காண்க http://
nadarsonline.blogspot.com/2015/03/blog-post_30.html?spref=fb
3) நாடார்கள் வந்தேறிகளா?
தமிழகத்தின் பூர்வீக குடிமக்கள் நாடார்கள் என்பதே உண்மை. கடலுக்குள்
மூழ்கிய குமரி கண்டத்தின் எஞ்சிய பகுதிதான் கன்னியாகுமரி மாவட்டமாகும்.
அது தமிழ் பண்பாட்டின் தொட்டிலாகும். இதை தொல்காப்பியம், சிலப்பதிகாரம்
போன்ற இலக்கியங்கள் உறுதிப்படுத்திய
ுள்ளன.பெரும்புகழ் கொண்ட சிறப்புமிகு இரு புலவர்களான தொல்காப்பியரும்,
அதங்கோட்டசானும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள். திருச்செந்தூர்
வட்டத்திலுள்ள பனைமரங்கள் நிறைந்த தேரிக்காட்டுப் பகுதி ஆகியவற்றில்
அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள் நாடார்கள் பரம்பரை பரம்பரையாக
மாட்சிமிக்கவர்கள், நிலமைக்கார நாடார்களின் (நாடான் பட்டங்களுக்கு
உரியவர்கள்) பின்பற்றிவரும் பழக்கவழக்கங்கள். அவர்கள் உயர் மரபினர்
என்பதை எடுத்துக்காட்டுகின்றன.இந்த இடங்களில் எல்லாம் நாடார்கள்தான்
பெரும்பான்மையினராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வணிகத்தில் கொடிகட்டி பறக்கும், உழைப்பையே உயிர்மூச்சாய்
கொண்டிருக்கும் நாடார்களை சோம்பேறிகள் , சுய சிந்தனை அற்றவர்கள் என்று
சொன்னால் யார்தான் நம்புவார்கள்? யாருக்குத்தான் கோபம் வராது?
பலர் நினைப்பது போல் நாடார் என்ற சொல் இந்த நூற்றாண்டில் வந்ததல்ல அது
சங்ககாலம் தொட்டு சான்றோர்களின் பட்டப்பெயர் அதற்க்கான ஆதாரங்கள் மற்றும்
விளக்கங்களுக்கு இந்த பதிவினை பார்க்கவும்.
http://nadarsonline.blo
gspot.in/2015/08/blog-post.html
கால்டுவெல்லுக்கு எதிர்ப்பு
சாணார்களைப் பற்றி கால்டுவெல் எழுதிய கருத்துக்கள் அக்காலகட்டத்தில்
கிறித்துவ நாடார்கள் மத்தியிலும்கூட பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
எதிர்ப்பை முன்னின்று நடத்தியவர்அருமை நாயகம் என்ற சாட்டாம்பிள்ளை எனும்
கிறித்துவ சாணார் இவர் கொற்கை கிராமத்தை சார்ந்த பணக்கார சாணார். இவரை
தவிர சாமுவேல் சற்குணர், ஞானமுத்து நாடார் ஆகிய கிறித்துவ சாணார்களும்
கால்டுவெல் பாதிரியின் கருத்துகளை கடுமையான சாடினர். கால்டுவெல் தமிழ்ச்
சரித்திரத்தை சரியாக புரியாதவர். பொய்யர், ஒரு சில நடப்புகளை உலக நடப்பு
என பேசக் கூடியவர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (பக்கம் 197 - 202,
Robert Caldwell: A Scholar, Missionary in Colonial South India – by
Vincent Kumaradas)
மேற்கத்திய பாதிரிகள் தங்கள் விருப்பம் போல் உண்மைக்கு மாறாக பைபிளை மொழி
பெயர்க்கின்றனர் என்பது சட்டாம் பிள்ளையின் குற்றச்சாட்டு, சிலுவை
வணக்கம் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல என்றும், இந்திய கிறித்துவர்களை
இந்து கிறித்துவர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும் என்றும் இவர்
வலியுறுத்தினார்.
சர்ச்சுகளில் பழைய ஏற்பாட்டின் அடிப்படையிலே வழிபாடு நடத்தப்பட வேண்டும்
என்றும், மொழி பெயர்க்கப்பட்ட விவிலியம் (புதிய ஏற்பாடு) மேற்கத்திய
கிறித்துவர்களின் பொய்யை பரப்பக் கூடியது, கற்பனையானது,
விளையாட்டுத்தனமானது என்றும் அதனை நிராகரிக்க வேண்டும் எனவும்
வலியுறுத்தினார்.
ஒழுக்க குறைவான ஐரோப்பிய கிறித்துவ பாதிரிகள் “எந்த விதத்திலும் தாழ்ந்து
போகாத ஒழுக்க முறைகளையுடைய இந்துக்களிடையே மதப் பிரச்சாரம் செய்ய
தகுதியற்றவர்கள்” என கர்ச்சித்தார்;.
இவர் ஜெருசலேம் யூத கோவில்களின் சாயலில் (இவரால் மேற்கத்திய கிறித்துவம்
ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்டது) ஒரு சர்ச்சினை முதலாவதாக 1857ல்
நாசரேத் அருகிலுள்ள மூக்குபீரி எனும் சிற்றூரில் அமைத்தார். அதில் இந்து
முறைப்படி படையல் படைத்தும், சாம்பிராணி தூபமிட்டும் வழிபாடு நடத்தினார்.
(பக்கம் 49 - 56 காலச்சுவடு - 16, டிசம்பர் 1996).
சாணார்களை பற்றிய தனது கருத்தை கால்டுவெல் திரும்ப திரும்ப கூட்டங்களில்
வலியுறுத்தினார் என்பது மட்டுமின்றி தனது கருத்தினை திரும்ப பெற
மறுத்துவிட்டார். இதன் காரணமாக கால்டுவெல் மீது பல கொலைவெறி தாக்குதல்
முயற்சிகள் நாடார்களால் மேற்கொள்ளப்பட்டன. கால்டுவெல் கொடைக்கானலில்
குடியேறி தப்பினார்.
அவர் சாகும்வரை கொடைக்கானலில் இருந்து இறங்கி வரவில்லை. (பக்கம் 142 -
தோள் சீலைக்கலகம்).


தேடுக:
நாடார் மறவர் மோதலின் தொடக்கம் வேட்டொலி

2 கருத்துகள்: