செவ்வாய், 10 அக்டோபர், 2017

பாவாணர் பாண்டியர் வேர்ச்சொல் புல் காட்டுக்காளை மாடு பண்டு பள் பாண்டியன் க்கு வேர்ச்சொல் அல்ல

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் , 19 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
பாவாணரை முழுதாக படிக்காமல் அதிமேதாவியாக உளரித்திரியும் சில அரை
வேக்காடுகளுக்காக # மீள்_பதிவு ....
+++++++++++++++
1>>> எத்தனை முறை விளக்கி சொன்னாலும் திரும்ப திரும்ப பொய்யை
மட்டுமே..வரலாறாக கூறுவோருக்கு இன்னொரு முறை விளக்குவது என்
கடமையாகிறது.முதலில் இங்குள்ள அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
"புல்" என்ற எழுத்துருவில் வெவ்வேறு பொருளுடன்(அர்த்தம்) ஆறு வேர்க்
சொற்கள் உள்ளன என்பதை நினைவில் நிறுத்த வேண்டுகிறேன்.வேர்ச்சொல் ஆய்வில்
பொருள்(அர்த்தம்) தான் முக்கியம் என்பதையும் எழுத்துரு முக்கியம் இல்லை
என்பதை நினைவுறுத்துகிறேன்..கீழ் உள்ள படத்தைக் காண்க...
2>> முதலில் துளைத்தல் என்ற புல் என்பதிலிருந்து வந்த பள்ளரை இங்கு
விளக்குகிறேன்.துளைத்தல் என்றால் ஓட்டையிடுதல் என்று பொருள்..
இந்த துளைத்தல்(ஓட்டையிடுதல்) பொருள் கொண்ட புல் வேர்ச்சொல் எவ்வாறு
மாற்றம் கொண்டு பள்ளம் என்ற சொல் பிறக்கிறது என்பதை பாவாணர்...
"புல்--->பொல்---பொள்--->பள்--->பள்ளம் என்று விளக்குகிறார்.முதலில் புல்
என்ற சொல்லினின்று பொல் என்ற சொல் வருவதற்கும் பொல் என்ற சொல்லுக்கு
சான்று துளை(ஓட்டை) என்பதற்கான சான்றையும் இங்கு பதிகிறேன்..
3>> அடுத்து பொல் என்னும் சொல்லினின்று பொள் என்ற சொல் பிறப்பதற்கும்
அதன் பொருளும் துளை(ஓட்டை) என்பதற்கும் சான்று கீழே பகிர்கிறேன்...
4>> அடுத்து... பொள் என்ற சொல்லில் இருந்து பள் என்ற சொல் மருவுவதற்கும்
,அந்த பள் என்ற சொல்லுக்கு ஓட்டை அல்லது குழி என்பதும்,அச்சொல்லோடு "அம்"
என்னும் ஈறு சேர்ந்து பள்ளம் என்றாகுவதற்கும் சான்று கீழே
5>> மேலே..குறிப்பிட்டுள்ள சான்றால் பள்ளமான நிலத்தில் உழவு செய்வதால்
தான் பள்ளருக்கு அப்பெயர் வந்தது என்பதும் ,"பள்ளர் " என்ற சொல்லுக்கு
வேர்ச்சொல் "துளைத்தல்(ஓட்டை) எனும் பொருள் கொண்ட 'புல்' " தான் என்பது
உருதியாகிறது.மேலும் இவ்வேர்ச்சொல்லினின்று பிறக்கும் சொற்களனைத்தும்
துளை(ஓட்டை) என்ற சொல்லுடன் தொடர்புடையது என்பது உறுதியாகிறது..
6>> அடுத்து பழமை என்று பொருள் படும் பண்டு என்னும் சொல்லும் அதே "
துளைத்தல்(ஓட்டை) பொருள் தரும் 'புல்'" என்ற வேர்ச்சொல்லின்றே வந்தது
என்பதை பாவாணர் தந்த விளக்கம் கீழே...அதாவது "இக்காலத்தை நோக்க முற்காலம்
பள்ளம் போன்று இருந்தமையால் பள்ளக் கருத்தினின்று பழமைக் கருத்து
தோன்றிற்று..
7>> பழைமை கருத்து "துளைத்தல் பொருள் படும் 'புல்;" என்ற
வேர்ச்சொல்லினின்று வந்ததற்கான சான்று.இதன் மூலம் பள்ளத்தை குறிக்கும்
'பள்' என்ற சொல்லும் ,பழமையைக் குறிக்கும் 'பண்டு' என்ற சொல்லும்
துளைத்தல் பொருள் தரும் "புல் என்ற வேர்ச்சொல்லினின்று வந்தது என்பது
தெளிவாகிறது
8>> இப்போது பள்ளம் என்ற கருத்தினின்று தோன்றிய பண்டு(பழமை) எனும்
சொல்லினின்று பாண்டியன் வரவில்லை என்று பாவாணர் விளக்கியதற்குச்
சான்று.பழமை என்று அர்த்தம் தரும் பண்டு எனும் சொல்லும்,பள்ளம் என்ற
அர்த்தம் பள் என்ற சொல்லும் "துளைத்தல் பொருள் கொண்ட 'புல்' " என்ற
வேர்ச்சொல்லினின்றே வந்தது என்பதை நினைவில் கொள்க..
9>> இப்போது பாண்டியன் எனும் சொல் வந்த வேர்ச்சொல்லைக் காண்போம்.காளை
என்று பொருள் படும் பாண்டி எனும் சொல் "வளைதல் எனும் பொருள் கொண்ட
'புல்;" என்ற வேர்ச்சொல்லின்று வந்தது.இந்த வேர்ச்சொல் உள்ளதற்கு
சான்று....
10>> இப்போது வளைதல் என்னும் பொருள் கொண்ட புல் வேர்ச்சொல் எவ்வாறு
பாண்டி என்றாயிற்று என்பதைக் காண்போம்.புல்--.புள்--.பள்-->ப
ண்டு--.பண்டி--->பாண்டி என்றாயிற்று என்பது பாவாணர் விளக்கம்.ஒன்றை
கூர்ந்து நோக்குவது அவசியமாகிறது.வளைதல் என்னும் பொருள் கொண்ட புல் எனும்
வேர்ச்சொல்லின்று வந்த புள்,பள்,பண்டு,
பண்டு,பண்டி,பாண்டி எனும் அத்தனை சொற்களுக்கும் வளைத்தல் மற்றும் வட்டம்
எனும் பொருளும் அதற்கு தொடர்புடைய பொருள்களே உள்ளதன்றி பள்ளம் என்ற
பொருளோ..துளை(ஓட்டை) என்ற் பொருளோ இல்லை.ஏனெனில் எது வேறு வேர்ச்சொல்.இது
வேறு வேறு வேர்ச்சொல்.
11>> இதன் மூலம் வளைதல் எனும் பொருள் படும் புல் எனும் வேர்ச்சொல்லின்று
தான் 1.வட்டம் 2.வட்டமான தட்டு 3.வட்டமான சக்கரம் 4.வட்டமான சக்கரத்தைப்
ப்யன்படுத்தும் வண்டி 5.உருட்சியான (வட்டமான) உடல் வாகு கொண்ட
காளை(காளையைக் குறிக்கும் பாண்டி எனும் பெயர்) 6.காளையான பாண்டியைக்
கொண்டு செய்யும் உழவு 7.காளை என்று பொருள் படும் பாண்டி எனும்
சொல்லினின்று வந்த பாண்டியன்.என வட்டம் என்ற பொருளோடு தொடர்புடைய அனைத்து
சொற்களும் வந்தது என்பதை அறிக.
12>> இதன் மூலம் துளைத்தற் என்னும் பொருள் கொண்ட 'புல்' எனும்
வேர்ச்சொல்லின் மருவிய சொற்களான பொள்,பள்,பண்டு எனும் அனைத்து
சொற்களுக்கும் துளை(ஓட்டை) எனும் பொருளோ...இல்லை எதைச் சார்ந்த பொருளோ
தான் உள்ளது என்பது உறுதியாகிறது.எ.கா: பள் எனும் சொல்லுக்கும் பள்ளம்
என்று தான் பொருள்.பள்ளம் என்று பொருளின்று வந்த பண்டு(பழைமை) எனும்
சொல்லுக்கு வேர்ச்சொல் துளைத்தற் பொருள் கொண்ட புல் எனும் வேர்ச்சொல்லே
அன்றி பாண்டியன் எனும் சொல் வந்த "வளைதற் பொருள் கொண்ட புல்" என்னும்
வேர்ச்சொல் அன்று.வளைதற் பொருள் கொண்ட புல் எனும் வேர்ச்சொல்லில் மருவிய
சொற்களான புள்,பள்,பண்டு, பண்டி,பாண்டி என அனைத்து சொற்களுக்கும்
வளைதல்,வட்டம்,முதலிய பொருட்களும் அல்லது அதற்கு தொடர்புடைய பொருட்களும்
மட்டுமே உள்ளது என்பது திண்ணம்.
13>> பாண்டியன் எனும் சொல் காட்டுக் காளையினின்று வந்தது என்பதும்,
காயடிக்கப்பட்ட உழவுக் காளையினின்று வரவில்லை என்பதற்கான சான்று.இதன்
மூலம் காளைக்கு பாண்டி என்ற பெயர் மருத நிலத்திற்கு முன்பே வந்துவிட்டது
என்பது தெளிவாகிறது...
14>> காட்டுக் காளையைக் குறித்த பாண்டி எனும் சொல்லினின்று வந்த
பாண்டியன் எனும் சொல்லை...காயடிக
்கப்பட்ட காளையைக் கொண்டு செய்யும் பாண்டியம்(உழவு) எனும் சொல்லினின்று
தான் வந்தது என்று கூறுவது புளுகர்களின் செயல்.காட்டுக் காளையான
பாண்டியைக் காயடித்து பயன்படுத்துவதால் தான் உழவுக்கே பாண்டியம் என்ற
சொல் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
15>> காட்டுக் காளையான பாண்டியை அடக்கி அதனை ஏருழவிற்கு பழக்கியது முல்லை
நிலத்தில் தான் முதலில் என்பதற்கான சான்று...ஒன்பதாவது வரியில்....
16>> பள்ளர் எனும் சொல் வந்த "துளைத்தல் எனும் பொருள் கொண்ட புல்" எனும்
வேர்ச்சொல்லில் இருந்து தான் வந்ததை மேலே நிறுவினேன்.அதே
வேர்ச்சொல்லினின்று வந்த பண்டு (பழமை) எனும் சொல் பாண்டியன் எனும்
சொல்லுக்கு மூலம் இல்லை என்று பாவாணர் மறுக்கும் சான்று.
17>> காட்டுக் காளைக்கு உழவினின்று அப்பெயர் வந்ததாக சிலர் பிதற்றுவது
வேடிக்கையானது.காளைக்கு பாண்டி என்ற பெயர் அதன் உருட்சியான உடல் வாகால்
தான் வந்தது என்பதை பாவாணர் கூறும் சான்று...கடைசி
வரிகளில்..மேலும்...முல்லை திரிந்து பாலையாகும் நிலத்தைச் சேர்ந்த
மறவனுக்கு காளை என்ற பெயர் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
.இதன் மூலம் உழவுக்கு பாண்டியம் என்ற பெயரே..பாண்டியாகிய காளையால் தான்
வந்தது என்பது தெளிவாகிறது.
18>> வளைதற் பொருள் கொண்ட புல் எனும் வேர்ச்சொல்லினின்று
புல்-->புள்-->பள்-->பண்டு-->பண்டி என திரிந்த சொற்கள் அனைத்திற்கும்
பொருள் வட்டம் என்பதும் அதைச் சார்ந்ததுமே...இவ்வாறே..பண்டி (அ) வண்டி
வட்டமான சக்கரத்தைக் குறித்து பிறகு அச்சக்கரத்தை உடைய சகடத்தைக்
குறித்தது.இதனால் தான் மாட்டு வண்டியோ,குதிரை வண்டியோ அவற்றின் வட்டமான
சக்கரத்தால் அவற்றிற்கு பாண்டி எனும் பெயர் வந்தது.காளைக்கு உருட்சியான
உடல்வாகால் தான் பாண்டி எனும் பெயர் வந்தது.அக்காளையைக் காயடித்து
பயன்படுத்துவதால் தான் உழவுக்கே..பாண்டியம் என்ற பெயர் வந்தது.இதன் மூலம்
.
பாண்டியன் என்ற சொல்லுக்கும் உழவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது தெளிவு.
19>> முதலில் 'பள்' என்ற சொல் எந்த கருத்து வேரினது என்பதை அறிக.இது
புல்(துளைத்தல் கருத்து வேர்) வேர்ச்சொல்லினின்று வந்தது.இதன் பொருள்
பள்ளம் மட்டுமே.இது போன்று வெவ்வேறு கருத்து வேரினின்று வந்த 'பள்' எனும்
சொல் அதன் மூலக் கருத்து வேரின் பொருளைக் கொண்டு மாற்றம் பெறும்.
கீழே நான் பதியும் படம்.புல்(துளைத்தல் கருத்து வேர்) வேர்ச்சொல்லினின்று
வந்த பள்.இதன் பொருள் குழி மட்டுமே.திண்மை யெல்லாம் இல்லை.முதலில்
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமே முடிச்சு போட்டு ஆய்வு செய்து
'மீண்டெழும் மள்ளர் வரலாறு போன்ற புத்தகங்களை எழுதுவதை
நிறுத்திவிட்டு.நன்றாக ஆய்வு செய்து எழுதவும்...
20>> பாண்டி என்ற சொல் காட்டுக் காளைக்கு தான் முதலில் வந்தது.இதில் எந்த
வித மாற்றுக் கருத்தும் இல்லை.பாண்டியன் என்ற சொல் அக்காட்டுக் காளையைக்
குறித்த பாண்டி என்பதினின்றே வந்தது.உழவுக்கு ஏன் பாண்டியம் என்ற பெயர்
வந்தது என்றால் காளையைப் பயன்படுத்துவதால்.. தான்.இங்கு காயடிக்கப்படாத
காட்டு காளை தான் மையப் பொருள்.
நன்றி நன்றி நன்றி.......
++++++++++++++++++
பாண்டியன் என்ற சொல் வந்த புல் எனும் வேர்ச்சொல் வேறு.அது வளைதல் கருத்து
கொண்டது.இந்த புல் திரிந்து வரும் சொல்லான பள்ளின் பொருள் வட்டம் தான்.
பள்ளன் என்ற சொல் வந்த புல் எனும் வேர்ச்சொல் வேறு.இது துளைத்தல் எனும்
கருத்தைக் கண்டது.இது திரியும் போது இடையில் வரும் பள் என்பதன் பொருள்
பள்ளம் (அ) துளை என்பதே.அந்த "பள்" வேறு.இந்த "பள்" வேறு.
++++++++++++++++++++
இறுதியாக,
இந்த 20 பாவாணரின் விளக்கங்களில் இருந்தும் பிற விளக்கங்களில் இருந்தும்
இருந்தும் அறிவது,
துளைத்தற் எனும் பொருள் கொண்ட புல் எனும் வேர்ச்சொல்ல்லினின்று வந்த
பள்,பண்டு ஆகிய சொற்களை வளைதற் எனும் பொருள் கொண்ட புல் எனும்
வேர்ச்சொல்லினின்று வந்த பள்,பண்டு ஆகிய சொற்களோடு ஒப்பிடுவது ஒரு
பித்தலாட்டம்.வரலாற்று திரிபு.
சக தமிழ்க் குடிகளை திருடர் என்று பழிக்கும் சில பள்ளர் தான் இவ்வாறு
மாபெரும் திருட்டு வேலையைச் செய்கின்ற்னர் என்பது நகைப்புக்குரியது.
நன்றி நன்றி நன்றி.....
8 மணிநேரம் · பொது

9 படங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=799540420227224&id=100005138205891&refid=28&_ft_=qid.6468227791863633388%3Amf_story_key.-2873945783117536998%3Atop_level_post_id.799540420227224&__tn__=%2As-R

பள்ளர் மள்ளர் மள்ளரியம் சொல்லாய்வு சாதி திணை மருதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக