திங்கள், 3 ஏப்ரல், 2017

மள்ளர் பெருமை நெல் நாகரீகம் தொடர்பு மல்லர் மள்ளர் சொல் சங்ககால வேளாண்மை குடி பள்ளர் சாதி

aathi tamil aathi1956@gmail.com

28/11/15
பெறுநர்: எனக்கு
போர் செய்யும் மள்ளர் ஔவையார் பாண்டிய வேந்தர் நெடுஞ்செழிய மள்ளரை
கரிகால மள்ளர் உண்டி கொடுத்தோ ருயிர் கவடுஅதோரே திவாகர நிகண்டு பிங்கல
நிகண்டு பெரியபுராணம்
என மிக நீள விளக்கம்
www.tamilpaper.net/?p=4990

தேவராக இருப்போம், தேவேந்திரரோடும் இருப்போம்!

தென் தமிழகத்தைப் பாதிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று சாதிக் கலவரங்கள். பெரும்பாலும் அவை தேவர் சமூகத்துக்கும் ப(ம)ள்ளர் சமூகத்துக்கும் இடையில்தான் நடக்கின்றன என்று சொல்லிவிடலாம்.
தேநீர் விடுதிகளில் இரட்டைக் குவளை என்பதில் ஆரம்பித்து பஞ்சாயத்தில் தலைவராக யார் நிற்பது என்பதுவரை சாதியின்பிடி வலுவாக இருக்கிறது.
ஒருவகையில் முன்பைவிட இந்தப் பிரச்னை அதிகமாகியிருப்பதுபோலவே தெரிகிறது. இந்தப் பிரச்னையை இப்போது நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் பார்ப்பது ஒருபோதும் சரியான தீர்வுக்கு இட்டுச் செல்லாது.
தென் தமிழகத்தின் சமூக அமைப்பை ஒருவர் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாகதேவர் – மள்ளர் சமூகங்களின் நிலையைப் புரிந்துகொள்ளவேண்டும். தேவர் சமூகத்தினர் நிலவுடமையாளர்களாகவும் மள்ளர் சமூகத்தினர் அந்த நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாகவும்தான் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்கள் என்று ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. மள்ளர்கள்தங்களை அப்படி நினைக்கவில்லை. ஒருகாலத்தில் அவர்களே மன்னர்களாகஆதிக்க சாதியாக இருந்ததாகவே அவர்கள் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஆனால்இன்று பொருளாதாரரீதியாக பெரும்பாலான மள்ளர்கள் ஆதிக்க சாதியான தேவர்களைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். சமீபத்திய பல நூற்றாண்டுகளாக இந்த நிலையே நீடித்து வந்திருக்கிறது. பழங்காலத்தில் குரு – சிஷ்யன்கணவன் – மனைவிமன்னர் – குடிமக்கள் என பிறவற்றில் எப்படி விசுவாசமும் மரியாதையும் ஆதார அம்சங்களாக இருந்தனவோ அதுபோலவே பண்ணையார் – பண்ணையாள் உறவிலும் இருந்துவந்திருக்கிறது.
நவீன சமூகம் புதியதொரு மதிப்பீட்டை முன்வைக்கிறது: இதில் அனைவரும் சமம். ஒவ்வொருவருக்கும் கல்வியும் பிற வசதிகளும் சமமாகத் தரப்படும். அவரவர் திறமைக்கு ஏற்ப சமூக அடுக்கில் அவருடைய இடம் தீர்மானமாகும். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கப்படக்கூடாது.
இன்றைய நவீன சிந்தனையின் அடிப்படையில் இதுவே நியாயமானதாகச் சொல்லப்படுகிறது. இதே அடிப்படையில்தான் இப்படியான வாழ்க்கை முறை இருந்திராத கடந்த காலம் பிற்போக்கான ஒன்றாகவும் சொல்லப்படுகிறது. இன்றைய பெரும்பாலான பிரச்னைகளின் ஆணிவேர் இதில்தான் இருக்கிறது: நேற்றைய வாழ்கையை இன்றைய அளவுகோலால் அளத்தல். அதுதான்மறவனை வெட்டு மறத்தியைக் கட்டு பாணியிலான ‘விடுதலைப் போராட்டத்தை’  நியாயப்படுத்தவும் செய்கிறது.
சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இரண்டு வழிமுறைகள் நம் முன்னே இருக்கின்றன. ஒன்று கடந்த காலத்தைப் பழித்துஒழித்து புதியதை உருவாக்குவது…  இன்னொன்றுகடந்தகாலத்தைப் பழிக்காமலே அதில் இருக்கும் சில அம்சங்களை நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றிபுதியதொன்றை உருவாக்குவது. ஒரு வசதிக்காக முன்னது அம்பேத்காரின் வழிமுறை… பின்னது காந்தியின் வழிமுறை என்று சொல்லலாம். இருவரின் வழிமுறை வேறு என்றாலும் இலக்கு ஒன்றுதான்: சமத்துவ சமுதாயம்.
விஷயம் என்னவென்றால்காந்தியின் அன்பாலோ அம்பேத்கரின் கலகத்தாலோ அதை உருவாக்கிவிட முடியாது. சம்பந்தப்பட்ட மக்களின் மனதில் அந்த எண்ணம் உருவாக வேண்டும். தென் தமிழகத்தில் வாழும் தேவர்கள் தங்களுக்குக் கீழே இருக்கும் பிரிவினரைத் தமக்கு சமமாக மதித்து நடக்க வைக்க என்ன வழிஅங்கிருக்கும் மள்ளர்கள் தேவர்களுடன் இணக்கமாக வாழ்வது எப்படி?
இரண்டு தரப்பினருக்கு இடையே ஒரு பிரச்னை என்றால்அதைத் தீர்க்க இரண்டு தரப்பினரின் இடத்தில் இருந்துகொண்டு விஷயத்தைப் பார்ப்பது அவசியம். எதிர் தரப்பின் நியாயங்களை மறுக்கும் ஒருவர் தனக்கான பாதையில் தடைகளை உருவாக்கிக்கொள்கிறார் என்றுதான் அர்த்தம். நாம்… பிறர்… என்று அணி பிரிந்து நின்று போராடுவது ஒருநாளும் நல்ல முடிவைத் தராது. நம் கை ஓங்கும்போது நமக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும். அவர்கள் கை ஓங்கும்போது அவர்களுக்குச் சாதகமானவை நடக்கும். இவை இடைவெளியை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
தேவர் சாதியினரின் சுய சாதிப் பெருமிதம் என்பது அவர்களால் மட்டுமே உருவானதல்ல. பல நூறு ஆண்டுகளாக அவர்களுக்குக் கீழே இருந்த பிரிவினரின் முழு சம்மதத்துடன்தான் அது உருவாகியிருக்கிறது. நாம்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் நேற்றைய நிலை.
ஆனால்புதியதொரு சமுதாயம் புதிய அளவுகோல்களை முன்வைக்கிறது. ‘கீழே இருப்பவர்களுக்குமேலே செல்லவேண்டும் என்ற ஆர்வம் எளிதில் வந்துவிடும். ஆனால், ‘மேலே இருப்பவர்களுக்கு’  தங்கள் மேலாதிக்கத்தை விட்டுக் கொடுக்கும் மனம் எளிதில் வந்துவிடாது. மனித மனதின் மிகவும் அடிப்படையான இந்த அம்சத்தை ஒருவர் புரிந்துகொள்ளவேண்டும். இன்று கீழே இருப்பவர்கள் மேலே இருந்திருந்தால் அவர்களும் மேலே இருந்தவர்கள் செய்ததையேதான் செய்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால்இன்று கீழே இருப்பவர்கள் அவர்களுக்கும் கீழே இருப்பவர்களுக்கு இதையேதான் செய்தும்வருகிறார்கள். எனவேஇந்த விஷயத்தை வெறும் ஒடுக்குமுறைவெறுப்பு என்று மட்டுமே பார்க்காமல் பொறுமையாகக் கையாளவேண்டும்.
அதோடு ஒவ்வொன்றாக ஏற்றப்பட்ட சுமையை ஒவ்வொன்றாகத்தான் இறக்கிவைக்க வேண்டும். ஆயிரம் வருட ஏற்றத் தாழ்வைப் போக்க ஐந்தாறு தலைமுறைகளாவது அவகாசம் தரப்படவேண்டும்.  அதைவிட முக்கியமாகஇரண்டு பிரிவினரையும் ஒன்று சேர்க்கும் அடையாளத்தின் அடிப்படையில் பிரச்னையை அணுகவேண்டும். அதாவது தேவர்களையும் தலித்களையும் தமிழர்கள் என்ற அடிப்படையில் பார்க்கவேண்டும். தமிழர்களில் இரண்டு பிரிவினர் சண்டையிட்டால் நீங்கள் எந்தப் பிரிவுக்கு ஆதரவு தருவீர்கள்… ஒரு முகத்தின் இரு கண்களுக்கு இடையே சண்டையென்றால் என்ன செய்வீர்கள்?
 இந்து மதம்தான் எல்லா பிரச்னைக்கும் காரணம்… தலித்துகள் பவுத்தத்துக்கு மாறிவிடவேண்டும். அது ஒன்றே ஒரே வழி என்று அம்பேத்கர் சொல்கிறார். ‘பிரிட்டிஷாரின் ஆட்சியை வெறு… பிரிட்டிஷாரை நேசி என்று சொன்ன காந்தியோ வேறோரு வழியை முன்வைக்கிறார்.
சாதி இந்துகள்தலித்துகள் என கற்பனையான ஒரு பிரிவை உருவாக்கி கலகம் பிறந்தால்தான் வழி பிறக்கும் என்று ஒரு தீர்வை அம்பேத்கர் முன்வைக்கிறார். நம்மை அடக்கியாண்ட பிரிட்டிஷாரில் இருக்கும் நேச சக்திகளைக்கூட ஒன்றிணைத்துக்கொண்டு ஒரு அகிம்சைப் போர் முறையை முன்வைத்த காந்தியோ வேறொரு வழியை முன்வைக்கிறார். அம்பேத்கரின் வார்த்தைகளைக் கேட்டு மேல் சாதியினரை எதிர்க்கக் கிளம்பிய தலித்களைவிட காந்தியின் வார்த்தைகளைக் கேட்டு தலித்கள் மத்தியில் சேவை செய்யப் புறப்பட்ட மேல்சாதியினரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.
அந்நியர்களான ஆங்கிலேயர்களையே அகிம்சை முறையால் வெல்ல முடிந்தபோது அண்டை அயலார்களுடன் அந்த வழிமுறையை பயன்படுத்தி வெற்றி பெற முடியாதா என்னஉலகில் அடக்குமுறையாளர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையிலான போரில் அடக்கப்படுபவர்களுக்குக் கூடுதல் நன்மையைத் தரக்கூடிய ஒரே வழி அதுவே என்பதை காந்திய வழியிலான போராட்டங்களின் வெற்றி மட்டுமல்லாமல்வன்முறை வழியிலான போராட்டங்களின் தோல்வியும் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
காந்திஃபோபியா உடையவர்கள் தமிழர்களாக இருக்கும்பட்சத்தில் இன்னா செய்தாரை எப்படி ஒறுக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கலாம். மேலைத்தேய சிந்தனையின் தாக்கம் கொண்டவர்களாக இருக்கும்பட்சத்தில் ஒரு கன்னத்தில் அறைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.
இன்று காந்தி இருந்திருந்தால்தென் தமிழகப் பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வுதான் சொல்லியிருப்பார். தேவர்களின் சாதி வெறியை வெறு… தேவர்களை நேசி.
தேவர் குரு பூஜையின்போது ஒவ்வொரு தலித் கிராமங்களில் இருந்தும் பால்குடம்முளைப் பாலிகை ஏந்திச்சென்று  தேவர் சிலைக்கு மரியாதை செய்ய வேண்டும். பதிலுக்கு தேவர்கள் தாங்கள் கடைப்பிடிக்கும் அனைத்துவகையான அடக்குமுறைகளையும் கைவிட வேண்டும். தேநீர்விடுதியில் அனைவருக்கும் ஒரேவிதமான டம்ளர்கள் தரவேண்டும்… தேவர்களின் தெருவுக்குள் செருப்பு அணிந்துவரத் தடைசைக்கிள்,மோட்டார் பைக்கில் போகத் தடை என்பதை நீக்க வேண்டும்… கோயிலில் இரு தரப்பினரும் சுமுகமாகத் தொழ அனுமதி… ரிசர்வ் தொகுதியில் தலித் தலைவர் முறையான தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு சுதந்தரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால்ஒரு தேவர் இன்னொரு தேவரை எப்படி சமமாக நடத்துவாரோ அதுபோலவே தலித்களையும் நடத்தவேண்டும்.
காந்தி இதையே சொல்லியிருப்பார். சொல்லியதோடு நிறுத்தியிருக்கவும் மாட்டார். களத்தில் இறங்கி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருப்பார். இம்மானுவேல் சேகரனுக்கான குருபூஜையை தேவர்களும் இணைந்து நடத்தும் ஒரு நாளை நோக்கிய பயணத்தின் முதல் காலடிச் சுவடாக இதுவே இருந்திருக்கவும் செய்யும். இந்த வழிமுறைக்கு இருதரப்புப் ‘போராளிகளிடமிருந்து எதிர்ப்புவரும். ஆனால்எளிய மக்களிடமிருந்து இதற்கு பலத்த ஆதரவு கிடைக்கும். ஏனென்றால்இன்றும் தேவர் குரு பூஜை என்பது அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த பள்ளர்களால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. தேவர் தனது சொத்தில் கணிசமான பங்கை அந்த கிராமங்களைச் சேர்ந்த பள்ளர்களுக்குத்தான் தானமாகக் கொடுத்திருக்கிறார். அவர்கள்தான் பால் குடமும் முளைப்பாரியும் ஏந்திவந்து முதல் மரியாதை செய்து குருபூஜையை ஆரம்பித்துவைக்கிறார்கள்.
பாரதிராஜாவைரமுத்துஇளையராஜாதேவா போன்ற பிரபலங்கள் இரு தரப்புக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க முன்வரவேண்டும். அதிலும் ஈழத் தமிழர்கள் பிரச்னையில் இந்திய அரசின் விருதைத் தூக்கி எறிந்த பாரதிராஜாவும் அவரைப் போலவே இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் மும்மரமாக இருப்பவர்களும் தமிழக தலித்கள் பிரச்னையிலாவது உண்மையான அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.
– மகாதேவன்

  1. amallan 
    #28

    பள்ளர் (அ) மள்ளர் இனத்தினர் எஸ்.சி ( SC ), பி.சி ( BC ), எம்.பி.சி( MBC ), எப்.சி (FC), டி.என்.சி( DNC ) என அனைத்துப் பட்டியலிலும் உள்ளனர். விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியா முழுவதும் இருந்த சாதிகளை சமூக அடிப்படையில் முற்ப்பட்ட சமூகத்தினர் (FC) எனவும் பிற்ப்படுத்தப்பட்ட சமூகத்தவர் (OBC) எனவும் பிரித்தனர். இவர்கள் இல்லாமல் தீண்டாமைக்கு உட்பட்டவர்கள் மற்றும் தீட்டுப்படுத்தக்கூடியதாக கருதப்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் என்ற அடிப்படையில் 76 சாதிகளை உள்ளடக்கி பட்டியல் சாதியினர் (SC) என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி ஒரு சாதியை பட்டியல் வகுப்பில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு 11 வரையறைகளை வகுத்திருந்தது அவற்றில் முக்கியமானவை, அ) தீண்டாமையை அனுபவிப்பவர்கள் ஆ) கோவிலில் நுழைய அனுமதி இல்லாதவர்கள் இ) பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள் ஈ) மாட்டுக்கறி உண்பவர்கள் உ) பசுவை வணங்காதவர்கள் ஊ) தீட்டுப்படுத்தும் தொழிலைச் செய்பவர்கள் என்பவைகளாகும்.
    மேலே கூறப்பட்ட வரையறைகளுடன் ஆய்வாளர் எட்கர் தட்சன் எழுதிய “தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்” என்ற புத்தகத்தின் சாதிபற்றிய மேற்கோள்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்புத்தகத்தில் பள்ளர்கள் குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன், வாதிரியார், பட்டக்காரர், மண்ணாடி போன்ற தொழில்சார்ந்த பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுவதை பக்கம்-486- ல் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறப்பட்ட வரையறைகளின்படி பள்ளர்கள் தீண்டத்தகாதவர் என முடிவு செய்தால், பள்ளர்களின் இன்னபிற பெயர்களும் எஸ்.சி(SC) பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஆனால் தமிழ்நாட்டின் சாதிப்பட்டியல்களில்,
    அ) குடும்பன் – எஸ்.சி பட்டியலிலும் ( SC – 35 )
    ஆ) மூப்பன் -பி.சி பட்டியலிலும் (BC – 65 )
    இ) காலடி – டி.என்.சி பட்டியலிலும் ( BC – 35 )
    ஈ) காலடி — பி.சி பட்டியலிலும் (DNC – 28 )
    உ) மண்ணாடி – எம்.பி.சி பட்டியலிலும் ( MBC – 16 ) உள்ளன.
    தீண்டாமைக்கு அளவு கோளாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுவதாகக் கருதப்படும் தொழில்களைப் பள்ளர்கள் செய்வதில்லை . இந்த நாள் வரையிலும் வேளாண்மையே பள்ளர்களின் தொழிலாக உள்ளது.. பள்ளர்கள் மாட்டுக்கறி உண்பதில்லை . ஏனேனில் தங்களின் குலத் தொழிலான வேளாண்மைக்கு உதவுவதால் மாடுகளைத் தெய்வமாக மதிக்கின்றனர் பள்ளர்கள் .
    தமிழ்நாட்டின் பழம்பெரும் கோவில்களான மதுரை மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் , பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன் கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் , நெல்லையப்பர் , சங்கரன் கோவில் மற்றும் கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில் பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு இன்று வரையிலும் முதல் மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த பல விழாக்களும் நடைபெறுகின்றன , இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில் பூசாரிகளாக உள்ள பிராமணர்களே !
    1993 – ல் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கும் பள்ளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அன்றைக்கு மட்டும்மல்ல இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோவிலில் தைப்பூசத்தன்று அறுவடைத் திருவிழாவிலும் மறுநாள் தெப்பத்திருவிழாவிலும் மதுரை அனுப்பானடி ஊர்க்குடும்பர்களுக்கே முதல் மரியாதை செய்யபடுகிறது.
    தமிழ் நாடு மட்டுமில்லாது இந்தியா முழுவதுமே அனைத்து பட்டியல்களிலும் (SC, BC, MBC, DNC, FC) உள்ள பள்ளர்களை தலித் ,தாழ்த்தபட்டவன் ,எஸ்.சி(SC),ஆதி திராவிடர் என அழைப்பது பள்ளர்களின் அடையாளத்தை அழிக்கும் திட்டமிட்ட சதியே ஆகும். பள்ளர்களின் அடையாளத்தை மட்டுமில்லாது “பள்ளர்களே சேர சோழ பாண்டியர் ” எனும் வரலாற்று உண்மைகளையும் பெருமைகளையும் மறைத்து ” இவர்கள் யார் ?” என்பதை உணர்ந்துவிடாமல் , பள்ளர்களை உளவியல் ரீதியகவும் முடக்கும் திட்டமிடபட்ட சதியே ஆகும்
  2. siruthai 
    #29

    உளவியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் சிந்திக்க விடாமல் செய்யும் சூழ்ச்சி போல் தெரிகிறது
  3. siruthai 
    #30

    எவனும் எவனுக்கு கீழ இருந்ததும் கிடையாது இருக்கவும் முடியாது
    இது மனித இயல்பு.
  4. mamallan 
    #31

    மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.
    ‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்…’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.
    இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.
    ‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன.பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன.இவிலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்.மேலும் பள்ளர்கள் உலகம் முழுவதும் பழங்காலம் தொட்டு இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.இவ்வாறான பள்ளர்களின் வரலாறு கொண்டே தமிழர்கள் உலகாண்டதாகச் சொல்லப்படும் ஐயா பாவாணர் அவர்களின் ஆய்வு இன்று தக்க தரவுகளோடு மீட்டுறுவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.வடுகப்(நாய்க்கர்) படைஎடுப்பின் போது தமிழர் அரசான சேர சோழ பாண்டிய பேரரசுகள் அழிக்கப்பட்டு ஈழத்தைப்போல தமிழினம் வீழ்த்தப்பட்டு பள்ளர்களின் பெருவாரியான காணிகள் நாயக்கர்களால் பறிக்கப்பட்டன.
    [தொகு] நெல் நாகரிகம்
    உலகின் நாகரிகங்களை வகைப்படுத்தும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாகரிகத்தை “நெல் நாகரிகம்” என்று கூறுகிறார்கள். இந்த நெல் நாகரிகம் தோன்றியது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்திலே தான். தமிழகத்தில் இந்த நாகரிகம் மள்ளர் நாகரிகம் எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த நாகரிகத்தின் தோற்றத்தையும் இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் “பண்பாடுத் தலைவர்கள்” பற்றியும் அந்தப் பண்பாடு பற்றியும் விரிவாகவும் பெருமையுடன் கூறுகின்றன.
    “ “‘தேவேந்திரப் பள்ளரில்’ வெள்ளானன வேந்தன், மிக விருது பெற்றவன் சேத்துக்கால் சென்னன், சென்னல் முடி காவலன், தேவேந்திர வரபுத்திரன், மண்வெட்டி கொண்டு மலையைக் கடைந்த கண்ணன், வெள்ளானனக் கொடி படைத்தவன், வெள்ளைக்குடை, முத்துக்குடை, பவளக்குடை, பஞ்சவர்ணக்குடை, முகில் கொடி, புலிக்கொடி, அலகுக்கொடி படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் குருணிகுர ‘தேவேந்திர பள்ளர்'” ”
    —-காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம்
    [3]
    “ “தேவேந்திர பள்ளன் வெள்ளை பூச்சக்கரக் குடை வெள்ளையானை படைத்தவர்” ”
    —-நல்லூர் செப்புப்பட்டயம்
    [4]
    “ “வெள்ளாண்மை யுலகில் வியனப்பேற் விளைய வள்ளல் தெய்வேந்திரன் வரிசையா யனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகழ் சேர் சேறாடிக் குடையும் செகத்தில்க் கொணர்ந்த தேவேந்திரக் குடும்பர் சேத்துக்கால் செல்வரான குடும்பர்களும்” ”
    —-சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு
    [5]
    [தொகு] நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல்
    திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு
    “ விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
    திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
    தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
    துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
    சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
    இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
    கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
    மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
    வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
    கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
    கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
    தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
    கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
    விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
    பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
    ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
    நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
    பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
    அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
    பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
    வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
    ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
    வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
    பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
    கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
    2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
    கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
    —- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803
    துவாபர யுகம் என்பது கி.மு. 3102 க்கு முற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்ட ஊழி. நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த பாண்டிய வேந்தர் வம்சத்தைச் சேர்ந்த மள்ளர், குடும்பர் எனும் தேவேந்திர குலத் தமிழர்கள் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.
    [தொகு] தமிழ் நில வகைகள்
    தமிழர்கள் மக்களின் வாழ்விடங்களை நான்கு வகைகளாகப் (திணை) பிரித்தனர். இவை குறிஞ்சி, முல்லை, மருதம், மற்றும்நெய்தல் எனப்பட்டன. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும். முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும். மருத நிலம் என்பது நீர் வேளாண்மை செய்யப்படும் வயலும் வயல் சார்ந்த நீர் வளம் மிகுந்த நிலம் ஆகும். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த கடலை ஒட்டிய மணல் பரந்த நிலமும் ஆகும். பாலை நிலம் என்பது குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்மையாலும் கதிரவனின் வெப்பத்தாலும் காய்ந்து வரண்டு திரிந்த நிலம் ஆகும்.
    [தொகு] உலக நாகரிகஙகள்
    ஆற்றுப் பள்ளதாக்குகள் மற்றும் ஆறு பாயும் சமவெளிகள் மருதநிலப் பகுதிகள் ஆகும். உலகின் பல நாடுகளிலும் நீர் வளம் மிகுந்த நதிக் கரைகளில் அமைந்த இந்த மருத நிலப் பகுதிகளிலெயெ நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கி.மு. 3400 வாக்கில் தோன்றிய எகிப்திய நாகிகம் நைல் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும்.கி.மு. 3500 வாக்கில் தோன்றிய சுமேரிய நாகரிகம் யுப்ரட்டீஸ், டைகீரீஸ் நதி சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 3000 வாக்கில் தோன்றியது சிந்து நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1600 வாக்கில் தோன்றியது சீன மஞ்சள் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 2500 வாக்கில் தோன்றிய கிரேக்க நாகரிகமும் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1000 வாக்கில் தோன்றியது கங்கை நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். இப்படிப் பல நாடுகளிலும் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றுச் சமவெளிப் பகுதிகளான மருத நிலங்களில் தான்
  5. mamallan 
    #32

    தமிழர் நாகரிகம்
    காவிரி, தென்பெண்ணை, பாலாறு, பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி, பொருணை மற்றும் கடல் கொண்ட பஃறுளி ஆற்றுச் சமவெளிகளான மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் “நெல் நாகரிகம்” எனப்படும். இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது.
    [தொகு] தொல்காப்பிய வேந்தன்
    தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர், பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது.
    “ வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் ”
    —– தொல்காப்பியம் – பொருளதிகாரம்
    நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது. தொல்காப்பிம் தோன்றியது கி.மு. 500 என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த நெல் நாகரிகம் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தோன்றி இந்நிலைக்கு முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    பின்பு நெல் நாகரிகத்தைதத் நமது பண்பாடாகக் கொண்ட மருத நில மள்ளர்களின் பண்பாட்டுத் தலைவர்கள் பலரும் வேந்தன்-வேந்தர் எனப்பட்டனர். இப்பண்பாட்டுத் தலைவர்களான தமிழக அரசர்கள் தமிழ் மூவேந்தர் சேர வேந்தன், சோழ வேந்தன், பாண்டிய வேந்தன் எனப்பட்டனர். மருத நில இறைவனான (அரசனான) வேந்தனின் வழித் தோன்றல்கள் தாம் மள்ளர் குல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள்.
    [தொகு] பாண்டியன் வேந்தன்
    பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம்.
    “ வானுட்கும் வழ நீண்டமதில்
    மல்லன் மூதூர் வய வேந்தெ. ”
    —- புறநானூறு – 18,குடபுலவியனார் பாடியது.
    “ சீர் சான்ற உயர் நெல்லின் ஊர்
    கொண்ட உயர் கொற்றவ ”
    —- மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார்.
    (பாண்டிய வேந்தர் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழிய மள்ளரைப் புகழ்ந்து பாடியது).
    “ பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
    குப்பை நெல்லின் முத்தூறு தந்த
    கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய ”
    —- புறநானூறு 24
    மாங்குடி மருதனார் தலையாலாங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழிய மல்லரைப் பாடியது.
    [தொகு] சோழ வேந்தன்
    சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது.
    “ மண்திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்
    முரசு முழ ங்கு தானை மூவருள்ளும்
    அரசெனப்படுவது நினதே பெரும
    ஆடுகட் கரும்பின் வெண்பா நுடங்கும்;
    நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க
    நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ. ”
    —- புறநானூறு 35.
    வெள்ளைக் குழ நாகனார் கிள்ளி வளவன் மள்ளரைப் பாடியது.
    “ சாலி நெல்லின் சிறை கொள் வேலி
    ஆயிரம் விளையுட்டு ஆக
    காவிரி புரக்கும் நாடு கிழவோனே. ”
    —- பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248.
    கரிகாற் பெருவளவந்தான் மள்ளரைப் புகழ்ந்து பாழயது.
    [தொகு] சேர வேந்தன்
    சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது.
    “ விண்பொருபுகழ் விறல் வஞ்சிப்
    பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ
    வெப்புடைய வரண் கடந்து
    தும்புறுவர் புறம் பெற்றிசினே
    புறம் பெற்ற வயவேந்தன்
    மறம் பாழய பாடினியும்மே
    ஏருடைய விழுக் கழஞ்சிற்
    சீருடைய விழைபெற்றிசினே ”
    —-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது.
    “ உழுபடையல்லது வேறு படையில்லை
    திருவில் அல்லது கொலை வில் அறியார்
    நாஞ்சில் அல்லது படையும் அறியார். ”
    —(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20, குறுங்கோழியார் கிழார் பாடியது.
    (சேர வேந்தர் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மள்ளர் பற்றி).
    [தொகு] அதியமான் நெடுமான் அஞ்சி மள்ளரை ஒளவையார் பாடியது
    சீறி வரும் வேலுக்கும் அஞ்சா மள்ளர்
    “ இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,
    மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி!
    பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என,
    வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
    ஏறி கோல் அஞ்சா அரவின் அன்ன
    சிறு வல் மள்ளரும் உளரே, அதா அன்று,
    பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
    வளி பொரு தெண் கண் கேட்பின்,
    அது போர்’ என்னும் என்னையும் உளனே

    —-புறநானூறு 89.
    பொருள் : அதியமானின் பகையரசர் கேலி பேச ஒளவையார் கூறியது: ஆபரணங்களால் இழைக்கப் பெற்ற உடையினை அரையில் கட்டிக் கொண்டும், மைதீட்டிய கண்ணினையும் அழகிய நெற்றியையும் கொண்ட விறலி! என்னோடு போர் செய்து வெற்றி பெறுவாரும் உள்ளாரோ? உன்னுடைய நாட்டில் என என்னைப் பார்த்து (ஒளவையார்) வினவுகின்றான். போர்ப் படையுடைய வேந்தனே, எதிர்த்துப் பாய்ந்து வரும் வேலுக்கும் அஞ்சாத பாம்பு போல் சீறிப் பாயும் வலிமையுள்ள மள்ளர் குலப் போர் மறவரும் உள்ளனர் எம்நாட்டில். அது மட்டும் அல்லாது மன்றத்திலே தூங்கும் போது வீசுகின்ற கூதிர்க் காற்றினால் எழும் ஓசையைப் போர் முரசின் ஒலி என்று எண்ணி உடன் எழுகின்ற போர் எண்ணமும், ஆர்வமும் உள்ள எம் மன்னனுன் உள்ளான். இவற்றையெல்லாம் கண்டும், கேட்டுமா நீ இவ்வாறு கேட்கின்றாய்?
    கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் விஸ்ணுவர்மன் குடும்பர் குலத்தினன் எனக் கூறுகிறது.
    “ “விஸ்ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”. ”
    இதன் பொருள் – விஸ்ணுவர்மனின் குடும்பம்; குலம் வளர எழுதியது என்பதாகும். குடும்பன் என்பது மள்ளர்களில் பட்டப் பெயர்களில் ஒன்றாகும்.
    தேவேந்திர குலத்தினரின் உயர்வு (வேந்தன் குலத்தினர்) இந்த வேந்தர்கள் மள்ளர் குலத்தினர் என்பது சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றன. வேந்தன் பின் நாளில் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டதால் இவர்களும் – இவர்களின் வழித்தோன்றல்களும் தேவேந்திர குலத்தினர் என்றும் கூறப்படுகின்றனர்.
    சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்கள் என்பதையும் அவர்கள் நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவர்கள் என்பதையும் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நெல் நாகரிகத்தின் தலைமக்களாகிய உழவர்களும்,
    மல்லர் குலத்தினரும் – தேவேந்திர குலத்தினரும் இருந்த சிறப்பை, முதன்மையை கீழ்வரும் பாடல்கள் காட்டுகின்றன:
    “ உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே
    உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
    உணவெனப்படுவது நிலத்தொடு நீரே ”
    —- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.
    “ சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவெ தலை. ”
    —- திருக்குறள் 1031.
    “ உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
    தொழுதுண்டு பின் செல்பவர். ”
    —-திருக்குறள் 1033.
    மருத நில மக்கள் மள்ளர், உழவர், களமர், கடைஞர், வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர், கடைசியர்,காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப் படக் குறிப்பிடப்பட்டனர். பிற தொழில்களில் உள்ள சாதனையாளர்களும் உழவர்களாக மேன்மையடைந்ததாகக் கூறப்பட்டனர். அதனாலேயே ஏருழவர், சொல்லெருழவர், வாளெருழவர், வில்லேருழவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
    “ “அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
    வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்” ”
    —- என்று திவாகர நிகண்டும்.
    “ “செருமலை வீரரும் திண்ணியோரும்
    மருத நில மக்களும் மள்ளர் என்ப” ”
    —- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.
    நெல் நாகரிகத்தில் பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களின் சுற்றுத்தார் தமது செல்வ வளத்தாலும் படை வலிமையாலும் பிற நில மக்களுக்கும் தலைவர்களாக (இறைவனாக) இருந்தார்க்ள. இதனைத் தொல்காப்பியம்.
    “ “மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்
    சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
    வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
    வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்” ”
    —-தொல்காப்பியம்.
    திருமால், முருகன், தேவேந்திரர், வருணன் ஆகியோர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்கு இறைவர்கள் எனக்கூறும். பாலை நில இறைவி கொற்றவை ஆகும்.
    இலக்கியங்கள், புராணங்கள் இந்தப் பண்பாட்டுத் தலைவர்களின் உறவு முறைகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சிவன் மள்ளர். கொற்றவை எனப்படுகிற பார்வதி ஆகியோரின் குமரன் சேயோன் என்படுகிற முருகன் ஆகும். தேவேந்திரர் எனப்படுகிற வேந்தனின் மகள் தெய்வயானையின் கணவர் சேயோன் பார்வதியின் சகோதரர் மாயோன் எனப்படுகிற திருமால் மள்ளர் ஆகும். வருணன் மள்ளர் வேந்தன் எனப்படுகிற தேவேந்திரருக்குக் கீழ்பட்ட ஒரு தலைவன்.
    மள்ளர் குலத்தினரின், தேவேந்திர குலத்தினரின், தமிழரின் இந்த நெல் நாகரிகம் தான் பல கலைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் தோற்றுவித்து ஆதரித்து வளர்த்து மக்களிடையே பரப்பியுள்ளது. மனித குலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும் பண்பாட்டு மேலாண்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது.
    மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.
    “ பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
    மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
    வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
    பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. ”
    —- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.
    இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.
    “ கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
    மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. ”
    —- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25
    “ “குன்றுடைக் குலமள்ளர்” ”
    என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.
    “ நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
    உதிர நீர் நிறைந்த காப்பின்
    கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
    இன மள்ளர் பரந்த கையில்
    கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
    பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
    தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
    எனப் பொலியும் தகையும் காண்மின் ”
    —- கம்பராமாயணம்.
    வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21).
    இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.
    [தொகு] தெய்வேந்திரர் வரலாறு
    “ சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில்
    ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து
    மதுரையை நோக்கி வரும் வழியதனில்
    உலகலாமீன்ற உமையவள் மனதில்
    திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க
    அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க
    கரமதில் வாங்கி வரமதுக்கியந்து
    வைகையில் விடுக்க
    வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து
    குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க
    ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக
    ஈசுவரி தேடி யிருளில் நடக்க
    கூவிய சத்தம் குமரனை நோக்கி
    வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து
    வலமார் பிய்ந்து அமுர்தம்
    பொழிந்து அ~;த்தம் கொடுக்க
    பாலன் நரிவு பணிவிடைக்காக
    புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க. ”
    தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :
    “ கன்னல் சென்னல் கதழி பிலாவுடன்
    தென்னை கமுகு செறந்த வெள்ளிலை
    அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள்
    மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி
    பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு
    தெய்வ சபையை தெரிசிக்க வென்று
    காராவின் பாலை கரகத்திலேந்தி
    சீறாக அன்னம் சிறப்பித்த போது. ”
    தெய்வேந்திரன் விருதுகள் :
    “ ஈஷ்வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
    அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
    அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும்
    விமரிசையாக விருது கொடுக்க
    மாலயன் ருத்திரன் மகேஷ்பரன் மகிழ்ந்து
    பொன்முடி யதனில் பூசன மணிய
    வாடாத மாலை மார்பினி லிலங்க
    வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க
    செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ
    வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே
    டாலுடம்மான சத்தம் அதறிட
    மத்தாளம் கைத்தாமம் மகெஷ்பரத் துடனெ
    எல்லா விருதும் இயல்புடன் கொண்டு
    தெய்வ சபையை தெரிசனம் செய்து
    பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து
    புரவியிலேறி பூலோக மதனில்
    சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது
    விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க
    மூவராசாக்கள் முடிமணம் சூட்ட
    செந்நெல்லை படைத்தோர்
    குகவேலருளால் குடும்பன் தழைக்க
    சிவனரளாலே திருநீறணிந்து
    யெல்லா வுலகும் யிறவியுள் ளளவும்
    தெள்ளிமை யாத செந்நெலை படைத்தோர்
    சேத்துக்கால்ச் செல்வரான
    செந் நெல் முடி காவரலான
    முத்தளக்கும் கையாதிபரான
    பாண்டியன் பண்டான பாறதகதபரான
    அளவு கையிட்டவரான
    மூன்று கைக்குடையாதிபரான
    பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து
    அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான
    மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
    கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான
    மாடக் குளத்தில் வந்துதித்தவறான
    பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான
    தெய்வலோகத்தில் தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய
    பழனித் தலத்தில் காணியாளனாகிய
    கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி. ”
    —– பழனிப் பட்டயம், வரி 195 – 217.
    நெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும் அவர்களுடைய பண்பாட்டுத் தலைவர்களுமாகிய (வேந்தன்) தேவேந்திரர், முருகன், மள்ளர், திருமால் மள்ளர், சிவன் மள்ளர், பார்வதி, சேர வேந்தர், சோழ வேந்தர், பாண்டிய வேந்தரும் அனைத்துக் தமிழ் இலக்கியங்களிலும் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார்கள். சங்க காலத் தமிழ் இலக்கியங்கியங்கள் தொடங்கி இன்று வரை இலக்கியங்களில் பேசப்படும் நெல்லின் மக்களாகிய மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் பண்பாட்டு மேலாண்மை, தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முழுமையானது.
    சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் இந்த தேவேந்திர மள்ளர்களின் புகழ் பாடும். இலக்கியங்களில் நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிற்பபையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். அரசர்களின் இந்நெல் நாகரிகத்தின் தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    இந்நெல் நாகரிகத்தினைத் தோற்றுவித்த மக்களின் தற்போதைய பெயர்களான மள்ளர், பள்ளர், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், பண்ணாடி, காலாடி, குடும்பன், குடையர், அதிகாரி, குடும்பனார், மூப்பனார், பணிக்கர், வாய்காரர் (வாய் – நீர்வரும் வாய், மதகு), குளத்து மள்ளர் முதலிய பெயர்களுக்கும் தற்போதும் இம்மக்களுடைய முதன்மைத் தொழில் நஞ்செய் விவசாயம் என்பதுவும் நெல் நாகரிகத்தின் தொன்மையும் தொடர்ச்சியையும் இந்நாகரிகத்தின் பங்களிப்பையும் உணர முடியும்.
    தமிழ் மள்ளர்களின் இந்நெல் நாகரிகம் இந்தியா முழுவதிலும் இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் (பர்மா), பாகிஸ்தான், சீனா, சப்பான், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, பங்காள தேசம், பிலிப்பைன்ஸ் முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் பரவியுள்ளது, இதன் சிறப்பையும் இன்றியமையாமையையும் உணர்த்துகின்றது.
    [தொகு] பள்ளு இலக்கியம்
    பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் பள்ளு இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது நாயக்கர் ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே ‘மள்ளர் தான் பள்ளர்’ என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
    “ “மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
    பள்ளக் கணவன்” ”
    —-முக்கூடற் பள்ளு
    இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன
  6. mamallan 
    #33

    புறநானூற்றில் மள்ளர்
    Posted on August 14, 2010 by Mallar Meetpu Kalam
    மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து…
    மள்ளர் குலத்தாரைத் தலைமக்களாகவும், படை மறவராகவும், மன்னர்களாகவும், இறைவனாகவும் காடடும் சங்க காலத் தமிழ் இலக்கயிங்களில் புறநானூற்றில் மள்ளர் – மல்லர் மரபினர் பற்றிக் குறிப்பிடும் பாடல்கள் பற்றி இங்கே காண்போம்.
    பண்டையத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மள்ளர் குலப் பேரரசர்களையும், சிற்றரசர்களையும் மள்ளர் குலப் போர் மறவர்களையும், வீர வழிபாட்டு முறைகளையும் புறநாநூறு பறைசாற்றுகிறது.
    புறநானூற்றில் பாடப்பட்டுள்ள பேரரசர்கள் யாவரும் மள்ளர்-மல்லர் மரபினரான பள்ளர் என்றாலும் மள்ளர், மல்லர் என்ற சொற்கள் வருமூ பாடல்களையும் இங்கே காண்போம்.
    செய்யுள் 10
    சோழன் நெய்தலங்கனால் இளங்சேட் சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது
    “மள்ளர் மலைத்தல் போகிய மார்பன்
    வழிபடுவோலைர வல் அறிதீயே,
    பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே
    நீ மெய் கண்ட தீமை காணின்.
    ஒப்படி நா டி, அத் தக ஒறுத்தி;
    வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
    தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே –
    அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
    வருநர்க்கு வரையா வசைஇல் வாழ்க்கை
    மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
    மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
    செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,
    நெய்தலங்கானல், நெடியோய்! –
    எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!”
    பொருள்
    நெய்தலங்கனால் என்ற ஊரை வென்ற புகழ்மிக்க மள்ளர் சோழன் இளஞ்சேட் சென்னியே! உன்னை வழிபடுவோரைத் தீர அறியும் குணமுடையோனே! பிறர் மீது பழி சொல்வோரின் பேச்சை நம்பமாட்டாய், தீயவை செய்தவர் என்று ஆராய்ந்து அறிந்தால் அத்தீயவர்களுக்கு உரிய தண்டை வழங்கத் தவறமாட்டாய். அத்தீயவன் தன் தவற்றை உணர்ந்து உன்னைப் பணிந்து மன்னிப்புக் கேட்டல், அவனை மன்னித்து முன்னை விட அவன் மிது அன்பு செலுத்துவாய். உண்ண, உண்ண மேலும் ஆவல் கொள்ளும் அமிர்தம் போன்ற நல்லுணவை வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாது வழங்கும் வசைச் சொல் கோளாத வாழ்வு உடையவன். நின் தேவியர் மள்ளத்தியரைத் தழுவி இன்பம் அடைதல் அல்லாது பகை மள்ள அரசர் தொடாத மாலையணிந்த வலிமையான மார்பை உடைய மள்ளன் நீ, எந்தக் காரியத்தையும் நிதானமாகத் தவறில்லாமல், செம்மையுடன் செய்து, நின் புகழ் பரவி வாழுகின்ற சோழனே, உன் புகழ் மிக்க பண்புகளை முழுவதும் பாராட்டிப் போன்றுகின்றோம்.
    செய்யுள் 77
    இயற்றிய புலவர் இடைக்குன்றூர் கிழார்
    “கூடி எதிர்த்து வந்த வம்ப மள்ளரைப் புகழவோ, இகழவோ இல்லை.
    கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு,
    குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்
    நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
    குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி,
    நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
    யார் கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு,
    தா‘லி களைந்ததன்றும் இவனே; பால் விட்டு
    அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின்
    உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
    வியந்தன்றும், இழிந்தன்றும் இலனே; அவரை
    அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ,
    கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
    மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும் அதனினும் இவனே”.
    பொருள்
    சலங்கைகள் கழற்றப்பட்டு வீரக் கழல்களை அணிந்த கால்களையும், விரித்து முடியப்பட்ட குடுமியில் வேப்பம் பூங்கொத்தும், உழிஞைக் கொடியும் சூடி, வளையல்கள் இல்லாத கைகளிலே வில்லைப் பிடித்து நெடிய தேரில் விளங்கி நிற்கும் அவன் யாரோ? அவன் கண்ணி வாழ்வதாக. தாமரையணிந்து ஐம்படைத் தாலியைக் களையாமல் இருக்கிறான். பாலை விட்டு இன்று உணவு உண்டான். அலை அலையாய் தன்னை எதிர்த்துப் போர் செய்ய வந்த வம்ப மள்ளரான இருபெரும் வேந்தர்களையும் ஐம்பெரும் வேளிரையும் மதித்ததும் இலன்; அவமதித்ததும் இலன். தன்னை எதிர்த்து வந்த அவரை இறுகப் பிடித்து பரந்த ஆகாயத்தின் கண்ணே ஒலியெழக் கவிழ்ந்து உடலும் நிலத்தின் கண்ணே பொருந்துமாறு வீழ்த்தியதற்கு மகிழ்ந்ததும், இவ்வாறு செய்தோமென்று தற்பெருமை பேசிக் கொண்டதுவும் இலன்.
    செய்யுள் 78
    பாண்டியன் தலையானங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.
    “எள்ளி வந்த வம்ப மள்ளர்,
    வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாடள,
    அணங்கு அருங்கடுந் திறல் என்னை முணங்கு
    நிமிர்ந்து,
    அளைச் செறி உழுவை இரைக்கு வந்தென்ன
    மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து,
    விழுமயம், பெரியம், யாமே; நம்மின்
    பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,
    எள்ளி வந்த வம்ப மள்ளர்
    புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர,
    ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்
    மான் இழை மகளில் மாணினர் கழிய,
    தந்தை தம் ஊர் ஆங்கண்,
    தெண்கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே”.
    பொருள்
    தீரமும், வீரமும் உள்ள எம் இறைவன் (மன்னன்) வலிமையும் வேகமும் மிக்க கால்களை உடையவன். நீரைக் கலக்கிக் கொண்டு, உழுவை மீன் தன் இரைரைய மின்னலெனச் சென்று பிடிப்பது போல், இவனது மலைப்பு அறியா மார்பினை மதியாது, மள்ளர் குலப் பகை மன்னர்கள் எழுவர் வீறு கொண்டு எழுந்து, நாம் விழுப்புண் பட்ட வெற்றி மள்ளர்கள் என்றும், புகழ் படைத்தவர்கள் என்றும், செழியன் சின்னப் பையன், போரில் கொள்ளையிடத்தக்க அவன் செல்வங்களும் அதிகம் என்றும் இகழ்ந்து பேசி எதிர்த்து வந்த வம்பு செய்கின்ற மள்ள மன்னர்களைத் தீய நோக்குடைய அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்து, அவர்களைப் போர்க்களத்திலே கொல்லாது அவர்களின் ஊர்வரை விரட்டிச் சென்று அவர்களின் மனைவியர் வெட்கிட எம் இறைவன் நெடுஞ்செழியன் வெற்றி முரசு ஒலிக்கச் செய்து வம்பு செய்த அயல்நாட்டு மள்ள மன்னர்களின் ஆணவத்தைக் கொன்று ஒழித்தான்.
    செய்யுள் 79
    பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ் செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.
    “எதிர்த்த வம்ப மள்ளர் பலரே
    மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
    மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து,
    தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
    வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
    வம்ப மள்ளரோ பலரே,
    எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே?”
    பொருள்
    தனது பெருமை மிக்க பழைய ஊரின் வாயிலிலே உள்ள குளத்திலுள்ள குளிர்ந்த நீரிலே குளித்து வந்து மக்கள் குழுமிப் பேசும் மன்றம் நடக்கும் இடத்தில் உள்ள வேப்ப மரத்தின் பூந்தளிரைப் பறித்துத் தலையில் சூடிக் கொண்டு போர் முரசம் முழங்க, யானை போலப் பெருமிதத்துடனும், வலிமையுடனும் போர்க்களத்திற்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் வந்தான். அவனை எதிர்த்துபூ போரிட வந்த அயல் நாட்டு மன்னர் குலப் பகையரசர் பலரே ஆயினும் பகல் பொழுது குறைவாக இருப்பினும் அவனிடம் மிஞ்சமாட்டார்கள்.
    செய்யுள் 80
    சோழன் கோப் பெருநற்கிள்ளியைச் சாத்தந்தை யார் பாடியது
    போர்க்களம் புகும் மல்லனின் நிலை
    “இன் கடுங்க கள்ளின் ஆமூர் ஆங்கண்,
    மைந்துடை மல்லன் மத வல முருக்கி,
    ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால்
    வரு தார் தாங்கிப்பின் ஒதுங்கின்றே –
    நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப்
    பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
    பசித்து பணை முயலும் யானை போல,
    இரு தலை ஒசிய ஏற்றி,
    களம் புகு மல்லற் கடந்து அடு நிலைதயே”
    பொருள்
    இனிமையான வெறியூட்டும் கள்ளையுடைய ஆமூரை ஆளுகின்ற மள்ளர் குல மன்னன், ஆமூர் மல்லன் தித்தன், தனது மதங்கொண்ட வலிமையைக் காட்டத் தனது மகன் மல்லனைச் சோழன் கோப்பெருநற்கிள்ளியை எதிர்த்துப் போருக்கு அனுப்பினான். கிள்ளி ஒரு காலால் தன் மேல் வீசப்படுகின்ற ஆயுதங்களை விலக்கிக் கொண்டு ஒரு காலைத் தித்தன் மகன் மல்லனின் மார்பில் வைத்துத் தலையும், காலும் முறியும வண்ணம் வளைத்துக் கொன்றான்.
    செய்யுள் 81
    சோழன் கோப்பெருநற்கிள்ளியை புலவர் சாந்தத்தையார் பாடியது.
    வெண்கொற்றக் குடையையுடைய மள்ளன்
    கோப்பெருநற்கிள்ளியின் கைபட்டவர் நிலை
    “ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
    கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
    யார்கொல் அளியர்தாமே-ஆர் நார்ச்
    செறியத் தொடுத்த கண்ணிக்
    கவிகை மள்ளன் கைப்பட்டோரே?”
    மள்ளன் கோப்பெருநற் கிள்ளியின் படை மள்ளர்களின் ஆரவார ஒலியானது ஏழு கடல்களும் ஆரவார ஒலியானது ஏழு கடல்களும் கூடி ஆரவாரிக்கும் ஒலியை விடவும் பெரியதாகும். அவனுடைய யானைகள் பிளிரும் ஒலியானது கார்காலத்தில் வரும் இடி முழக்கத்தை விடவும் அதிகமானது. நாரிலே தொடுக்கப்பட்ட அத்திமாலை அணிந்து வெண்கொற்றக் குடையுடன் வரும் மள்ளன் பெருநற்கிள்ளியின் கைவாள் பட்டவர் எவர்தாம் பிழைத்து எழுவர்?
    செய்யுள் 84
    வெண்கொற்றக்குடையுடைய மள்ளர்ள கோப்பெருநற்கிள்ளி வெற்றி பெற்ற போது நக்கண்ணையார் அவனைப் பாடியது.
    ஏமுற்றுக் கிழந்த மள்ளர்
    “என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே
    யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
    போர் எதிர்ந்து என்னை போர்க களம் புகினே,
    கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
    ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
    உமணர் வெரூஉம் துறையன்னன்னே”
    பொருள்
    எளிய உணவை உண்டாலும் எம் வேந்தன் பகைவர் அஞ்சும் நல்ல தோள் வலிமையுடையவன். நான் சிறைப்புறத்தில் இருந்தாலும் போர்க்களத்தில் அவனைப் பலமுறை காணப் பெற்றதால் போர் அச்சத்தால் பயந்து பசலையான பொன்னிறம் பெற்றேன். இரத்தினங்கள் நிறையப் பெற்ற பேரூர்த் திருவிழாவில் இருந்து கொண்டு தன்னை யார் வெல்ல முடியும் என்று தோள் வலிமை பேசிக் கொண்டு மகிழ்வுடன் இருக்கும் மள்ளர் பெருநற்கிள்ளி உப்பு விற்கும் உமணர் அஞ்சுவது போல் பகைவர்களைப் பயமுறுத்தும் படைத் துஐறகளை உடையவன்.
    செய்யுள் 89
    அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
    சீறி வரும் வேலுக்கும் அஞ்சா மள்ளர்
    “இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,
    மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி!
    பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என,
    வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
    ஏறி கோல் அஞ்சா அரவின் அன்ன
    சிறு வல் மள்ளரும் உளரே, அதா அன்று,
    பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
    வளி பொரு தெண் கண் கேட்பின்,
    அது போர்’ என்னும் என்னையும் உளனே”
    அதியமானின் பகையரசர் கேலி பேச ஒளவையார் கூறியது: ஆபரணங்களால் இழைக்கப் பெற்ற உடையினை அரையில் கட்டிக் கொண்டும், மைதீட்டிய கண்ணினையும் அழகிய நெற்றியையும் கொண்ட விறலி! என்னோடு போர் செய்து வெற்றி பெறுவாரும் உள்ளாரோ? உன்னுடைய நாட்டில் என என்னைப் பார்த்து (ஒளவையார்) வினவுகின்றான். போர்ப் படையுடைய வேந்தனே, எதிர்த்துப் பாய்ந்து வரும் வேலுக்கும் அஞ்சாத பாம்பு போல் சீறிப் பாயும் வலிமையுள்ள மள்ளர் குலப் போர் மறவரும் உள்ளனர் எம்நாட்டில். அது மட்டும் அல்லாது மன்றத்திலே தூங்கும் போது வீசுகின்ற கூதிர்க் காற்றினால் எழும் ஓசையைப் போர் முரசின் ஒலி என்று எண்ணி உடன் எழுகின்ற போர் எண்ணமும், ஆர்வமும் உள்ள எம் மன்னனுன் உள்ளான். இவற்றையெல்லாம் கண்டும், கேட்டுமா நீ இவ்வாறு கேட்கின்றாய்?
    செய்யுள் 219
    கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானைக் கருவூர் பெருசஞ்சதுக்கத்துப் பூத நாதனார் பாடியது
    உண்ணா நோன்பிருந்து உடலை வாட்டும்
    மள்ளன் கோப்பெருஞ்சோழன்
    “உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
    முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!
    புலவுதி மாதோ நீயே –
    பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே”.
    பொருள்
    கவலையுள்ள உள்ளத்தோடு, உள் மனத்துக் காயத்தை ஆற்ற வெயிற் புள்ளிபோல் உள்ள மர நிழலில் இருந்து கொண்டு உடம்பில் உள்ள உனது தசைகளை வாட்டுகின்ற மள்ளர் குல மன்னனே, மள்ள! உன் எண்ணத்திற்கேற்ப உன்னோடு வடக்கிருந்தவர்கள் பலராவார். யானும் அவர்கள் போல உன்னோடு வடக்கிருக்க வராமல் காலந்தாழ்ந்து வந்ததை எண்ணி வருந்துகின்றாயோ?
    செய்யுள் 251
    புலவர் மாற்பித்தியார் பாடியது
    அருவியில் நீராடி முடியை உலர்த்தும் மள்ளர்
    “ஒவத்து அன்ன இடனுடை வரைப்பில்,
    பாவை அன்ன குறுந் தொடி மகளிர்
    இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
    கழைக் கண்நெடு வரை அருவி ஆடி
    கான யானை தந்த விறகின்
    கடுந்த தெறல் செந் தீ வேட்டு,
    புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே!”
    பொருள்
    ஓவியம் போல ஒளிர்கின்ற அழகான இல்லத்தில் கொல்லிப் பாவை போன்ற வடிவத்தை உடிய வளையல்களணிந்த மகளிரின் ஆபரணங்கள் கழலச் செய்யுமாறு காதற்கனலை மூட்டித் துயர்ப்படுத்தும் மன்னர் குல மன்னனைக் கண்டோம். அவனே மூங்கில் புதர்கள் நிறைந்த உயர்ந்த மலையிலே இருந்து விழும் அருவி நீரில், குளித்து ஆடிக் களைத்து, காட்டு யானை மேல் கொண்டு வந்த விறகால் தீ மூட்டித் தனது முதுகில் புரளும் சடை முடியை உலர்த்திக் கொண்டிருக்கம் மள்ளன் ஆவான்.
    செய்யுள் 254
    கயமனார் பாடியது
    வீழ்ந்து பட்ட மள்ளனின் அன்னை நிலை.
    “இளையரும்முதியரும் வேறு புலம் படர,
    எடுப்ப எழஅய், மார்பாம் மண் புல்ல,
    இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளைர்த்த
    வளை இல் வறுங் கை ஒச்சி, கிளையுள்
    ‘இன்னன் ஆயினன், இளையோன்’, என்று,
    நின் உரை செல்லும் ஆயின், ‘மற்று
    முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து,
    புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகள்
    வளனும் செம்மனும் எமக்கு’ என, நாளும்
    ஆனாது புகழும் அன்னை”
    பொருள்
    யாங்கு ஆகுவள்கொல்? அளியள்தானே! இளையோரும், முதியோரும் வேற்று நாட்டுக்குச் செல்லுமாறு, உன் மார்பகம் மண்ணில் பட, உடலை எடுத்தாலும் எழுந்திராமல், விரைத்துப் படுத்திருக்கும் மள்ளர் குலப் போர் மறவனே! வரைகளற்ற வெளுத்துப் போன என் கரங்களை உயர்த்தி, எம் காதலன் மள்ளர் குலத்து இளைஞன், இப்படி ஆகீ விட்டான் என்று நம் சுற்றத்தார்களுக்குக் கூறிட, ஊரில் உள்ள பழுத்த ஆல மரத்தை நோக்கிப் பறவைகள் விரைந்து கூடுவதுபேல் எல்லோரும் விரைந்து இங்கு வந்து விடுவார்கள். என் மகனின் வீரமும், செல்வமும், சிறப்பும் என்னைச் சேர்ந்தது என்று நாளும் அவன் புகழ் பாடிக் கொண்டிருக்கும் மள்ளனது அன்னை இனி என்ன செய்வாள்? அவள் நிலை இரங்கத்தக்கதாகும்.
    செய்யுள் 399
    தாமான் தோன்றிக் கோவை ஐயூர் முடவனார் பாடியது
    மள்ளருள் சிறந்த மள்ளன்
    “அடு மகள் முகந்த அளவா வெண்ணெல்
    தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி
    காடி வெள் உலைக் கொளீஇ நீழல்
    ஒங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி,
    மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங்கு குறை
    செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல்,
    பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன
    மெய் களைந்து, இனனொடு விரைஇ….
    மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல்
    அழிகளின் படுநர் களி அட வைகின்;
    பழஞ்சோறு அயினும் முழங்கு நீர்ப் படப்பைக்
    காவிரிக் கிழவன், மாயா நல் இசைக்
    கிள்ளிவளவன் உள்ளி, அவர் படர்தும்;
    செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்;
    நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து,
    கிணைமகள் அட்ட பாவல் புளிக்கூழ்
    பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு,
    ஒரு சிறை இருந்தேன்; என்னே! இனியே
    அறவர் அறவன், மறவர் மறவன்,
    மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்,
    இசையின் கொண்டான், நனக அமுது உண்க என,
    மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி
    வள் பரிந்து கிடந்த…. மணக்க
    விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை
    அலகின் மாலை ஆர்ப்ப ட்டித்து,
    கடியும்உணவு என்னக் கடவுட்கும் தொடேன்,
    ‘கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவற்
    பகடே அத்தை யான் வேண்டி வந்தது’ என,
    ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே
    ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின்
    மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை
    ஊர்தியொடு நல்கியோனே; நீர் கொள
    இழுமென இழிதரும் அருவி,
    வான் நோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே”.
    பொருள்
    சோறு சமைக்கும் பெண் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்த அளவில்லாத வெண் நெல்லைப் பூண் போட்ட பருத்த உலக்கையால் குத்தி எடுக்கப்பட்ட அரிசி கொண்டு மிளகுநீர் சேர்த்து வெள் உலையில் வைத்துச் சமைத்த சோற்றில் ஓங்கிச் செழித்துக் காய்த்த புளிக் குழம்பு சேர்த்து, நெல் வயல்களில் உள்ள மோட்டுகளில் (குழீ, வளை) இருக்கும் வரால் மீன் கொண்டு சமைத்த கறியும், வரிகளையுடைய ழுவை மீன் கொண்டு சமைத்த இறைச்சியும், வயல்களில் படர்ந்துள்ள வள்ளைக் கீரையும், சிறுகொடிகளில் காய்க்கும் பாகற்காயும், பாதிரிமரத்தின் முதிர்ந்த அரும்பினது இதழை விரித்தாற் போன்ற தோலை நீக்கி மற்ற இனமானவற்றோடு சேர்த்துச் சமைத்த கூட்டைச் சோறு மூழ்கும்படி ஊற்றிப் பிசைந்த முழு அரிசிச் சோறு உண்டு, வயல்களில் பொழுது எல்லாம் உழைக்கும் உழவர் (மள்ளர்), உண்ட மயக்கம் தீர ஓய்வெடுத்திருப்பார்.
    பழஞ்சோறும், பாசன நீர் நிறையப் பெற்ற கழனிகளையும், தோட்டங்களையும் உடைய பழியில்லாத நல்ல புகழையுடைய காவிரி நாட்டு மன்னன், மள்ளர் மரபினர் தலைவர், கிள்ளிளவளவனை நினைத்து அவனை நோக்கிச் செல்கின்றோம். பிறரிடம் ஒரு காலத்திலும் செல்லமாட்டேன். பிறருடைய முகத்தை உதவி வேண்டிப் பாரேன். நீண்ட மூங்கிலாலான தூண்டிலால் பிடித்த மீனை விற்று, இணைமகள் சமைத்த புளித்த தண்­ர் கலந்து பிசைந்த சோற்றை நேரமில்லாத நேரத்தில் உண்ணும் நிலையில் உள்ளவன். ஒரு நீர்க்கரையில் கழிமுகம் பார்த்துக் கொண்டிருந்தேன், என்னே! இனியே, நல்லவர்களுக்கு நல்லவனும், கொடியோர்க்குக் கொடியவனும் மள்ளர் வம்சத்தவருள் சிறந்த மள்ளனும், பாண்டியர்களின் வழித் தோன்றலுமான தாமான் தோன்றிக்கோ, நல்ல புகழ் வாய்ந்தவன், நின்பால் அன்பு கொண்டு விட்டான் ஆதலின் நீ விரும்பும் செல்வத்தைப் பெறுவாயாக என அறிந்தோர் கூறினர். இவ்வாறாகப் புறநானூறு மள்ளர் குல மக்களின் ஏர்த் தொழிலையும், போர்த் தொழிலையும், போற்றி, இவர்தம் வரலாற்றுச் சிறப்புகளையும், பண்பாட்டுப் பெருமைகளையும் எழிலுற எடுத்துரைப்பது இத்தமிழ் கூறும் நல்லுலகில் எக்குலத்தோருக்கும் இல்லாத உயர்வு இக்குலத்தோருக்கு இருப்பதைக் காட்டுகிறது.
  7. mamallan 
    #34

    ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்!
    பால. கௌதமன்First Published : 10 Oct 2011 01:35:58 AM IST
    Last Updated :
    ஆயுத பூசை இந்த ஆண்டும் வந்தது. வழக்கம்போல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வழக்கத்துக்கு மாறாக கருணாநிதி, சென்ற ஆண்டைப் போல, ஆரியர் திருவிழா என்று சொல்லவில்லை. திகார் திகிலில் சிக்கி இருப்பதால், சென்ற ஆண்டைப் போல திராவிட பல்கலைக்கழகத்தில் பாடம் படிக்க வேண்டும் என்று யாருக்கும் அறிவுரை வழங்கவில்லை.
    இவரின் கலைஞர் தொலைக்காட்சி விடுமுறை தின நிகழ்ச்சி என்று தன் சிறப்பு மசாலாக்களை ஒளிபரப்பியது.
    கருணாநிதி குடும்பத்தைப் பொறுத்தவரை திராவிட- ஆரியப் பித்தலாட்டம் எப்பவும் அரசியலுக்குத்தானே தவிர, குடும்ப நிறுவனங்களின் வியாபார ஆதாயத்துக்கு ஒரு நாளும் குறுக்கே நின்றது கிடையாது.
    தொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம். ஒரு மன்னனையும் அவன் அரசாட்சியையும் எப்படி புகழ்ந்து பாட வேண்டும் என்று இலக்கணம் வடித்துள்ளது. “”உளியின் ஓசை பாடல் அரங்கேற்றம், 50-ம் திரைப்பட கதை-வசனம், பெண் சிங்கம் வெற்றி விழா” போன்றவற்றை எல்லாம் புகழ்ந்து பாடுவதை பிழைப்பாகக் கொள்ளக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட இலக்கணம் தொல்காப்பியம். ஆனால், “”பூங்கா கண்ட நவீன தொல்காப்பியர் கருணாநிதி”யின் கண்ணில் படாத, தொன் பெரும் தொல்காப்பியத் திணைக்கு பாடான் திணை என்று பெயர். இதில், “”மானார்ச் சுட்டிய வாண்மங்கலமும்” (பொருள் அதிகாரம் – 91) என்று ஆயுத பூசை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    மானார் என்ற சொல்லுக்கு மாண்புடையவர், போர் பயிற்சி பெரும் மாணவர், வெற்றி பெற்றவர் என்றெல்லாம் உரையாசிரியர்கள் பொருள் படுத்துகிறார்கள். ஆனால் அனைவரும் ஒப்புக்கொள்வது, இவர்கள் போர்க் கலங்களை நீராட்டிப் பூசை செய்கிறார்கள் என்பதுதான். இதன் மூலம் ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டிய ஒன்று என்று முதல் தமிழ் நூல் குறிப்பிடுகிறது. இப்படி ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தொல்காப்பியம்.
    எதிரியின் கோட்டையை சுற்றி வளைத்து பிடிப்பதைப் பற்றிய விவரத்தைச் சொல்வது உழிஞை திணை. இதில், “”வென்ற வாளின் மண்ணோ டொன்ற” (பொருள் அதிகாரம் – 68) என்று வெற்றி பெற்ற வாளை அபிஷேகம் செய்யும் குறிப்பு உணர்த்தப்படுகிறது. “”உடன் படு மெய்” என்பதற்கு ஆசிரியரும் மாணவியும் இணைவதை உதாரணம் காட்டிய தொல்காப்பியப் பூங்கா எழுதி வக்கிரப் பார்வை பார்க்கும் கருணாநிதிக்கு ஆயுத பூசை எப்படிக் கண்ணில் படும்?
    சென்ற ஆண்டு (2010) ஜெயலலிதா ஆயுத பூசை வாழ்த்து தெரிவித்தவுடன், ஜெயலலிதாவை ஆரியர் என்றார் கருணாநிதி. அப்படி என்றால் ஆயுத பூசை கொண்டாடுபவர்களும் ஆரியர்கள்தானே? சங்க இலக்கியமான பதிற்றுப் பத்து, மள்ளர்கள் ஆயுத பூசை கொண்டாடியதை விவரிக்கிறது. ஆயுத பூசையைக் கொண்டாடிய பாவத்திற்காக மள்ளர்கள் ஆரியர்களாகி விடுவார்களா?
    “”றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
    றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
    போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த
    கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப”
    என்கிறது பதிற்றுப் பத்து (பாட்டு-66).
    மள்ளர்கள் கேடயத்தையும் பூ மாலைபோல் பல வாள்களைக் கட்டி தொங்க விட்டும், அவற்றை பனை நாரினால் தொடுத்த வாகைப் பூ மாலை இட்டும் வணங்கினர் என்ற செய்தியை இந்த பாடல் தெரிவிக்கிறது. இந்தக் குறிப்பின்படி, இந்த விழவு மழைக்காலத்தில் நடந்திருக்க வேண்டும். வாகை மரம் மழைக்காலங்களிலும் பூக்கும் என்று இந்திய தாவரங்களைப் பற்றிய நூலான ஊப்ர்ழ்ஹ ஐய்க்ண்ஸ்ரீஹ ர்ழ் ஈங்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ண்ர்ய்ள் ர்ச் ஐய்க்ண்ஹய் ல்ப்ஹய்ற்ள், யர்ப் 1 ஆஹ் ரண்ப்ப்ண்ஹம் தர்ஷ்க்ஷன்ழ்ஞ்ட், சஹற்ட்ஹய்ண்ங்ப் ரஹப்ப்ண்ஸ்ரீட் குறிப்பிடுகிறது.
    வாகை மலருக்கு வட மொழியில் “சீர்ஷா’ என்று பெயர். அளகாபுரி நகரில், பெண்கள் கடம்ப மலரை தலையிலும் செந்தாமரையைக் கைகளிலும் “சீர்ஷா’ என்ற வாகையைக் காதுகளிலும் அணிந்து கார் காலத்தில் அழகு பார்த்ததாக காளிதாசரின் “மேகதூதம்’ குறிப்பிடுகிறது.
    Flora Indica or Descriptions of Indian plants, Vol 1 By William Roxburgh, Nathaniel Wallich தமிழகத்தில், “வள்ளல்’ என்ற சொல்லைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர் அதியமான். இந்த அதியமானுக்கும், தொண்டைமான் என்ற மன்னனுக்கும் போர் மூளும் தறுவாயில், அப்போரைத் தடுக்க தமிழ் மூதாட்டி ஒüவையார் அதியமான் அரண்மனைக்குச் சென்றார். தொண்டைமானின் ஆயுதக் கொட்டிலில் போர்க் கலங்கள் நெய் பூசி, அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்ததைப் பார்த்து, தொண்டைமானிடம் அதியமான் அரண்மனையில் உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொல்லன் பட்டறையில் இருக்கிறது. ஆனால் இங்கோ பூசையில் வைக்கப்பட்டு இருக்கிறதே என்ற கேட்டதாக செய்தி ஒன்று காணப்படுகிறது. அரண்மனைக் கொட்டிலில் ஆயுதங்களுக்கு பூசை செய்யும் பழக்கம் புறநானூற்றுக் காலத்தில் இருந்த விவரம், முழுமையாகவும் முறையாகவும் சங்க இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும். பலருடைய உரைகளை ஒருங்கிணைத்து “சங்கத் தமிழ்’ என்று தனது பெயரில் வெளியிட்டு மகிழ்ந்தவர்களுக்கு எப்படித் தெரியும்?
    5-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் கருவூர் புகழ் சோழநாயனார். இந்த சோழ மன்னனின் பட்டத்து யானை, கோயிலுக்கு மலர் கொண்டு சென்ற பக்தன் சிவகாமி ஆண்டாரின் பூக்கூடையைத் தூக்கி எறிந்தது. இதைப் பார்த்த எரிபத்த நாயனார், பட்டத்து யானையையும் அதன் பாகனையும் வெட்டிச் சாய்த்தார் என்கிறது பெரிய புராணம்.
    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த பட்டத்து யானை புரட்டாசி நவமியன்று அபிஷேகம் செய்யப்பட்டு, அழைத்து வரப்பட்டது என்பதுதான். வாகனங்களை ஆயுத பூசை காலங்களில் அபிஷேகித்து, மரியாதை செய்வது 5-ம் நூற்றாண்டுத் தமிழர் மரபு. கி.பி. 897-ம் ஆண்டு திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயக் கல்வெட்டு, சித்ரா பௌர்ணமி மற்றும் புரட்டாசி ஓணத் திருவிழாக்கள், அபிஷேகத்துடன் கொண்டாடப்பட்டதாக
    “”சித்திரை திங்கள் சித்திரையும்
    பிரட்டாதி ஓணமும்” என்று தெரிவிக்கிறது. (South Indian Inscriptions, Vol 13, No 317, Archeological Survey of India) புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரம், வளர்பிறை தசமி திதியில் வரும். அதுவே விஜய தசமியாகக் கொண்டாடப்படுகிறது.
    விழுப்புரம் மாவட்டத்தில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையான் நறையூர் (இலவா நாசூர்) கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகளில், புரட்டாசி ஓணத் திருவிழா ஒரு பிரசித்தி பெற்ற பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட தகவல் காணப்படுகிறது. விஜய நகரப் பேரரசு கி.பி. 1336-ல் தோன்றியது என்பது ஓரளவு வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். இப்படி இருக்க, நாயக்கர்கள் ஆயுத பூசையைப் புகுத்தினார்கள் என்று சொல்வது கருணாநிதியின் அறியாமையா அல்லது வாடிக்கையான விஷ(ம)த்தனமா?
    தான் உய்யா விட்டாலும் கவலையில்லை. உலகத்தின் கடை நிலை மனிதன் உய்தால் போதும் என்று, சமூகத்தின் மிகவும் தாழ்த்தப்பட்டவனுக்கு இறை வழியைப் போதித்த இராமானுசரின் ஸ்ரீபெரும்புதூர் கோயில் கல்வெட்டில், நவராத்திரி கொலு கொண்டாடப்பட்டதற்கான குறிப்பு 16-ம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கியக் குறிப்புகளிலும் கல்வெட்டுக் குறிப்புகளிலும் இடம்பெறும் மள்ளர்களும் (தேவேந்திர குலத்தோர்), மன்னர்களும், புலவர்களும், புரவலர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் நம் மூதாதையர்களும் தமிழர்களில்லையா?
    அறிவாலயத்தால் அங்கீகரிக்கப்படுபவன் மட்டுமே தமிழன், கோபாலபுரத்தாருக்கு எடுக்கப்படுவதே விழா என்று பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று கருதுபவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது?
  8. ஆதி தமிழர் 
    #35

    இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்பு கொஞ்சம் வரலாற்றை படிங்க !!!
    இந்த இன சண்டை கடந்த 150 ஆண்டுகளுக்கு *முன்பு* இல்லை .
    எங்க ஊரு முதாட்டி ஒரு பழமொழி சொல்லுவாங்க ……
    ” மள்ளரும் மறவரும் ஒன்று ,
    சாணரும் சாம்பவரும் ஒன்று ,
    பள்ளு முத்துனா படைமாட்சி ,
    படைமாட்சி முத்துனா உடையாச்சி”….
    திராவிட இயக்கங்களே இந்த சண்டையை பெரிதாகின !!!
  9. ஆதி தமிழர் 
    #36

    நாயக்கர் ஆட்சியே இந்த சண்டையை தூண்டி விட்டன >
    அது இன்னும் தொடர்வதுக்கு காரணம் தமிழ்நாட்டை ஆளுவது நாயக்கனே ( கருணாநிதி ).
  10. moovendarmarabinar 
    #37

    திருநெல்வேலியின் ஆதிகுடியினர் பள்ளரே: பிசப் கால்டுவெல்
    ===================================================
    திருநெல்வேலியின் பழங்குடிகள் பற்றிப் பிசப் கால்டுவெல் தனது தென்பாண்டித் திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு என்ற நூலில் குறிப்பிடும் செய்திகள் வருமாறு:
    ” பிராமணர்கள் வடக்கில் இருந்து வந்தவர்கள் என்ற செய்தியில் சிறிதும் ஐயமில்லை. நாயக்கர்களும் மற்ற தெலுங்குச் சாதியினர்களும் வடக்கிலி இருந்து வந்தவர்களே என்பதிலும் ஐயமில்லை. பொதுவாக வேளாளர்கள் (பிள்ளை சாதியினர்) சோழ நாட்டிலிருந்தும், மறவர்கள் இராமநாதபுரத்தில் இருந்தும், சாணார்கள் இலங்கையில் இருந்தும் வந்தவர்கள் என்று கருதப் படுகிறது. ஆனால், பள்ளர்கள் நாட்டிற்குள் குடி வந்தவர்கள் என்ற செவிவழிக்கதை கூட எக்காலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும். நாம் இப்போது காணும் பல்வேறு சாதியினரையும், கூட்டத்தினரையும் குறிக்கும் குடியேற்ற மக்களின் கூட்டங்கள் வருவதற்கு முன்பே திருநெல்வேலிப் பகுதியில் பள்ளர்கள் இருந்தார்கலேனக் கொள்ளலாம்”
    பிசப் கால்டுவெல்
    தென்பாண்டி திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு
    மொழியாக்கம் பேரா.ந.சஞ்சீவி, பேரா.கிருட்டின சஞ்சீவி, பக். 5 -6
    October 22 at 2:00pm
  11. moovendarmarabinar 
    #38

    பள்ளர்களே பாண்டியர்கள் — நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு
    ========================================================
    “செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டு 1920 கலீல் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உருயதேன்ரும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட வளரார்று ஆவணங்கள், நிலா ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று ‘பள்ளர்கள் தான் பாண்டியர்கள்’ என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது.”
  12. moovendarmarabinar 
    #39

    மள்ளர் என்ற பள்ளர்கள், சோழர் ஆட்சி காலத்திலேயே ‘சோழன்’’ என்ற பெயர் கொண்டதற்கு கல்வெட்டு ஆதாரம்:
    1.கோயமுத்தூர்,பேரூர் பட்டீஸ்வரர் கோயில்கல்வெட்டு.. (தெ.க.5/240) பட்டீஸ்வரர் கோயிலுக்கு நந்தவனம் எற்படுத்திக் கொடுத்த குடும்பர்
    ‘தென்வழிநாட்டு ஏழூர் ஊராளி தென் குடும்பரில் சிங்கன் சோழனான அணுத்திரப்பல்லவரையன்’
    இங்கு குடும்பன் என்பது பள்ளரைக் குறிக்கும். அணுத்திரன் என்றால் தேவேந்திரன்.
    2.திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கல்வெட்டு (தெ.க.5/278) கோயிலுக்கு நிலம் கொடை அளித்தவர்” ‘குடும்பரில் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்கச் சோழ இருங்கோளர்’
    இதுபோன்று நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் மள்ளர் என்ற பள்ளர்களுக்கு உள்ளது. அதை வசதியாக மறைத்து விட்டார், இந்த நல்லவர்!
    இதுமட்டும் கிடையாது. இராசராச சோழன் மற்றும் இராசேந்திர சோழன் ஆட்சியின் போதுதான் அதாவது கி.பி 9 மற்றும் 10 நூற்றாண்டு காலத்தில்தான்
    ‘அருந்திரல் வீரர்க்கும்,பெருந்திரல் உழவர்க்கும்
    வருந்தகையதாக்கும் மள்ளர் எனும் பெயர்’ (திவாகர நிகண்டு)
    ‘செருமலை வீரரும்,திண்ணியோரும் மருதநில
    மக்களும் மள்ளர் என்ப” (பிங்கல நிகண்டு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக