செவ்வாய், 10 அக்டோபர், 2017

தீபாவளி தமிழரின் கார்த்திகை புத்தாண்டு தான் அமாவாசையில் வடக்கே கொண்டாடப்படுகிறது வானியல் பண்டிகை நாட்காட்டி

பாசுகரன் மகன் நவீனன் , 4 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — சீனி.
மாணிக்கவாசகம் மற்றும் 64 பேர் உடன்.
விளக்கீடும் தீபாவளியும் - தீபாவளியை பற்றிய இரகசியம்
=============================================
=======
தமிழருடைய விளக்கீடே வடநாட்டில் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
தமிழர்கள் ஒவ்வொரு விழாவினையும், முழுநிலவிலேயே கொண்டாடுவார்கள். அதன்படி
விளக்கீடு கார்த்திகை முழுநிலவில் கொண்டாடினான்.
சூரிய நாள்காட்டியில் மேழம் முதல் மாதமாக தொடங்குவதற்கு முன் சந்திர
நாள்காட்டி பயன்படுத்தப்பட்டது. அதில் கார்த்திகை முழுநிலவே புத்தாண்டாக
இருந்தது. நமக்கு முழுநிலவில் மாதம் தொடங்கும். புத்தாண்டை விளக்குகள்
ஏற்றி கொண்டாடினர் தமிழர்.
தமிழரை போல் வடவருக்கும் கார்த்திகையில் வருடம் தொடங்கியது. ஆனால்,
அமாவாசையில் தொடங்கும். அதன்படி, கார்த்திகை அமாவாசையில் புத்தாண்டு
கொண்டாடினர். பிறகு வரஹாமிரர் சூரிய சித்தாந்ததின் அடிப்படையில் மேழத்தை
ஒட்டி, சித்திரையை முதல் மாதமாக ஆக்கினார் சந்திர நாள்காட்டியிலும்.
(ஆனால், குஜராத்தியினரும், மார்வாரிகளும் இன்றுவரை சித்திரையை
பின்பற்றாமல், கார்த்திகையையே முதல் மாதமாக கொண்டு புத்தாண்டு கொண்டாடி
வருகின்றனர்.)
கார்த்திகையில் தான் தீப ஒளித்திருநாளை கொண்டாட வேண்டும். வடநாட்டினர் தங்களுடைய
கார்த்திகை மாதத்தில் தீபாவளியை கொண்டாடுகிறான் சரி, தமிழன் ஏன்
தீபாவளியை கொண்டாடுகிறான்??? தமிழனுக்கு அப்போது ஐப்பசி மாதம் தானே
நடைப்பெற்றுக்கொண்டு இருக்கும். 15 நாட்கள் கழித்து முழுமதியில்
தமிழனுடைய கார்த்திகை மாதம் தொடங்கும். அன்றுதான் அவன் தீப ஒளித்
திருநாளாம் விளக்கீடு... இனியாவது தமிழர்கள் உண்மையை தெரிந்துக்கொண்டு
விழாக்களை கொண்டாடுங்கள்!!!
தமிழரின் கார்த்திகை விளக்கீட்டிற்கு கிடைக்க வேண்டிய மரியாதை வடவரின்
கார்த்திகை தீபாவளிக்கு கிடைப்பதை பார்க்கும் போது மனம் வருந்துகிறது.
தீபாவளியை புறக்கணித்து, விளக்கீட்டிற்கு முக்கியத்துவம் தர
உறுதியேற்பீர்களா?? உங்கள் குழந்தைகளுக்கு விளக்கீட்டிற்கு மத்தாப்பூ ,
புத்தாடை வாங்கி தருவீர்களா???
19 மணிநேரம் · பொது

இரா அருண்மொழித்தச்சன்
பொதுவாக அன்று பனை மட்டைகளை கோபுரம் போல சிவன்கோவில் எதிர்புறம் அமைத்து
சுடலை எரிப்போம்.பிறகு எரிந்த பனைமட்டையை எடுக்க பயங்கர போட்டிநிலவும்
ஏனெனில் அந்த எரிந்த பனைமட்டையை தோட்டங்களில் வைத்தால் விளைச்சல் நன்றாக
இருக்கும் என்ற நம்பிக்கை. எனக்கு நிலங்கள் இல்லை ஆனாலும்
வீட்டுதோட்டத்தில் வைப்போம்.அப்போது தீபாவளி வெடியில் பாதி வைத்திருந்த
வாணவெடியும் கொளுத்துவோம்.இரண்டு நாள் முன்னதாக ஒவ்வொரு மிதிவண்டி
கடையாய்ஏறி எப்படியாவது ஒரு பழைய tyre ஐ வாங்கி பக்க இரும்பு கம்பி களை
எடுத்துவிட்டு சுற்றிவைத்து சுடலை அன்று கொளுத்துவோம்.வய
ல்வெளியும்,வாய்க்காலும் அருகிலேயே இருக்கும். அதனால் தீ விபத்திற்கு
வாய்ப்பு இல்லை.ஒரு புறம் வாய்க்காலில் நண்டு,மீன் பிடித்து சுட்டு
சாப்பிடுவதும் நடக்கும்.அன்று மாலை முதல் இரவு வரை சிறுவர்களும்சிற
ுமிகளும் மிகுந்த மகிழ்ச்சியான நாட்களாக அன்று இருந்தது.ஆனால் இன்று
நினைவாகமட்டுமே இருக்கிறது.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · 5 ·
பதிலளி · புகாரளி · 10 மணிநேரம் முன்பு
Mani Pari பதிலளித்தார் · 4 பதில்கள்
Mani Pari
கார்கால தீவலி. வலி என்றால் பலியிடல்.
பிடித்திருக்கிறது · பதிலளி · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
Mani Pari
பலியிடல் நிறுத்தியவுடன். வெறும் தீவலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக