புதன், 14 பிப்ரவரி, 2018

பெய்யெனப் பெய்யும் மழை உண்மையான பொருள் தேவையான நேரத்தில் மழையைப் போன்றவள்

aathi tamil aathi1956@gmail.com

30/10/17
பெறுநர்: எனக்கு
Arutchelvan Thiru
நாளும் ஒரு நற்குறள்+கருத்துரை:-
தெய்வம் தொழாஅள்; கொழுநற் றொழுதெழுவாள்;
பெய்யெனப் பெய்யும் மழை-குறள் 55.
நல்லமனைவி வேண்டும்போதுபெய்யும் மழைக்குச்சமம்.
A good wife is like rain in need.
தெய்வம்-நல்ல மனைவியானவள் தெய்வத்தை
தொழாஅள்-தொழமாட்டாள்
கொழுநன்-கணவனையே
தொழுதெழுவாள்-தெய்வமாகக்கருதிவண
ங்கி துயிலெழுவாள்;
பெய்யெனப்பெய்யும்-அப்படிப்பட்ட மனைவி, இப்போது ஒரு மழைபெய்யவேண்டும்
என்று எண்ணியவுடன் பெய்யும்
மழை-மழைக்குச்சமம்.
"வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி" என்ற குறள்வழி, இக்குறளுக்கு பொருள் காண்க.

Aathimoola Perumal Prakash
இதில் தொழுவதை இறைநம்பிக்கை என்று கொள்ளாமல் பயம்வரும்போது
துணிச்சலுக்காக நினைக்கும் ஒன்றாக ஒருவர் உரை எழுதியிருந்தார்.
ஏதோவொரு காணொளியில் பார்த்ததாக நினைவு.

Arutchelvan Thiru
Solai Viswanath பயிர் வளர்ந்து இன்னும் ஒரு மழை பெய்தால் போதும் என்று
எண்ணியநிலையில் ஒரு மழை பெய்தால் எப்படி அதைப்போற்றுவோமோ அதைப்போன்றவள்
நல்ல மனைவி என்கிறார் வள்ளுவர்.இக்குறள் ஒளவையாரின்"வினை
யே ஆடவர்க்கு உயிரே,மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" என்ற நோக்கில்
எழுதப்பட்டுள்ளது.பெண்ணும் சம்பாதிக்கிற இக்காலத்தில் பெண்ணோ,ஆணோ குணம்
கெட்டவராயிருந்தால் அக்குடும்பம் சீரழிந்து விடுவதை நாம் பார்க்கிறோம்.

V Kumaresh
கண்ணகி எந்த கடவுள் வழிபாடு செய்தார் என தெரியவில்லை ஆனால் மதுரை எறிய
வேண்டும் என சொன்ன வுடன் எறிந்தது இன்று கண்ணகி கடவுளாக வழிபட படுகிறாள்
கணவனை நதனாக கருதி செய்யும் யோகமே இறைவனிடம் மிக எளிதாக இணைய வைத்து அருளை வழங்கும்
மீரா ஆண்டால் செய்த யோகமே அவர்களுக்கு மிக உயர்ந்த ஆன்மீக அருளை
வழங்கியது இது ஆதிகால தமிழர்களின் வழக்காறு ஈருடல் ஓர் உயிர் இருமணங்கள்
இணைந்து திரு மணம் ஆகி அன்பு பேர் அன்பான கருணை நிலையை அடையும் பொழுது
இறைநிலை தானாகவே அருளப்பட்டு முக்தி கிடைக்கிறது
அதையே திருக்குறள்
அறத்தின் வழியில் பொருள் ஈட்டி உடல் இன்பத்தை உயிர் இன்பம் ஆக மாற்றி
உடல் கடந்த நிலையில் ஆன்மா வுடன் ஒன்றி எளிதாக வீடுபேறு என்ற முக்தி
கிடைக்கிறது என்கிறது
திருக்குறள் உலக மதங்களின் மூலம்
மதங்கள் தோன்றுவதற்கு முன்னால் இறைவனால் கொடுக்க பட்ட எழுத பட்ட இறைவேதம்
அனைத்து யோகங்களும் அடங்கிய ஆதி வேதம்

Arutchelvan Thiru
கண்ணகியின் பெயரால் மதுரையை எரித்தது ஆரியக்கூட்டம் என அறிக.

V Kumaresh
வள்ளுவத்திற்கு சரியான பொருள் விளக்கம் காணாமல் போனதன் விளைவு தமிழ்
ஒடுங்கி ஆரியம் இத்தனை ஆட்டங்கள் போட்டதிற்கான அடிப்படை உண்மை ஆகும்
திருக்குறளுக்கு திருமந்திரம் திருஅருட்பா மூலம் விளக்கம் கண்டால்
மட்டுமே அதில் உள்ள உண்மையான ஆன்ம இரகசியங்களை அறிந்து கொள்ள முடியும்
வெறும் மன அறிவு கொண்டு பார்த்தால் இந்த உலக வாழ்கைக்கான பொருள் மட்டுமே
அறிந்து கொள்ள முடியும்
இம்மை மட்டுமல்ல மறுமை இன்பம் பற்றியும் திருக்குறள் கூறுகிறது
அந்த முயற்சியில் தங்களை போன்றவர்கள் ஈடுபட வேண்டும் என்பது எனது
தாழ்மையான வேண்டுகோள்

Aathimoola Perumal Prakash
அதென்ன எல்லா விவாதமும் சுற்றிவளைத்து ஆரிய கற்பனை வாதத்திலேயே போய் முடிகிறது?

மூடநம்பிக்கை திருத்தம் திரிபு திரிப்பு மனைவி இல்லறம் கணவன் கொழுநன்
இறைமறுப்பு பெண்ணுரிமை பெண்ணடிமை மழை திருக்குறள் குறள் அர்த்தம்
இலக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக