செவ்வாய், 10 அக்டோபர், 2017

பூலித்தேவர் முடிவு மரணம்

பூலித்தேவர் கௌசிக் தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்
உணர்கிறார்.
நான் தமிழ் குடியை சேர்ந்தவன்
என் இனம் "தமிழ் இனம்"
பூலித்தேவர் யார்???????
இவர் செப்டம்பர்1,1715 திருநெல்வேலி சீமையில் சங்கரன்கோவில் தாலுகா உள்ள
"நெல்கட்டும் செவ்வல்" என்ற இடத்தில் பிறந்தார்.
இவர் தந்தை பெயர்:சித்ரபுத்ர தேவர்
தாயார் பெயர்:சிவஞானம் நாச்சியார்
இவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் "காத்தப்ப தேவர்".
இவர் தன் 12 வயதிலேயே
குதிரையேற்றம்
யானையேற்றம்
வாள்வீச்சு
மல்யுத்தம்
வேலேந்தல்
அம்புஏய்தல் இப்படி பல போர் பயிற்சிகளை பயின்று சிறு வயதிலேயே தன்
தந்தையால் அரசராக மூடி சூட்டபட்டார்.
இவர் பனையூர் கிராமத்தை சேர்ந்த தன் மாமன் மகள் "கயல்கன்னி நாச்சியாரை"
மணம் செய்தார். இவருக்கு சித்திரபுத்திர தேவர், சிவஞான பாண்டியர் என
இரண்டு மகன்களும், கோமதி முத்துதளவச்சி என்ற பெண் மகளும் பிறந்தார்கள்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ஒரு முறை புலி ஒன்று வந்து
தொந்தரவு செய்தது, உடனே அப்போது மதுரை மன்னராக இருந்த விசயரங்க சோக்கநாத
நாயக்கர் அனைத்து பாளையக்காருக்கும் புலியை விரட்டுபவர்களுக்கு காக்கா
தோப்பு அரண்மனையும் மற்றும் பல வெகுமதிகளும் சண்மானமாக வழங்கபடும் என
அறிவித்தார்.
எவராலும் விரட்ட முடியாத அந்த புலியை காத்தப்பதேவர் அதன் பின்னங்கால்களை
பிடித்து வாலை சுழற்றி ஒரே அடியில் புலியை கொன்றதால் அவருக்கு மாவீரன்
"பூலித்தேவர்" என்று மன்னரால் அழைக்கபட்டார்.
காக்காதோப்பு அரண்மனை
நெற்கட்டான் கோட்டை
பனையூர் அரண்மனை
வாசுதேவநல்லூர் கோட்டை
ஆவுடையார்புரம் கோட்டை
களக்காடு வீரபாண்டி கோட்டை என பல கோட்டையை ஆண்டு வந்தாலும் மக்கள் சேவையே
மகேசன் சேவை என்று வாழ்ந்து வந்தார்.
பூலியாரின் போர்க்கள்:
ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் 1755இல் மாபுச்கான்
ஆங்கிலேயன் கர்னல் கீரான் ஓடு கூட்டணி வைத்து பூலியார் மீது போர்
தொடுத்தனர்.
பூலியார் அருகில் இருந்த பாளையக்கார்களை அழைத்து எல்லோரும் சேர்ந்து
ஆங்கிலேயர் மற்றும் நவாப்பை தோற்கடித்தனர்.
அன்று முதல் நெற்கட்டும் செவ்வல் என்று அழைக்கபட்ட ஊரை பூலியார்
"நெற்கட்டான் செவ்வல்" என அறிவித்தார்.
12 மாதங்கள் பிறகு 1756ல் மீண்டும் ஆங்கிலேய நவாப் படையை
திருநெல்வேலியில் வைத்து தோற்கடித்தார்.
பின் 1759ல் மதுரையில் இருந்து படை, தூத்துக்குடியில் இருந்து படை,
நாகப்படினம் இருந்து படை, திருச்சி, திருவனந்தபுரம், பாளையங்கோட்டை
இருந்து படை திறட்டி வந்தனர் ஆனால் பூலித்தேவர் முன்பு ஒன்றுமு
பலிக்கவில்லை.
போரின் போது ஆங்கிலயர் தாக்குதலால் ஆளக்கபட இருந்த பூலியார் மனைவி
கண்டவன் கையில் சாவதைவிட தானே தன் உடம்பை நெருப்பாக்கி மக்களுக்கு காவல்
தெய்வமானார்.
இப்படி மனைவியை இழந்தும் தன் மக்களின் நலத்திற்காகவே மீண்டும் 1760ல்
ஆங்கிலய படைகளை வீழ்த்தினார்.
இப்பேர்பட்ட வீரனை வஞ்சகத்தாலையே வீழ்த்த திட்டம் தீட்டிய ஆங்கிலேயர்
ஆரணி கோட்டை அனந்தநாராயனன் ஓடு சேர்ந்தனர்.
இந்த அனந்தநாராயனன் பூலியார்க்கு கடிதம் எழுதியனார் அதில் ஆங்கிலேயர்க்கு
எதிராக ஒரு ஆயுத சாலை கட்டியுள்ளதாகவும் அதை திறந்து வைக்க வருமாறு
அழைப்பு விடுத்தார். பூலியாரும் வர சம்மத்தித்தார்.
பூலியாரை சுற்றி காட்டுவது போல் ஒரு இரும்பு கூட்டில் அடைத்தான்
அனந்தநாராயனன்.ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தான்.
அப்போது அவர் மக்களுக்கு கூறிய வரிகள்
"புலி கூண்டில் சிக்கிவிட்டது, மக்கள் அனைவரும் வீரம் கொண்டு போராடுங்கள்
நம் மண் என்றும் அன்னியர்களிடம் சிக்கிர கூடாது, இதுவே இந்த நாட்டிற்கும்
எனக்கும் நீங்கள் செய்யும் கைமாறு " என்றார்.
பிறகு பாளையங்கோட்டை சிறைக்கு ஆங்கிலயரால் அழைத்து செல்லும் வழியில் தன்
"குல தெய்வமான ஆவுடைநாச்சியாரை" வணங்க வேண்டும் என்று கேட்டார்,பூலியார்.
சரி என்று அங்கு அழைத்து செல்லபட்ட பூலியார் கைசங்கிலியோடு உள்ளே சென்று
மனமுருக பாடினார் உடனே தன் கைசங்கிலிகள் உடையப்பட்டு காற்றோடு காற்றாக
கறைந்தார்.
நம் காவல் தெய்வமானார்
இதுவே பூலித்தேவர் என்னும் மாவீரனின் வரலாறு இந்த வரலாறு நாம் படிக்கும்
பள்ளி பாட புத்தகத்தில் இருக்க வேண்டியது ஆனால் திட்டமிட்டே
மறைக்கபட்டுள்ளது.
அதனால் என் முன்னோர் பெயரை என் பெயர் முன்னே முகநூலில் பெருமையோடு வைத்துள்ளேன்.
இப்படி பல மன்னர்களு பல வரலாறுகள் என் மண்ணில் உண்டு அனைத்து உண்மைகளும்
வெளிவரும் காலம் இது.
நன்கு புரிந்து கொள்ளுங்க பூலித்தேவர் அனைத்து தமிழ் மக்களுக்காக தான்
போராடினாரே ஒழிய வெறும் குறிப்பிட்ட சமூகத்திற்காக போராடவில்லை.
எனவே அவரை குறிப்பிட்ட சமூகத்தில் அடைக்க முயற்சிப்பது பெறுங்கேவலம்
நமக்கு ஏன்னென்றால் கறை நினைப்பவர் மனதில் இருக்கு என் முகநூல் பெயரில்
அல்ல
மீண்டும் சொல்கிறேன் நான் தமிழன் என் இனம் தமிழ் இனம்
வாழ்க தமிழ்
வாழ்க தமிழர் வாழ்வியல்

1 கருத்து:

  1. மரணத்தை வென்ற மாவீரர் புகழ் வாழ்க.
    வணங்குகிறோம்.

    பதிலளிநீக்கு