புதன், 20 செப்டம்பர், 2017

கிழக்கு முஸ்லீம் ஊர்க்காவல்படை தமிழர் கொலை சிங்களவர் கூட்டு இசுலாமியர் காத்தான்குடி புலிகள் செய்யவில்லை

காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை தமிழீழ விடுதலை புலிகள் மேற்கொண்டார்களா?
---- # பதிவாளர் : தமிழரசன் அப்துல் காதர்
------------------------------------------------------------
----------------------
1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே
காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள்
103 பேர் கொல்லப்பட்ட தினம். தமிழ் மக்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத
சம்பவம் இது. இப்படுகொலையினை செய்தவர்கள் திட்டமிட்ட வகையில், புலிகள் என
சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
இந்த துயரச்சம்பவம் நடைபெற்ற மறுநாளான ஆகஸ்ட் 5 ஆம் திகதி இலங்கை அரசியல்
கட்சிகளின் அனைத்து கட்சிகள் சார்பாக ஊடகங்களுக்கு ஒரு கண்டன அறிக்கை
தெரிவிக்கப்பட்டது. அதில் இலங்கை # முஸ்லிம்_காங்கிரசு தலைவரான #
ரவூப்_ஹக்கீம் உட்பட எவரும் இச்சம்பவத்தினை தமிழீழ விடுதலைப்புலிகள் தான்
செய்தார்கள் என்று குற்றம் சுமத்தவில்லை.
ஆயினும் பின்னாளில், விடுதலைப்புலிகள் தான் இக்கொலையினை மேற்கொண்டார்கள்
என முஸ்லிம் ஊர்காவல்படையை சேர்ந்தவர்களால் நேர்த்தியாக திட்டமிட்டு
தகவல் பரப்பப்பட்டன. அதற்கேட்ப, ஊடகங்களுக்கு பேட்டியளிக்க அவர்களே சில
சாட்சிகளையும் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கி
இருந்தார்கள்.
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அந்நேரத்தில் புலிகளின் கிழக்கு
மாகாண தளபதியாக, பின்னாளில் தமிழீழ விடுதலைப்போரை அழிப்பதற்கு இலங்கை
இனவாத அரசுக்கும் மற்றும் சர்வதேசத்திற்கு துணை போன கருணா தான் இருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
2006- 2009 வரை நடைபெற்ற தமிழர் மீதான இன அழிப்பு போரில்
சிங்களவர்களுக்கு சார்பான நிலையில் தமிழீழ போராட்டத்திற்கான மிக முக்கிய
துரோகத்தனத்தில் கருணா தனது சுயநலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு
ஈடுபட்டார் என்பதை சிங்கள அமைச்சர்களே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
அத்துரோகம் மாவிலாறு தொடக்கி கிழக்கில் முழுமையாகவும் பின்னர் வடக்கின்
ஆனந்தபுரம் , முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது.
நிற்க !
80 களில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப்போரில் நூற்றுக்கணக்கான
முஸ்லிம்களும் தமது தாயக விடுதலைக்காக களமாடி மாவீரர்களானார்கள். தமிழீழ
விடுதலைப்போரில் களமாடி மரணிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய
கவுரவமான “ “மாவீரர்” கவுரவமும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இறுதிவரை
நினைவுகூரப்பட்டும் வந்தனர்.
வடகிழக்கை உள்ளடக்கிய தமிழீழ நாட்டின் விடுதலை கோரிக்கையை கீழறுப்பு
வேலைகளால் மட்டுமே பின்னடைய செய்ய முடியும் என்று கணக்கு போட்ட இலங்கை
அரசு இஸ்ரேல் நாட்டின் உதவியினை அமெரிக்கா ஊடாக நாடியது. (தமிழீழப்
போராளிகளுக்கு முதன்முதலாக போர் பயிற்சி அளித்தது பாலஸ்தீன
போராளிக்குழுக்கள்(plo) தான். லெபனானில் இருந்த பயிற்சி முகாம்களில்
பயிற்சி பெற்ற தமிழீழப் போராளிகள் இலங்கை ராணுவத்துக்கு எதிராக களத்தில்
நின்றனர். plo மீதான வஞ்சத்தை தீர்க்க ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட
இஸ்ரேல் தனது உளவு அமைப்பான மொசாட் மற்றும் இராணுவ வல்லுனர்கள் மூலம்
இலங்கை படைகளுக்கு பயிற்சியளிக்க முன்வந்தது.
முதல்கட்டமாக இராணுவ பயிற்சிக்காக இஸ்ரேலிய இராணுவ உயர் அதிகாரிகளை
இலங்கைக்கு அனுப்பி இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி கொடுத்தது. இரண்டாம்
கட்டமாக இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் வருகைதான் முக்கியமானது. அது
புலிகளை எதிர்த்து நேருக்கு நேர் போர் செய்து வெல்லமுடியாது என்பதனை
புலிகளின் போரியல் உத்திகளை கொண்டு கண்டறிந்தது.
எப்படி புலிகளை பின்னடைவுக்கு ஆளாக்கலாம் என்று போட்ட மொசாட்டின்
திட்டம்தான் புலிகளிடம் இருந்து முஸ்லிம்களை பிரிப்பதும் மத அடிப்படையில்
தமிழர்கள் மத்தியில் வேறுபாட்டையும் பகைமையையும் ஏற்படுத்தி தமிழீழ
விடுதலைப்போராட்டத்தில் இருந்து வடகிழக்கு மாகாண முஸ்லிம்களை விலகி
இருக்க செய்வது என்ற சூழ்ச்சித்திட்டம்.
இதன் அடிப்படையில் மொசாட்டின் திட்டத்தின் படி சிங்கள அரசாங்கம்
முஸ்லிம்கள் மத்தியில் ஒரு குழுவை உருவாக்கியது. அது தான் முஸ்லிம்
ஊர்காவல் படைகள். முஸ்லிம்களுக்கு என்று ஒரு சுதந்திர தேசம்
உருவாக்கப்படும் அங்கு முஸ்லிம்கள் கிலாபத்தை நிலைநாட்டலாம் என்று ஆசை
வார்த்தை கூறி புலிகளுக்கு எதிராக ‘ஜிகாத்தை’ அறிவித்து செயல்பட
தூண்டியது. குறிப்பாக கிழக்கு மாகாணம் தங்களுக்காக தேசமாக அமையும் என
ஜிகாத் களுக்கு நம்பிக்கையூட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக அம்பாறை
மாவட்டம் தங்களின் தனித்தேசம் என முஸ்லிம்கள் அனைவரையும் நம்ப வைத்ததில்
மொசாட் வெற்றி கண்டது என்றே சொல்லலாம். (தமிழகத்தில் ஜம்மியா என்று
அறியப்பட்டதுதான் ஜிகாத். 97 களில் நானும் இந்த ஜம்மியாவுக்காக ஒலிநாடா .
அல்ஹஸனாத் மாத இதழ் மீள்பார்வை பத்திரிகைகளை மக்களிடம் கொண்டு
சேர்த்தவர்களில் நானும் ஒருவன் )
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ‘ஜிகாத்’ ஊர்காவல் படையினர் ஆயுதம் தாங்கிய
புலிகளை எதிர் கொள்ள இயலாத முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிங்கள
இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய
ஆரம்பித்தனர்.
திராய்க்கேணி படுகொலைகள் . 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் திகதி இலங்கையின்
அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில்
இடம்பெற்ற படுகொலை சிறப்பு அதிரடிப் படையினரின் ( STF) உதவியுடன்
முஸ்லிம் ஊர்காவல் படையினரால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
திராய்க்கேணி கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ
தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. STF உதவியுடன் திராய்க்கேணி
கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம ஊர்க்காவல் படை அங்குள்ள கோயிலில்
தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து
முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள்
முஸ்லிம் ஊர்க்காவல் படையால் தீக்கிரையாக்கப்பட்டன.
சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல்
வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு
ஆரம்பமான இப்படுகொலைச்சம்பவம் மதியம் வரை நீடித்திருந்தது. இப்படுகொலைகளை
அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி
முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர்
திரும்பினர்.
இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல்
கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி
என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.
2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில்
சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில்
மனித எலும்புக்கூடுகள் பலவற்றைக் கண்டுபிடித்தனர். இவை திராய்க்கேணிப்
படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என
உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.இத
ு தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.
1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை
நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை
சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ
முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட
பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற
இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.
கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத
குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும்
இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி
எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர்
தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தில், 8வயதுக்கு உட்பட்ட 68 சிறுவர்கள்
படுகொலை செய்யப்பட்டிருந
்தனர்.******** கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள்.
இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில்
இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர்
அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி
கொன்றனர்.
இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை
புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது. காயங்களுடன் தப்பி சென்ற
சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு மக்கள் குழுவும்
ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து
காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த
படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார்.
இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.
சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை
படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி
ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை,
புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம்
கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேச அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை
மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை
செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.
அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து
வருகின்றனர்.
1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம்
அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம் ஊர்க்காவல் படையினர் ஈவிரக்கமின்றி
வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை
செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை
தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில
படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.
***20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும்
முஸ்லீம் ஊர்க்காவல் படைகளால் 69 தமிழர்கள் படுகொலை
***05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை .
***10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .
***16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக
சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.
*** 26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம்
ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு
காணாமல் போயினர்.
***29.07.1990 ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை
விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு படுகொலை
செய்யப்பட்டனர்.
***01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.
*** 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் ஊர்க்காவல் படை
குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் கோவில் தர்மகர்த்தா
தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர்
காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு,
வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352
தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.
*** 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில்
மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள்
தீக்கிரையாக்கப்பட்டது. அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்களே
சிங்கள இராணு உதவியுடன் இப்படுகொலையினை செய்தார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச்
சேனை, செங்கலடி, ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை
காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட
தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன.
பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று
சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில்,
நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா
வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம்
முதலானவை காணப்படுகின்றன.
தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள்
இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில்
படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக
அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை
முதலானவற்றைக் கூறலாம்.
இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்க
ு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து
அங்கீகரிக்கப்படாதவர்களாகவும் காணப்படுகின்றனர் . முஸ்லிம் ஊர்க்காவல்
படைகளால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டத
ோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.
***1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப்
பிரதேசங்களில் முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்
அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி
அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற
முஸ்லிம் ஊர்க்காவல் படையினர் நிந்தவூர் முருகன் கோவிலில் 64
தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 தமிழ் இளைஞர்களையும்
படுகொலைசெய்தனர்.
மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ்,
முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக அமைந்தபோதிலும்
எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவுமில்லை. இவை தவிர
இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள்
சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்ப
ட்டன.
சம்மாந்துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனை
கரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில், ஓட்டமாவடிப்
பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம் ஊர்க்காவல்
படைகளால் சிதைக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்றுவரை
விசாரணையும் இல்லை.பாதிக்கப்
பட்டவர்களுக்கு நீதியும் இல்லை.
முஸ்லிம் ஊர்காவல்படையினர், தமிழர்களை இவ்வாறு கொடூரமாக படுகொலை செய்த
போதும் புலிகள் அப்பாவி முஸ்லிம்கள்மீது எந்தவித தாக்குதல்களையும் இதுவரை
மேற்கொண்டதில்லை. முஸ்லிம்களை தமிழர்கள் என்றே பார்த்தார்கள் புலிகள் .
அதனால் சகோதரர்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும் சொல்லலாம்.
இந்த படுகொலைகள் அனைத்தும் கிழக்கின் எல்லைக்கிராமங்களில் இருந்து
தமிழர்களை வெளியேற்றி விட்டு முஸ்லிம்களின் இருப்பினை உறுதி செய்யும்
முகமாகவே சிங்களவர்களின் கட்டமைக்கப்பட்ட செயத்திட்டதில் முஸ்லிம்
ஊர்காவல்படைகளால் மேற்கொள்ளப்பட்டது. அதனால், தமிழர் மீதான படுகொலைகளை
முஸ்லிம் தலைமைகள் கூட கண்டிக்கவுமில்லை: கண்டுகொண்டதுமில்லை.
நன்றி
-தமிழரசன் அப்துல்காதர்.
///////////////////////////////
////////////////////////////////
///////////////////////////////////////
இது 10 மாதங்களுக்கு முன்னர் தம்பி
# தமிழரசன்_அப்துல்காதர் எழுதிய முழுவிளக்க கட்டுரை.. (பதிவின் கடைசி
பத்தியை மட்டும் நீக்கி இருக்கிறேன் தம்பி தமிழரசன் அப்துல்காதர்)
இதில் குறிப்பிடப்பட்டுள்ள உளவுத்துறைகளின் செயல்பாடுகள் பற்றி தனியாக
ஒரு கட்டுரை எழுதுகிறேன்
21 மே, 11:06 PM · பொது

Aathimoola Perumal Prakash
இதில் தெளிவே இல்லை.
புலிகள் செய்யாத காத்தான்குடி படுகொலை வேட்டொலி
என்று தேடுங்கள்.
அப்படியே
முதல் காத்தான்குடி படுகொலை வேட்டொலி
என்று தேடுங்கள்.
தெளிவாக எழுதியுள்ளேன்.
அப்படியே
புலிகளும் இசுலாமியரும் வேட்டொலி
என்று தேடுங்கள்
யாழ் வெளியேற்றம் உட்பட எல்லாவற்றையும் எழுதியுள்ளேன்.

வீரத் தமிழச்சி றொசானி
முஸ்லிம் ஊர்காவல்படை சிங்கள காடைகளுடன் சேர்ந்து அரங்கேற்றிய படுகொலைகள்...
6 ஆகஸ்டு 1990 - அம்பாறை திராய்க்கேணி படுகொலை – 47 தமிழர்கள்
9 செப்டம்பர் 1990 - பிள்ளையாரடி, திராய்மடு படுகொலை- 198 தமிழர்கள்
20 சூன் 1990 - வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை – 69 தமிழர்கள்
05 சூலை 1990 - வீரமுனை படுகொலை - 13 தமிழர்கள்
10 சூலை 1990 - வீரமுனை படுகொலை - 15 தமிழர்கள்
16 சூலை 1990 - மல்வத்தை வன்புணர்வு படுகொலை - 8 பெண்கள்
26. சூலை 1990 - வீரமுனை கடத்தல் (23 சிறுவர்கள் உட்பட) - 32 இளைஞர்கள்
29 சூலை 1990 ஆசிரியர் ஒருவர் குடும்ப படுகொலை
01 ஆகஸ்டு 1990 - சவளக்கடை கடத்தல் – 18 தமிழர்கள்
12 ஆகஸ்டு 1990 - வீரமுனை அகதி முகாம் படுகொலை – 14 தமிழர்கள்
1990 - நிந்தவூர் முருகன் கோவிலில் படுகொலை- 64 தமிழர்கள்
குழந்தைகள், சிறுவர்கள் என்று பார்க்காது மூர்கதனமான படுகொலைகள்.. இதில்
பல பெண்கள் வன்புணர்வு செய்யபட்டு கொலைசெய்ய பட்டது, எரியூட்ட பட்ட
கொடூரங்களும் அடக்கம்....

ஆகஸ்ட் -01-மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை

இதுதான் புலிகள் வேடமிட்ட இசுலாமியரல்லாத சிங்கள கூலிகள் செய்த படுகொலை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக